எச்.ஐ.வி என்பது ஒரு வைரஸ் ஆகும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் உடலில் இது இலகுவாக தொற்றிக்கொள்ளும். HIV வைரஸ் தானே உற்பத்தியாவதோ வளர்வதோ இல்லை. இவை உயிரணுக்களை மீண்டும் மீண்டும் தாக்குவதன் மூலம் நோயை பரப்புகின்றன. மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது இயற்கையாகவே நச்சுப்பொருட்களை கண்டறிந்து வேகமாக அழிக்க கூடியது. ஆனால் HIV வைரசானது மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியை இல்லாதொழித்து தனது வீரியத்தை கூட்டக்கூடியது.

எயிட்ஸ் என்பது ஒரு மருத்துவ நிலைமையாகும். இது நோயெதிர்ப்பு சக்தி இயல்பாய் அமையப் பெறாதவர்களின் உடலை தாக்கும். மனிதனின் நோய் எதிர்பாற்றல் மிகவும் பலவீனமாக இருந்தால் எயிட்ஸ் மிக இலகுவாக தாக்கும்.

நோயெதிர்ப்பு அமைப்பானது வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்கள் உடலைக் காப்பாற்றும். இது வெண்குருதிச் சிறுதுணிக்கைகளினால் உருவானது. இதனை தொழில்நுட்ப ரீதியில் Leukocytes என்றும்  அழைப்பர். நம் குருதியில் அண்ணளவாக 2 விகிதம் வெண்குருதி சிறுதுணிக்கைகள் இருக்கின்றன. ஏனையவை ஈரல், மண்ணீரல், நிணநீர் சுரப்பிகள் போன்ற உறுப்புக்களில் பரவிக்கிடக்கின்றன.

எயிட்ஸ் HIV யினால் உருவாகிறது. HIV மனிதனின் நோயெதிர்ப்பாற்றலை அழித்து படிப்படியாக மனித உடலின் உயிரணுக்களை தாக்குவதன் மூலம் நோய்க்கு ஆளாக்குகிறது. HIV யானது வருடக்கணக்கில் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலை அழிப்பதன் மூலம் AIDS நோயை உருவாக்குகின்றது.

அதாவது ஒருவரின் நோயெதிர்ப்பு ஆற்றல் மிகவும் பலவீனமாக இருந்தால் அவர் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக கொள்ளலாம்.

ஒரு மனிதனிடம் எயிட்ஸ் நோய்த்தொற்று பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கப்படுமாயின் அது எயிட்ஸ் உடன் சம்பந்தப்பட்ட புற்றுநோயாக வளர்ச்சியடையக்கூடும். நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பாலியல் தொடர்பு இல்லாத ஒருவரின் உடலில் கூட எயிட்ஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்படலாம். நோய் எதிர்ப்பு அணுக்களை (Cells) பரிசோதிப்பதன் மூலம் AIDS ஐ கண்டுபிடிக்கலாம். HIV யினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குருதியிலுள்ள நோயெதிர்ப்பு அணுக்கள் (CD4Cell) குறிப்பிட்ட அளவை விட குறைவாக காணப்படும்.

எயிட்ஸ் நோயைக் குணமாக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது. இதுவரை எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி HIV பரவும் முறைகளை கண்டறிந்து அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே ஆகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக Retrovirals என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இதன் தீவிரத்தன்மை குறைவடைந்து, நோயாளியின் காப்பு நிலையை மீட்டெடுப்பதுடன் அதனை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால் இந்த மருந்துகள் HIV வைரஸ்களை முற்றாக அழிக்காது.

HIV யினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித மருந்துகளையும் பாவிக்காமல் இருந்தால்கூட, நோய்த்தொற்று ஏற்பட்டு கிட்டதட்ட 10 வருடங்களின் பின் எயிட்ஸ் உருவாகலாம். ஆனால் பல வித காரணங்களால் மனிதருக்கு மனிதர் இது வேறுபடும். HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகளை கொடுப்பதன் மூலமும், தொடர்புடைய காரணிகளை ஆராய்வதன் மூலமும் HIV நோய்த் தாக்கத்தைக் குறைக்கலாம்.

நோயெதிர்பு சிகிச்சை முறையானது HIV எயிட்ஸ் நோயாக உருவாகும் கால அளவை நீடிக்கின்றது. அதாவது நோய் பரவும் வேகத்தைக் குறைக்கின்றது.

HIV யினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித மருந்துகளையும் பாவிக்காமல் இருந்தால்கூட, நோய்த்தொற்று ஏற்பட்டு கிட்டதட்ட 10 வருடங்களின் பின் எயிட்ஸ் உருவாகலாம். ஆனால் பல வித காரணங்களால் மனிதருக்கு மனிதர் இது வேறுபடும். HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகளை கொடுப்பதன் மூலமும், தொடர்புடைய காரணிகளை ஆராய்வதன் மூலமும் HIV நோய்த் தாக்கத்தைக் குறைக்கலாம்.

