விளையாட்டின்போது ஏற்படும் காயங்கள்: கேம் முடிந்துவிட்டதா - இல்லையா?

கல்வியைப் போலவே விளையாட்டும் வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயமாகும். உங்கள் உடல் தோற்றத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். எவ்வாறாயினும் நீங்கள் கவனமாக இருக்காவிட்டால் உடனடியாகவோ அல்லது ஒரு காலத்திற்கு பின்னரோ உங்கள் உடலில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்க இந்த விளையாட்டு காரணமாக அமையலாம். விளையாட்டை உரிய முறையில், விதி முறைகளின் படி விளையாடுவது முக்கியமானதாகும். நீங்கள் விளையாடும் விளையாட்டின் விதிமுறைகளை தெரிந்துகொள்வதும் சரியான உபகரணங்களைக் கொண்டு விளையாடுவதும் காயங்களின்றி நீண்ட காலம் விளையாட வழிவகுக்கும்.

விளையாட்டின் போது காயங்கள் ஏற்பட மிகப் பொதுவான காரணங்களாவன:

  • சரியான பயிற்சியின்மையும், சரியாக விளையாடாமையும்
  • அளவுக்கு அதிகமான பயிற்சி
  • சரியான பாதணிகளை அணியாமை
  • சரியான பாதுகாப்பு சாதனங்களை அணியாமை
  • பூப்படையும் காலத்தில் ஏற்படும் துரித வளர்ச்சி

விளையாட்டின்போது இரண்டு வகையான காயங்கள் ஏற்படலாம்:

  1. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான காயங்கள்: எலும்பு முறிவு வடிவிலான காயங்கள், சுளுக்கு, திரிபு, பேரதிர்ச்சி மற்றும் வெட்டுக் காயங்களாகும். அவை வழக்கமாக அடிபட்ட பின்னரோ அல்லது பலவந்தமாகவோ ஏற்படலாம். ரக்பி விளையாட்டின்போது தடுக்கப்படுதல் அல்லது கிரிக்கட் பந்து ஒன்றினால் தாக்கப்படுவது போன்ற காரணங்களாலும் இத்தகைய காயங்கள் ஏற்படலாம்.
  2. மிகைப் பயன்பாட்டுக் காயங்கள்: இந்த காயங்கள் மன அழுத்தப் பாதிப்புகள் மற்றும் தசை நாண் அழட்சி வடிவில் ஏற்படுகின்றன. இவ்வகைக் காயங்கள் நாட்பட்ட காயங்களெனவும் அழைக்கப்படும். ஏனெனில் இவை காலப் போக்கில் ஏற்படுகின்றமையால். வழக்கமாக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தல், ஓடுதல், தலைக்கு மேல் வீசுதல் அல்லது டென்னிஸ் பந்தை அடித்தல் போன்ற தொடர்ந்து செய்யும் செயற்பாடுகளினால் ஏற்படுகின்றன. மிகைப் பயன்பாட்டு காயங்கள், கடுமையான காயங்களைப் போலவே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் ஆரம்பத்தில் அவை கடுமையாகத் தெரிவதில்லை. அவற்றுக்கு சரியாக சிகிச்சையளிக்காவிடின், அவை மோசமாகக்கூடும்.

நீங்கள் காயப்பட்டுவிட்டதாக நினைப்பீர்களாயின் உடனடியாக விளையாட்டை அல்லது பயிற்சியை நிறுத்திவிட்டு வெளியில் வந்துவிடுங்கள். பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவ உதவியை நாடுங்கள்:

  • மிகவும் மோசமாக வலி ஏற்படுதல்.
  • சுறுசுறுப்பாக இருக்கும்போது வலி அதிகமாதல்.
  • காயம் ஏற்பட்ட பகுதி வீங்கியிருத்தல்.
  • நீங்கள் நொண்டுவீர்களாயின்,
  • உங்கள் இயலுமை குறைவடையுமாயின்,
  • வலி சிறிது நேரத்திற்கு தொடருமாயின்,
  • காயமொன்று ஏற்பட்டபின் வலி சிறிது நேரத்திற்கு தொடருமாயின், நேரம் ஆக ஆக வலி மோசமாகுமாயின், அல்லது ஒரு வாரத்திற்கு வலி தொடருமாயின்.

மீண்டும் விளையாட ஆரம்பித்தல்

விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தின் பின்னர் நிச்சயமாக உங்களிடம் இருக்கும் முதல் கேள்வி "நான் எப்பொழுது மீண்டும் விளையாடலாம்?" என்பதாகத்தான் இருக்கும். இது காயத்தைப் பொறுத்தும் வைத்தியர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்தும் தான் தீர்மானிக்கப்படும். ஒருவேளை உங்களால் மீண்டும் விளையாட முடியாது போனால், நீங்கள் எவ்வாறு சக்தியைப் பேணிக்கொள்வது என்பது பற்றி ஒரு வைத்தியர் அல்லது பிசியோதெரபிஸ்ட் வழங்கும் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். காயமொன்று ஏற்பட்டதன் பின்னர் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடுவதற்கு முன்னர் உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்துச் செய்வது சிறந்தது.

புனர்வாழ்வுத் திட்டங்களாலும் நீங்கள் விரைவில் குணமாகி உடல் தகுதியை மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும். புனர்வாழ்வு சிகிச்சை முறையின் ஒரு அங்கமாக உடற்பயிற்சி,  பிசிகல் தெரபிஸ்ட் ஒருவரின் நேரடி சிகிச்சை, மெனுவல் சிகிச்சை மற்றும் அல்ட்ரா சவுன்ட் சிகிச்சை மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் என்பவற்றை மேற்கொண்டு வலியை குறைக்கவும், சிகிச்சை முறையை ஊக்கவிக்கவும் உதவ முடியும்.

நீங்கள் குணமாகியவுடன், உங்கள் காயமடைந்த பாகத்தை பாதுகாக்க, பாதுகாப்பு உபகரணம் ஒன்றை பயன்படுத்தவேண்டும். இவற்றில் பாதணியை மாற்றியமைத்தல், டேப்பின் மூலம் மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுதல், நேரடி தாக்குதலொன்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பேட்  (Pad)  ஒன்றை பாவித்தல் போன்ற முறைகள் அடங்கும்.

பயிற்சி செய்யும்போதும், விளையாடும்போதும் மீண்டும் காயமடையாமல் இருக்க, வோர்ம் அப் செய்துகொள்ளவேண்டும். மீண்டும் விளையாட ஆரம்பித்த பின் சற்று மெதுவாக உங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும், காயத்திற்கு முன்னரான நிலைமைக்கு வருவதற்கு படிப்படியாக செயற்பாடுகளை அதிகரிக்கவும்.

முக்கியமாக உங்கள் எல்லையை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். பயிற்சியின்போது முன்னர் காயப்பட்டிருந்த பகுதி (அல்லது எந்தவொரு உறுப்பும்) வலிக்கத் தொடங்குமாயின் உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கவும். வலி தொடருமாயின் வைத்தியரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் காயங்கள்

கடுமையான தலை மற்றும் கழுத்துக் காயங்கள் பெரும்பாலும் உதைப்பந்தாட்டம் அல்லது ரக்பி, அல்லது ஜிம்னாஸ்டிக் செய்யும் பொழுது விழுந்து காயமடைவதால் ஏற்படுகின்றன.

  • தலைக் காயங்கள்

இக்காயங்களில் முறிவுகள், தாக்குதல்கள், நசுங்குதல்கள் (காயங்கள்) மற்றும் இரத்தக்கட்டி ஆகியவை அடங்கும். இரத்தக்கட்டி என்பது இரத்தக்கசிவு அல்லது மூளையைச் சுற்றி இரத்தம் தேங்குவதே ஆகும். விழுவதால் தலையில் ஏற்படும் பலத்த தாக்குதல், தலையில் ஏற்படும் பலத்த அதிர்ச்சி அல்லது தாக்குதல் காரணமாக இவை ஏற்படுகின்றன.

  • கழுத்துக் காயங்கள்

இக்காயங்களில் தலையில் ஏற்படும் திடீர் அசைவால் ஏற்படும் சுளுக்குகள், முறிவுகள், எரிவுகள் போன்றவை அடங்கும். மிகவும் ஆபத்தான விளையாட்டுக் காயங்களில் கழுத்துக் காயமும் ஒன்றாகும்.

ஒருபோதும் கழுத்து முறிவு ஏற்பட்டுள்ள ஒருவரை அசைக்க முயலாதீர்கள்! ஒரு பிழையான வழிநடத்தலால் நிரந்தர பக்கவாதம் அல்லது மரணம்கூட ஏற்படலாம். எனவே காயம் ஏற்பட்ட ஒருவரை மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவரின் தலையை நேராகவே பிடித்துக்கொள்ளுங்கள். தரையில் கிடக்கும் நபரை வேறு இடங்களுக்கு நகர்த்த முயலாதீர்கள்.

முதுகுக் காயம்

பெரும்பாலான முதுகுக் காயங்கள் முறுக்குப்படுவதால் அல்லது அதிகமாக முதுகை வளைக்கும் போதும் அல்லது பாரம் தூக்கும்போதும் ஏற்படுகின்றன. முதுகுக் காயங்கள் பெரும்பாலும் உதைபந்தாட்டம், ரக்பி, பளு தூக்குதல், கொல்ஃப், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்கள் மற்றும் நடனம் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

பாலியல் உறுப்புக் காயங்கள்

பாலியல் உறுப்புக் காயங்கள் வழக்கமாக பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம்      ஏற்படுகின்றது. ஆண்குறி மற்றும் விந்தகங்கள் (விதைகள்) என்பன உடலுக்கு வெளியில் இருப்பதே இதற்குக் காரணமாகும். சூல் மற்றும் கர்ப்பப்பை காயங்கள் ஏற்படுவது மிகவும் அரிது. பெண்களிடம் இருந்து மார்பக காயங்கள் பற்றிய முறைப்பாடுகளே பெரும்பாலும் வருகின்றன. மார்பகம் வளர்ச்சியடையும்போது அடிக்கடி மார்பகத்தில் புண் ஏற்படுதல், மென்பந்துகளால் அடிபடுதல், ஹொக்கி விளையாடும்போது ஏற்படும் வலிமிகுந்த மோதல்கள் போன்றவை காரணங்களாக அமையலாம்.

கை மற்றும் மணிக்கட்டுக் காயங்கள்

கை, விரல் மற்றும் மணிக்கட்டுக் காயங்கள் என்பன பெரும்பாலும் விழுவதால் அல்லது நேரடித் தாக்குதலால் ஏற்படுகின்றன. ஏனைய காயங்களில் கை மற்றும் மணிக்கட்டு காயங்கள் பொதுவாக உதைப்பந்தாட்டம் மற்றும் ரக்பி அல்லது கிரிக்கட்,  ஜிம்னாஸ்டிக், ஹொக்கி, படகோட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படுகின்றது. கூடைப்பந்து விளையாடுவதால் விரல்கள், கைகள், மணிக்கட்டுகள் ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கால் மற்றும் கணுக்கால் காயங்கள்

பாதங்கள் மற்றும் கணுக்கால் என்பன பெரும்பாலும் காயங்களுக்கு உள்ளாகின்றன. பாதங்களில் காயம் ஏற்பட மற்றுமொரு காரணம் பிழையான பாதணிகளை, விசேடமாக மட்டமான அடி, அதிக வளைவுகள் அல்லது உங்கள் பாதங்களுக்கப் பொருத்தமற்ற பாதணிகளை அணிவதே, காரணமாகும்.