நோயெதிர்பு சிகிச்சை முறையானது HIV எயிட்ஸ் நோயாக உருவாகும் கால அளவை நீடிக்கின்றது. அதாவது நோய் பரவும் வேகத்தைக் குறைக்கின்றது.

HIV யினால் மனித உடலின் வெளிப்புறத்தில் வாழ முடியாது. விதிவிலக்காக ஆய்வு கூட நிலையில் இருக்குமானால் இவைகளால் காற்றின் மூலம் பரவவோ, மனித உடலில் வெளியில் தொற்றை உருவாக்கவோ முடியாது.

இந்தப் பரிசோதனையானது நம் உடலில் உள்ள புரதச்சத்துக்களில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அளப்பதற்காக செய்யப்படுகிறது. HIV உடலினுள் தொற்றியதும் நம் உடலானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்கிறது. இது பரிசோதனையின் போது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது நோயெதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்வதற்கு சில காலம் எடுக்கலாம். இந்த கால எல்லை ஆளுக்கு ஆள் வேறுபடலாம். இந்த கால எல்லை பொதுவாக Window Period என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது பெரும்பாலானவர்களில் உடலில் உற்பத்தியாவதற்கு 2 - 8 கிழமைகள் வரை எடுக்கும். (சராசரி 25 நாட்கள்) ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு இது உற்பத்தியாவதற்கு நீண்ட காலம் எடுக்கும். எனவே குறிப்பிட்ட HIV எதிர்மறை பரிசோதனை 3 மாதங்களுக்கிடையில் செய்யப்படும். அதன் சரியான பெறுபேறுகளை கண்டறிவதற்காக மீண்டும் 3 மாதங்களின் பின் இந்தப் பரிசோதனை செய்யப்படும். 97 சதவீதமானவர்களுக்கு நோய் ஏற்பட்ட காலத்திலிருந்து முதல் 3 மாதங்களுக்குள் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியாவதில் முன்னேற்றம் காணப்படும். ஆனால் மிக அரிதாக ஒரு சிலருக்கு HIV க்கு எதிரான இந்த நோயெதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகி வளர்வதற்கு 6 மாதங்கள் வரை எடுக்கும்.

உங்கள் வைத்தியர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பேரில் எந்தவொரு STD கிளினிக் அல்லது தனியார் ஆய்வு கூடத்திலோ இந்த பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ளலாம். HIV பரிசோதனையை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனிப்பட்டதும் நம்பிக்கையானதுமான கலந்துரையாடலை விசேட வைத்திய அதிகாரியுடன் மேற்கொள்ள வேண்டும். இந்த கலந்துரையாடலானது உங்களுக்கு நோய் சம்பந்தமான சிறந்த பெறுபேறுகளை அடைய உதவும். STD கிளினிக்கில் உள்ள பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் உங்களுக்கு பரிசோதனை சம்பந்தமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

எமது நாட்டைப் பொறுத்தவரை சுகதேகியான ஒருவர் HIV வைரஸ் தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொள்வதன் மூலம் அவருக்கு நோய் தொற்றுகிறது. HIV யானது தாயிடமிருந்து பிள்ளைக்கும் பரவுகிறது. அதாவது வைரஸ் தொற்றுள்ள ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பதாலும் பிரசவித்தபின் அதற்கு பாலூட்டுவதாலும் வைரஸ் தொற்று அந்த குழந்தைக்கும் ஏற்படுகின்றது. அத்துடன் வைரஸ் தொற்றுள்ளவரின் குருதிப் பரிமாற்றம், விந்தணு தானம் (செயற்கை கருத்தரிப்புக்கு) செய்வதுனுடாகவும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிக்சைகள் போன்றவற்றாலும் இந்நோய் பரவுகிறது. HIV தொற்றுள்ள ஒருவருக்கு பாவித்த ஊசியை, சரியாக தொற்று நீக்காமல் இன்னொருவருக்கு பாவிப்பதனூடாகவும் இந்த வைரஸ் பரவுகிறது.

முத்தமிடுவதால் HIV பரவாது. கன்னத்தில் முத்தமிடுவது ஒரு பாதுகாப்பான முறை. அதேவேளை மற்றவருக்கு நோய்த்தொற்று இருந்தாலும் உங்களின் சேதமடையாத தோல் உங்களை பாதுகாக்கிறது. சாதாரண முத்தம் மூலமாகவும் கட்டித் தழுவுதல், கை குழுக்குதல் போன்றவற்றால் இந்நோய் பரவ வாய்ப்பில்லை. உதட்டோடு உதடுசேர்த்து முத்தமிடும்போது வாய் அல்லது உதடு காயமடையக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். அதன்போது HIV வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் நோய்க்கிருமிகள் வாயிலுள்ள காயம் அல்லது புண் ஊடாக மற்றவரின் உடலுக்குள் உட்புகும் சாத்தியக்கூறுகள் உண்டாகலாம்.