நீங்கள் ஒரு ஓட்ட வீரராயின் உங்களுக்கு குதிக்கால் தசைநாண் அலட்சி பொதுவாக ஏற்படும் ஒரு காயமாகும், அத்துடன் கூடைப்பந்தாட்டக்காரர்கள், நடனமாடுபவர்கள் மற்றும் தங்கள் பாதங்களுக்கு அதிக அளவில் அழுத்தங்கள் கொடுப்பவர்களுக்கும் இது ஏற்படும். இது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.

குதிக்கால் தசைநாண் அலட்சி ஏற்படும் காரணங்கள்

குதிக்கால் தசைநாண் அலட்சி பெரும்பாலும் மீண்டும் மீண்டும் தசை நாண்களுக்கு அழுத்தம் கொடுப்பதால் ஏற்படுகின்றது. எவ்வாறாயினும் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்களுக்கு அவர்கள் பாதங்களுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுப்பதாலும் இப்பிரச்சினை ஏற்படுகின்றது.

குதிக்கால் தசைநாண் அலட்சி ஏற்படக்கூடிய ஏனைய காரணங்கள்

  • அதிகரித்த செயற்பாடுகள். நீண்ட காலம் செயற்படாதிருந்தபின் பல மைல்கள் தூரத்திற்கு அல்லது மலைகளில் வழமைபோல் ஜாக்கிங் செய்தல் என்பன குதிக்கால் தசைநாண் அலட்சி ஏற்படக்கூடிய இரண்டு உதாரணங்களாகும்.
  • டென்னிஸ் அல்லது கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களை திடீரென ஆரம்பித்து திடீரென நிறுத்துதல்.
  • சப்பாத்தில் மாற்றம், அல்லது மோசமாக பொறுத்தப்பட்டுள்ள பழைய சப்பாத்துக்கள், பழுதடைந்த சப்பாத்துக்கள் போன்றவை கால்களுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தசைநாண் அலட்சியையும் ஏற்படுத்தும். அத்துடன் குதி உயரமான சப்பாத்துக்களை அணிவதும் தசைநாண் மற்றும் தசைகள் குறுகுவதற்கு காரணமாக அமைகின்றது. தட்டையான சப்பாத்துக்களை அணிந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் குதிக்கால்களுக்கு மேலதிக சிரமத்தைக் கொடுக்கும். 
  • மலைகளில் ஏறுவது. மலைகளில் ஏறுவதால் குதிக்கால் தசைநாண்கள் இழுபட்டு அதன் சாதாரண எல்லையை தாண்டி விடுதல்.
  • பலவீனமான தசைகள், மட்டமான வளைவுகள், "overpronation" (ஓடும்போது பாதங்கள் உள்நோக்கி உருளுதல்), அல்லது "overpronation" (ஓடும்போது பாதங்கள் வெளிநோக்கி உருளுதல்) ஓடும்போது பாதங்கள் உள்நோக்கி உருளுதல் மற்றும் வெளிநோக்கி உருளுதல் ஆகிய காரணங்களால் கால்களின் கீழ்ப்பகுதி சுழலுவதால் தசைநாண்களுக்கு திருகல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
  • ஊக்குவிப்பு உடற்பயிற்சி செய்யாது (Warm up), உடனடியாக வேகமாக உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பிப்பதால் தசைகள் உங்கள் நகர்வுக்கேற்றவாறு வளைந்துகொடுக்காமை தசைநார்களுக்கு மேலதிக திரிபை ஏற்படுத்தும்.
  • சீரற்ற பரப்புக்களில் தேவையான பயிற்சியின்றி உடற்பயிற்சி செய்தல்
  • குதிகால் தசைநார்களில் அதிர்ச்சிகரமான காயங்கள் ஏற்படுதல்.

குதிக்கால் தசைநாண் அலட்சிக்கான அறிகுறிகள்

பலசந்தர்ப்பங்களில் குதிக்கால் தசைநாண் அலட்சி மெதுவாகவே ஆரம்பிப்பதுடன் வலி குறைவானதாக இருக்கும். ஆனால் போகப்போக வலி மோசமாகிவிடும்.

இதன் பொதுவான சில அறிகுறிகள் பின்வருமாறு:

  • குதிக்கால் மற்றும் காலின் கீழ் பகுதியின் மேலாக இலேசான வலி, குறிப்பாக ஓடியபின் அல்லது வேறு உடற் பயிற்சிகளில் ஈடுபட்டபின்.
  • மலைகளில் ஏறும்போது, படிகளில் ஏறும்போது, தீவிர அல்லது நீண்ட உடற்பயிற்சியின் பின்னர் மோசமான வலி ஏற்படுதல்.
  • விசேடமாக காலை நேரங்களில் கால்களில் மென்மை அல்லது விறைப்பு ஏற்பட்டு படிப்படியாக விலகிவிடுதல்.
  • தசை நாண்களின் திசுக்களில் வீக்கம் அல்லது கடின முடிச்சுகள் ஏற்படுதல்.
  • கணுக்கால்களை நகர்த்தும்போது அல்லது தசைநாண்களை அழுத்தும்போது சத்தம் ஏற்படுதல்.
  • பாதிக்கப்பட்ட கால்களின் பலவீனம்.

தசைநாண் அலட்சியை தவிர்த்தல்

பின்வரும் வழிமுறைகள் தசைநார் அலட்சியை குறைக்க வழிவகுக்கும்.

  • வருடம் முழுவதும் சரியான முறையில் உட்காருவது உங்கள் தசையை பலமானதாக்கும். பலமான, வளைந்துகொடுக்கக்கூடிய தசைகள் திறமையாக இயங்குவதுடன் தசைநாண்களின் அழுத்தத்தையும் குறைக்கும்.
  • படிப்படியாக உங்கள் உடற்பயிற்சியின் நேரத்தையும், வேகத்தையும் அதிகரித்தல். குறிப்பாக நீங்கள் சிறிது காலம் உடற்பயிற்சி செய்யாதிருந்தால் அல்லது நீங்கள் விளையாட்டுக்கு புதிதாக இருந்தால் இது அவசியமாகும்.
  • எப்போதும் நீங்கள் விளையாடுவதற்கு அல்லது ஓடுவதற்கு முன்னர் உடலை தயார்படுத்துவது (Warm up) மிக முக்கியம். ஏனெனில் உங்கள் தசைகள் இறுகியிருப்பின்,  அதை சரிசெய்ய உங்கள் தசை நாண்கள் கடினமாக தொழிற்புரிய வேண்டியிருக்கும்.
  • தசைகளைத் தளர்த்துதல் உங்கள் கால்களை விசேடமாக உங்கள் காவ்ஸ், ஹெம்ஸ்டிரிங்ஸ் குவாட்ரிசெப்ஸ் (calves, hamstrings, quadriceps) ஆகிய தசைகளை மற்றும் தொடைகளை நீட்டித் தசைகளைத் தளர்த்துங்கள் - இத்தசைகள் நீங்கள் ஓடும்போது உங்கள் முழங்கால்களை உறுதிப்படுத்த உதவுகின்றது.
  • உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் விளையாட்டுக்கு ஏற்ற சப்பாத்துக்களைப் பாவியுங்கள். நீங்கள் ஒரு ஜொக்கிங் செய்பவராக இருப்பின் அல்லது ஓடுபவராக இருப்பின், விசேடமாக ஓட்டப் பயிற்சிக்கான உபகரணங்கள் விற்கும் கடைக்குச் சென்று உங்கள் கால்களுக்குப் பொருத்தமானதும், ஓட்டத்திற்கு உதவக்கூடியதுமான சப்பாத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உபயோகித்து முடிந்த பழைய சப்பாத்துக்களை ஒதுக்கி விடுங்கள்.
  • புற்தரை, செயற்கைத் தடங்கள் போன்ற மென்மையான தரைப்பகுதியில் ஓடுங்கள். கடினமான கொங்கிரீட் அல்லது நிலக்கீழ் தரைப்பகுதிகள் மூட்டுக்களுக்கு மேலதிக அழுத்தத்தை கொடுக்கும். முடிந்தவரை மலைமேட்டில் மேலும் கீழும் ஓடுவதை தவிருங்கள்.
  • வழக்கமான உடற்பயிற்சியை மாற்றுதல். உங்கள் ஒட்டுமொத்த சிறந்த உடல் வடிவத்தை பேணிக்கொள்ள பல்வேறு உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்வதன் மூலம் உங்கள் உடலிலுள்ள எல்லாத் தசைகளுக்கும் பயிற்சியளிக்கக்கூடியதாக இருக்கும்.
  • உங்களுக்கு தசைநாண் அலட்சிக்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுமாயின் அல்லது உங்கள் கால்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக ஏதாவது செய்வீர்களாயின் அதனை உடனடியாக நிறுத்திவிடுங்கள். வலி குறையும் வரை பொருத்திருப்பதுடன், நீங்கள் மீண்டும் அப் பயிற்சியை அல்லது செயற்பாட்டைச் செய்யுமுன் வைத்திய ஆலோசனையைப் பெறுவது நல்லது.

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுளுக்குக் காயங்கள் ஏற்படுவது வளரிளம் பருவத்தினரிடையே மிகவும் பொதுவானதாகும். கணுக்காலுக்கு ஆதாரமாக இருக்கும் தசைநார்கள் இழுபடும்போது அல்லது கிழிபடும்போதுதான் இது நடக்கின்றது. கணுக்கால்களில் சுளுக்கு ஏற்பட குழிகளில் கால் வைத்தல், கீழ்நோக்கி வழுக்குதல் அல்லது பண்பற்ற முறையில் உங்கள் எடையை கால்களுக்கு சுமத்துதல் போன்றவை காரணமாக அமையலாம்.

கணுக்கால் சுளுக்கு ஏற்படும் காரணங்கள்

பெரும்பாலான கணுக்கால் சுளுக்குகள் வேகமாக நீங்கள் திரும்பும்போதோ, முறுக்குப்படும்போதோ ஏற்படுகின்றது. அத்துடன் கால்கள் ஒரு பக்கத்திற்கு உருட்டுப்படும்போது, கணுக்கால் மற்றும் கால் எலும்பை இணைக்கும் தசைநாண்கள் காயமடைந்து சுளுக்குகள் ஏற்படுகின்றன. உங்கள் கணுக்கால் காயமடைய நீங்கள் கடுமையாக விளையாடவேண்டியதில்லை: முறையற்ற விதத்தில் காலடியொன்றை வைத்தாலும், படியில் இருந்து கால் இடறினாலும் சுளுக்கு ஏற்படலாம்.

மிகவும் பொதுவான கணுக்கால் சுளுக்குகளாக தலைகீழ் சுளுக்கு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் தசைநார் சுளுக்கு என்பனவற்றைக் குறிப்பிடலாம். உதாரணத்திற்கு, கணுக்கால் உள்பக்கமாகத் திரும்பினால், வெளிக்கணுக்காலின் தசைநார்கள் இழுபடுவதுடன் சேதமாகும் சாத்தியமும் உள்ளது.

நீங்கள் திரும்பும்போது உங்கள் கணுக்கால் மற்ற பக்கத்திற்கு திரும்புகிறது, எனவே உள்ளங்கால் வெளிப்பகுதியை நோக்கி இருக்கிறது. இதை உள்நோக்கிய தசைநார் சுளுக்கு என அழைக்கப்படும். இதனால் கணுக்காலின் உட்பகுதி தசைநார்கள் காயமடைகின்றன. உள்நோக்கிய தசைநார் சுளுக்கு மிக அரிதாகவே ஏற்படும். உங்களுக்கு 4 - 6 வாரங்களுக்கு தொடர்ந்து அதே கணுக்காலில் மீண்டும் மீண்டும் சுளுக்கு ஏற்படின் அல்லது வலி ஏற்படுமாயின், உங்களுக்கு ஏற்பட்டுள்ளது நாட்பட்ட சுளுக்கு என அழைக்கப்டும்.