HIV வைரஸானது பிரதானமாக இரத்தப் பரிமாற்றம் மற்றும் விந்தணுப் பரிமாற்றம் மூலமாகவே பரவுகிறது. ஒருவருடன் வாய் மூலம் பாலியல் தொடர்பு கொள்ளும்போது அவரின் வாயில் புண் இருந்தால் அதிலிருந்து கசியும் இரத்தம் அல்லது பிறப்புறுப்பில் புண் இருந்தால் அதனால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றால் தொண்டையில் அழற்சி ஏற்பட்டு, தொண்டைப்புண் உருவாகி அதன் மூலம் HIV வைரஸ் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றது.

HIV வியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் தன்னுடைய சிசுவை பிரசவிக்கும் பொழுதோ அல்லது அதற்கு பாலூட்டும் பொழுதோ அக்குழந்தைக்கும் HIV கிருமிகள் பரவலாம். குறிப்பிட்ட பெண் HIV தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை முன்னமே அறிந்திருப்பாராயின், தேவையான மருந்துகளைப் பாவிப்பதன் மூலம்  தன் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படுவதை பெரும்பாலும் தடுக்க முடியும். அதனை தடுப்பதற்கான இன்னொரு முறை என்னவென்றால் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிப்பதும் அதற்குத் தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்த்துக் கொள்வதுமாகும். இன்றைய காலகட்டத்தில் சாதாரண பெண் ஒருவர் குழந்தையொன்றை பிரசவிக்கும்போது அக்குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் ஊட்டும் படி ஊக்கப்படுத்தபடுவதுடன், புட்டிப்பால் ஊட்டுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் அப்பெண்ணுக்கு நோய் பீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன. அத்தோடு பாலூட்டுவதால் ஏற்படும் தொற்று நிலைமைகளும் குறைகின்றன.

முடிவெட்டும்போது காயம் ஏற்பட்டு அதனூடாக நோய்த்தொற்றுக் காரணிகள் உடலுக்குள் செல்லாதவரை பிரச்சினையில்லை. தற்பொழுது சலூன்களில் முடிவெட்டும்போது அல்லது சவரம் செய்யும்போது பாவித்துவிட்டு வீசும் பிளேட்களே (Blade) பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றன. இது ஒருவருக்கு மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இதனால் Hepatitis-B, HIV போன்ற நோய்க்கிருமிகள் இரத்தத்துடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறலாம்.

தொற்று நோய்க்கு ஆளான ஒருவரின் இரத்தத்தினால் மாசுப்படுத்தப்பட்ட உபகரணங்களை தொற்று நீக்காமல் வேறொருவரின் உடம்பில் பயன்படுத்துவதன் மூலம் HIV தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எவ்வாறாயினும் மக்கள் தங்கள் உடம்பில் குத்திக்கொள்வதற்கும், பச்சைக்குத்துவதற்கும் சர்வதேச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி உபகரணங்களை பாவிப்பது நல்லது. ஏனெனில் இவைகள் இரத்தம் மூலம் Hepatitis-B மற்றும் HIV போன்ற தொற்றுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

HIV க்கும் ஏனைய பால்வினை நோய்களுக்கும் இடையில் மோதல் நிலை உள்ளது. HIV நோய் தொற்று உள்ள ஒருவர் வேறு வகையான பால்வினை நோய் உள்ள ஒருவருக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பலாம். இதன் விளைவாக பிறப்புறுப்பில் புண் ஏற்பட்டு சீழ் வடிவதுடன் வீக்கத்துடன் நீர்கசிவும் உண்டாகும். HIV தொற்று இல்லாத, வேறு வகை பாலியல் நோய் உள்ள ஒருவர் பாலியல் உறவு கொள்வதன் மூலம் HIV தொற்றுக்கு ஆளாகலாம். அவரிடத்தில் காயமோ புண்ணோ ஏற்பட்டிருந்தால் கீழ் கண்ட நோய்கள் பரவலாம். Syphillis அத்துடன் பிறப்புறுப்பில் புண் போன்றவை தோன்றியிருந்தாலும் கீழ்க் கண்ட நோய் ஏற்படுகிறது. Cylamydia or Gonorrhea பிறப்புறுப்பில் புண் இருக்குமிடத்து HIV மிக இலகுவாக ஊடுறுவும். பாதுகாப்பற்ற உடலுறவின்போது ஆணுறைகளை பாவிப்பதன் ஊடாக HIV உட்பட பாலியல் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நிச்சயமாக முடியும். HIV தாக்கத்தின் ஆரம்பக்கட்டத்தில் HIV வைரஸ் உடலுக்குள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தாலும் எந்தவித நோய் அறிகுறியையும் வெளியில் காட்டாது. இதனால் நோய்த் தொற்றுக்கு ஆளானவர் தன்னுடைய HIV வைரஸ்களை இன்னொருவருக்கு பரப்ப முடியும். HIV யினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. HIV வைரஸ் தொற்றுள்ள ஒருவர் உடலுறவின்போது திடகாத்திரமாகவும், உற்சாகமாகவும் நடந்து கொள்வராயின் அவரிடம் HIV வைரஸ் காவிகள் இருப்பதாக யாரும் சந்தேகப்படமாட்டார்கள்.

FaLang translation system by Faboba