இந்த நாட்பட்ட சுளுக்கு நடனமாடுதல், ஓடுதல் அல்லது விளையாடுதல் போன்ற, கால்களை உருட்டும் அல்லது முறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும்போது ஏற்படுவதுடன் மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

கணுக்கால் சுளுக்கை தவிர்த்தல்

கணுக்கால் சுளுக்கை தவிர்ப்பது சாத்தியமற்றது. ஆனால் நீங்கள் சுளுக்கு ஆபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் கணுக்காலை நெகிழ்வுத்தன்மையுடனும் கால் தசையை வலுவாக வைத்துக்கொள்வதுமே சிறந்த வழியாகும். அதற்காக உங்கள் பயிற்றுவிப்பாளர், வைத்தியர் அல்லது விளையாட்டுப் பாட ஆசிரியர் (PE) உங்களுக்கு தசை வலிமையை (தசைநார்களை பாதுகாக்க) மற்றும் மூட்டு நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளை சொல்லித்தருவார்.

உங்களுக்கு கணுக்கால் சுளுக்கு வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கு:
  • எப்பொழுதும் விளையாடுவதற்கு முன்னரும், உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன்னரும், ஏனைய உடற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னரும் உடலை ஊக்குவிக்கும் உடற்பயிற்சி செய்வதுடன் (Warm up) உங்கள் கணுக்கால்களின் நீட்சிக்காக பரிந்துரைக்கப்பட்ட தொழிநுட்பங்களையும் பயன்படுத்துவது சிறந்தது.
  • சீரற்ற அல்லது வெடித்த தரைபகுதிகளில் நீங்கள் ஓடும்போதும் நடக்கும்போதும் கவனமாக இருங்கள்.
  • அளவுக்கு அதிகமாக எதையும் செய்யாதீர்கள். நீங்கள் களைப்படைந்து இருக்கும் போதும் அல்லது சோர்ந்திருக்கும்போதும் உங்களுக்கு காயம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. மெதுவாக நீங்கள் செய்யும் பயிற்சியை நிறுத்துங்கள், அல்லது நீங்கள் களைப்படைந்திருக்கும்போது உங்கள் அடிகளை மிகவும் கவனமாக வையுங்கள்.
  • உங்களுக்கு ஏற்கனவே கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டிருப்பின் அது முற்றிலும் குணமாகி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எப்பொழுதும் நீங்கள் கடுமையான உடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னர் இதைச் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கணுக்கால் சுளுக்கு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பின் டேப், கணுக்கால் பிரேஸ் அல்லது ஹை டொப் சப்பாத்துக்களைப் பாவியுங்கள்.
  • நல்ல சப்பாத்துக்களை வாங்கும்போது அது உங்கள் கால்களுக்கு நன்கு பொருந்துவதாக இருந்தால், அதை பாதுகாப்பாக கட்டி அல்லது ஒட்டி அணியுங்கள். பெண்கள் விளையாட்டைத் தவிர, நாளாந்த வாழ்வில் உயர்ந்த ஹீல் உடைய பாதணிகளை அணிவது கணுக்கால் சுளுக்கு ஏற்பட பிரதான காரணமாக அமைகின்றது.

நாட்பட்ட தசைநார் (ACL) காயமென்பது பொதுவாக முழங்காலில் ஏற்படும் காயமாவதுடன், குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இது பொதுவானதாகும். தசை நார் எலும்புகள் நீண்ட பட்டி அல்லது கயிறு போன்றதுடன் அது எலும்புகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளது. அது மூட்டுக்களுக்கிடையில் ஆழத்திலும், நீகெப் (kneecap (patella) எனப்படும் முழங்காலின் வட்ட வடிவ எலும்புக்கு பின்னாலும், முன்னெலும்புக்கு (shinbone) மேலாகவும் தொடை எலும்புக்கு (thighbone) க்கு கீழாகவும் அமைந்துள்ளதுடன் முழங்கால்களை நிலையாக வைத்திருக்க இவை உதவுகின்றது. இது முழங்காலில் உள்ள நான்கு பிரதான தசைநார்களில் ஒன்றாகும். அத்துடன் கீழ்க்கால் பிரதான எலும்பையும், தொடை எலும்பையும் இணைக்கிறது.

ACL ஆனது காலின் பின்பக்க தசைநாருடன் (PCL) இணைந்து செயல்படுகின்றது. இவ்விரண்டு தசை நார்கள் முழங்கால்கள் சுழலும்போது அதை நிலையாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. யுஊடு ஆனது காலின் நீண்ட முன் எலும்பை சரியான இடத்தில் வைப்பதுடன் அது நீண்ட தூரத்திற்கு முன்நோக்கி நகர்வதையும் முழங்கால் மற்றும் தொடை எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

நாட்பட்ட தசைநார் காயங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

நீங்கள் விளையாடும் ரக்பி போன்ற விளையாட்டுக்கள் அல்லது வேகமான அம்சங்கள் கொண்ட விளையாட்டுக்கள், திடீர் நகர்வுகளான சுற்றிச்சுழல்தல், நிறுத்துதல் அல்லது வட்டமாக திரும்புதல் போன்ற செயற்பாடுகளால் தசைநார்கள் பாதிப்படைந்து, நாட்பட்ட தசைநார் காயங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் நீங்கள் பாயும்போது முழங்காலை மடக்குவதற்கு பதிலாக நேராக அல்லது பூட்டியவாறு பாய்வதால் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக தசைநார்கள் கிழிபடுகின்றன அல்லது இரண்டாக உடைவதற்கும் காரணமாகின்றது.

நீங்கள் ஒரு வளரிளம் பெண்ணாக இருப்பின், உங்களுக்கு 8 - 10 மடங்கு தசைநார் காயங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன ஏனெனில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் மூட்டு சீரமைப்பு உட்பட உடல் வடிவத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதற்கு ஹோர்மோன்களின் பங்களிப்பும் பெருமளவு உண்டு. பெண்களின் ஹோமோன்களுக்கு தசைநார்களை தளர்த்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

நாட்பட்ட தசைநார் காயங்கள் உண்மையில் மிகவும் வலியை ஏற்படுத்தக்கூடியன. அது உங்கள் கால்களை நிலையற்றதாக்கவும், நடப்பதற்கு சிரமங்களை ஏற்படுத்தவும் கூடும்.  உங்கள் வயது மற்றும் காயத்தின் தீவிரத்தைப்பொறுத்து நாட்பட்ட தசைநார் காயப் பிரச்சினைக்கு 6 - 12 மாத சிகிச்சைக்கு மேலதிகமாக சத்திரசிகிச்சையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்.

நாட்பட்ட தசைநார் காயங்களுக்கான அறிகுறிகள்

உங்களுக்கு நாட்பட்ட தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு இதோ சில அறிகுறிகள்:

  • நடக்கும்போது நிலையில்லாமை அல்லது ஈடாட்டம் 
  • பாதிக்கப்பட்ட காலுக்கு சுமையேற்றுவதில் இயலாமை
  • தசைநார் பாதிக்கப்பட்டு 24 மணி நேரத்தின் பின் முழங்கால் மூட்டில் வலியும் வீக்கமும்
  • தீவிர வலி

பலர் தசைநார் பாதிப்படையும்போது (கிழியும்போது) ஒரு பொப் ஒலி கேட்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஏனையவர்கள் முன்னரை விட முழங்கால் தளர்வாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். சில நேரங்களில், நாட்பட்ட தசைநார் காயங்கள் ஏற்பட்ட பலருக்கு எந்தவிதமான வித்தியாசமும் தெரிவதில்லையென தெரிவித்துள்ளனர். அவையனைத்தும் காயத்தின் தீவிரத்தைப் பொறுத்தே மாறுபடும்.

நாட்பட்ட தசைநார் காயங்களுக்கான சிகிச்சை

உங்களுக்கு வீட்டில் அல்லது விளையாட்டு மைதானத்தில் முழங்கால் காயம் ஏற்பட்டிருப்பின், மேலும் காயம் அடைவதற்கு முன்னர் உடனடியாக விளையாட்டு செயற்பாடுகளை நிறுத்துங்கள். முடிந்தவரை விரைவில் ஒரு வைத்தியரிடம் செல்லுங்கள். அதே நேரம் முழங்காலில் ஐஸ் கட்டியை வைத்து வீக்கத்தை குறைக்க முயற்சியுங்கள். உங்கள் முழங்காலுக்கு பலு சுமத்தாதீர்கள்.

இதற்கான மருத்துவப் பெயர் டினியா பெடிஸ் (tinea pedis) ஆகும். வழக்கமாக பாதச் சொறி உள்ளங் கால்களை பாதிப்பதுடன் கால்விரல் இடுக்குகள் மூலம் நகத்தை நோக்கி பரவுகின்றது. அத்துடன் பாதச் சொறியானது உங்கள் உள்ளங்கை, அரைபூட்டு (தொடை இடுக்கு) மற்றும் கமக்கட்டு போன்ற இடங்களிலும் மற்றும் நீங்கள் தொடும் உடம்பின் ஏனைய  இடங்களிலும் பரவக்கூடும்.

பாதச் சொறி ஏற்படக் காரணம்

இது வெப்பம் மற்றும் ஈரமான சூழல்களில் உருவாகும் ஒரு வகை பூஞ்சையினால் ஏற்படுகின்றது. பாதச் சொறி விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, கால்கள் வியர்த்து ஈரமாகும் எவருக்கும் இத் தொற்று ஏற்பட்டு இந்த நோய் ஏற்படலாம்.

பாதச் சொறியின் அறிகுறிகள்

பாதச் சொறி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பின்வருமாறு: உள்ளங்கால்களுக்கும் கால் விரல்களுக்கும் இடையிலான அரிப்பு, எரிச்சல், சிவத்தல் மற்றும் கடி போன்ற அறிகுறிகள் ஏற்படும். அத்துடன் உங்கள் சருமம் உரிதல், சருமத்தில் வெடிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்படும்.

பாதச் சொறியைத் தவிர்த்தல்

பாதச் சொறித் தொற்று பெரும்பாலும் ஈரமான பகுதிகளான பொதுக் குழாய் நீர் உள்ள இடங்கள் மற்றும் குளங்களிலிருந்து பரவுகின்றது. பாதச் சொறியைத் தவிர்க்க, குளித்த பின்னரும், நீச்சலின் பின்னரும் உங்கள் பாதங்களையும் விரல்களுக்கிடையிலான பகுதியையும் நன்றாக உலர வையுங்கள். சுத்தமான துவாயைப் பயன்படுத்துங்கள், துவாயைப் பகிர்ந்து பயன்படுத்தாதீர்கள் அவ்வாறு பயன்படுத்துவது தொற்று பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். நீங்கள் பொதுக் குழாய் நீரைப் பயன்படுத்துவீர்களானால் உங்கள் பாதங்களைப் பாதுகாக்க நீர்ப்புகா சப்பாத்தை பயன்படுத்துங்கள்.

உங்கள் பாதங்களை முடிந்த வரை உலர்வாகப் பேணிக்கொள்ளவும். பாவித்த சப்பாத்துக்கள், ஸ்னீக்கர்களையே தொடர்ந்து பாவிக்காதீர்கள், அத்துடன் உங்கள் கால்களுக்கு வியர்வை அல்லது ஈரப்பதன் தங்கி நிற்காத காலுறைகளை பயன்படுத்துங்கள். மேலும் பருத்தி அல்லது கம்பளி காலுறைகளை பயன்படுத்துங்கள். ஈரப்பதன் தங்காத விசேட பல வகையான காலுறைகள் கடைகளில் கிடைக்கின்றன அவற்றையும் பயன்படுத்தலாம். முடிந்தால் ஸ்னீக்கர்களை பாவிக்கும்போது சிறிதளவு காற்றோட்டம் ஏற்படக்கூடிய சிறிய ஓட்டைகளுடனான ஸ்னீக்கர்களை பாவியுங்கள். அது உங்கள் பாதங்களை உலர்வாக வைத்திருக்க உதவும்.

தலை முதல் கால்விரல் வரை உங்கள் உடலில் பல்வேறு வித்தியாசமான வடிவமைப்புள்ள மூட்டுக்கள் உள்ளன. இவற்றில் பல தனித்தன்மையுள்ள திரவப் பைகளைக் கொண்டவைகளாகும். அவை குஷன் என்று அழைக்கப்படும். குஷனைப்போன்று மூட்டுக்களை நகராத வாறும் அழுத்தம் ஏற்படாதவாறும் பாதுகாக்கின்றன. பேர்ஷா என அழைக்கப்படும் குஷன்களுக்கு நேரடி தாக்குதல் அல்லது கிரிக்கட் பந்து வீசுவது போல அடிக்கடி மூட்டுக்களில் ஏற்படும் நகர்வுகளின் விளைவாக ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கமானது மூட்டுச் சவ்வு வீக்கம் என அழைக்கப்படுகின்றது. அத்துடன் உங்களுக்கு மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்பட உங்கள் உடல் அதன் சமநிலை அல்லது நகர்வின்போது ஏற்படும் மாறுபடுகள் (உதாரணம்: ஒரு கால் மற்ற காலைவிட கட்டையாக இருப்பது) காரணமாகவும் ஏற்படுகின்றது.

மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மூட்டுச் சவ்வு வீக்கம் விசேடமாக வளரிளம் பருவத்தினரிடையே விளையாட்டின் போது ஏற்படும் காயமாகவே அறியப்படுகின்றது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மூட்டு மீண்டும் மீண்டும் செயல்படுவது அல்லது விளையாடும்போது நிகழும் பலமான நேரடித் தாக்குதல் காரணமாக இது ஏற்படுகின்றது. மூட்டுச் சவ்வு வீக்கம் விளையாட்டின்போது மட்டும் ஏற்படுவதில்லை. ஏனைய மூட்டு வலிகள் அல்லது குஷனில் (பேர்ஷா) ஏற்படும் பக்டீரியா தொற்று போன்ற காரணங்களாலும் ஏற்படுகின்றது.

பொதுவாக வளரிளம் பருவத்தினருக்கு மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்படக்கூடிய காரணங்கள்
  • முழங்கை மூட்டுச் சவ்வு வீக்கம்: முழங்கை பலவிதமான உடற்செயற்பாடுகளுக்கும் ஒரு அடிப்படை பாகமாகும். பந்துகளை வீசுவதற்கும், டென்னிஸ் பந்தை அடிப்பதற்கும் முழங்கையே பிரதானமாக செயற்படுகின்றது, எனவே அது மூட்டுச் சவ்வு வீக்கம் அதிகம் ஏற்படும் உறுப்புக்களில் ஒன்றாகும்.
  • முழங்கால்: முழங்காலில் மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்பட, நேரடியாக முழங்கால் அடிபட விழுவது அல்லது நீண்ட நேரம் முழங்காலிட்டு மேற்கொள்ளப்படும் செயல்கள் காரணமாக அமைகின்றது.
  • இடுப்பு: இந்த வகையான மூட்டுச் சவ்வு வீக்கம் பொதுவாக ஓட்டத்துடன் தொடர்புடையது.
  • தோள்: தோள்பட்டை மூட்டுச் சவ்வு வீக்கமானது விழுதல், மீண்டும் மீண்டும் உடலை இயக்கும் நீச்சல், பேஸ்போல் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களினால் ஏற்படுகின்றது.
  • கணுக்கால்: குதித்தல், ஓடுதல் அல்லது நடத்தல் போன்றவை கணுக்கால் மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்படக் காரணமாக அமைகின்றது. உங்கள் காலுக்குப் பொருந்தாத, இறுக்கமான சப்பாத்துக்களும் மூட்டுச் சவ்வு வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

மூட்டுச் சவ்வு வீக்கத்திற்கான அறிகுறிகள்

  • மூட்டில் ஏற்படும் வலி அல்லது கூச்சம். இதுதான் ஒருவருக்கு மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்பட்டிருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும்.
  • பாதிக்கப்பட்ட மூட்டுக்களை நகர்த்துவதில் சிரமம். இதனால் குஷன் (பேர்ஷா) வீங்குவதால் மூட்டுக்கள் நெகிழ்வற்றதாகி சரியாக நகர்த்த முடியாமல் போகின்றது.
  • பாதிக்கப்பட்ட பகுதி அழற்சி காரணமாக வீங்கிக் காணப்படும்.
  • அழற்சி  ஏற்படுவதால் மூட்டுக்களைச் சுற்றி தோல் சிவந்து போக காரணமாக அமைகின்றது. ஏனெனில் மூட்டுக் குஷன் தொற்றுக்குள்ளாகலாம், எனவே உடனடியாக அப்பகுதியில் சிவத்தல், உஷ்ணமாகுதல் அல்லது வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அது பற்றி அதிக கவனம் செலுத்துவதும் தேவையானால் மருத்துவ உதவியை நாடுவதும் அவசியமானதாகும்.

மூட்டுச் சவ்வு வீக்கத்தைத் தவிர்த்தல்

மூட்டுச் சவ்வு வீக்கம் பொதுவாக மூட்டுக்களின் அதிக செயற்பாடுகளினால் ஏற்படும் கடின தாக்கத்தின் காரணமாக ஏற்படுகின்றது. சில நேரங்களில் இக்காயங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மூட்டுச் சவ்வு வீக்கத்தைத் தவிர்க்கலாம்:

  • உடலை சரியான வடிவத்தில் வைத்திருங்கள். தசைகளையும், மூட்டுக்களையும் வலுவாக்கக்கூடிய முறையான பயிற்சிகளைச் செய்வது மூட்டுச் சவ்வு வீக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
  • அளவுக்கு அதிகமாக உடலைக் கஷ்டப்படுத்தி வேலையோ உடற்பயிற்சியோ செய்யாதீர்கள். அளவுக்கு அதிகமாக செய்யும் எதுவும் பிழைக்கலாம், எனவே அளவுக்கு அதிகமாக மூட்டுக்களுக்கு வேலை கொடுக்காதீர்கள்.
  • சரியான முறையில் பயிற்சியை ஆரம்பித்து அளவாக செய்தபின் நிறுத்துங்கள். இது மூட்டுச் சவ்வு வீக்கத்தைத் தவிர்க்க முக்கியமான வழியாகும். உடற்பயிற்சியின்போது படிப்படியாக வேகத்தை அதிகரிப்பதும் பின்னர் உடற்பயிற்சியை செய்து முடிக்கும்போது படிப்படியாக வேகத்தைக் குறைத்து நிறுத்துவதும் மிக அவசியமானதாகும். அது உங்கள் மூட்டுக்களுக்கும் உடலுக்கும் அழுத்தத்தைக் குறைக்கும்.
  • நீட்சி, நீட்சியினால் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுமட்டுமல்ல மூட்டுச் சவ்வு வீக்கத்தைத் தவிர்ப்பதற்கும் உதவும்.
  • சுழட்சியான பல்வேறு வகையான உடற்பயிற்சிகளின்போது எடையை தூக்கும்போது அல்லது கடுமையான செயற்பாடுகளுக்கு நடுவில் சிறிய இடைவெளி கொடுப்பது உங்கள் மூட்டுக்களை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.
  • கவசம் ஒன்றை பாவியுங்கள். கொங்கிரீட் தரைகள் அல்லது வன்மையான பலகைகளில் முழங்காலிடும்போது, தலையணைகள், மடித்த பெட்ஷீட்கள் மற்றும் முழங்கால் கவசங்களைப் பாவிப்பது மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். அத்துடன் அதிகமான எடை அல்லது அழுத்தத்தை மூட்டுக்களுக்கு நேரடியாக சுமத்துவதை தவிருங்கள்.
  • நீண்டநேரத்திற்கு உங்கள் பிட்டம், முழங்கால் அல்லது வேறு மூட்டுக்களை ஒரே இடத்தில் நகராது இருக்கவிடாதீர்கள். சில நிமிடங்களுக்கு என்றாலும், அவற்றை எழுந்து நகர வையுங்கள்.

குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மூட்டுச் சவ்வு வீக்கம் ஏற்பட காரணமாக அமைகின்றது என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு வைத்தியரை அணுகி உங்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகள் பற்றிப் பேசுங்கள். சரியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி மூட்டுச் சவ்வு வீக்கத்தைத் தவிர்ப்பதுதான் சிறந்த வழியாகும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள நாண் உரைப்பையழற்சிக்கு பிழையாக வடிவமைக்கப்பட்டுள்ள சப்பாத்துக்கள் காரணமாக இருந்தால் அதை ஒதுக்கிவிட்டு அதைவிட சிறந்த சப்பாத்தை பாவியுங்கள்.

கழுத்துப்பட்டை எலும்பு (இதை கொலர்போன் எனவும் அழைப்பர்) கைகளை உடம்புடன் இணைப்பதற்கு இது உதவுகின்றது. இவ்வெலும்பு கிடைமட்டமாக உங்கள் மார்பெலும்புக்கு மேலேயும் தோள் எலும்புக்கும் இடையிலும் இயங்குகின்றது. நீங்கள் அதை உங்கள் கழுத்துக்கும் தோல்பட்டைக்கும் இடையிலான பகுதியைத் தொட்டு உணர முடியும். பெரும்பாலானவர்கள் கண்ணாடியில் பார்க்கும்போது தோளின் அடியில் உள்ள கழுத்துப்பட்டை எலும்பை காணக்கூடியதாக இருக்கும்.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவு 'உடைந்த கொலர்போன்' என அழைக்கப்படுகின்றது. யாராவது தங்கள் தோல்பட்டை அல்லது ஓங்கிய கை மீது விழும்போது கழுத்துப்பட்டைக்கு மிகுந்த அழுத்தம் ஏற்படுவதால் முறிவு ஏற்படுகின்றது. சிறிய அளவிலான கழுத்து எலும்பு முறிவுகளின் போது காயங்களுக்கு ஐஸ் கட்டி வைத்து அல்லது பிஸியோதெரபி செய்வதனால் அது தானாகவே குணமாகிவிடும். ஆனால் பாரிய அளவிலான கழுத்துப்பட்டை எலும்பு முறிவுகளின்போது எலும்பு இடம் மாறி அல்லது கடுமையாக உடைந்திருப்பின் அதைக் குணமாக்க சத்திர சிகிச்சை செய்யவேண்டியிருக்கும்.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவு ஏற்படும் காரணங்கள்

கழுத்துப்பட்டை எலும்பு முறிவு பொதுவாக உதைப்பந்தாட்டம் அல்லது ரக்பி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஏற்படுகின்றது. அத்துடன் கடுமையாக விழக்கூடிய பைக்கிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் விளையட்டுக்களின்போதும் கழுத்துப்பட்டை எலும்பு முறிவு ஏற்படுகின்றது. கழுத்துப்பட்டை எலும்பு முறிவு கார் மோதல் அல்லது விபத்துக்களின்போது எலும்பு நேரடியாக அடிபடுவதாலும் ஏற்படுகின்றது.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவுகள் பெரும்பாலும் எலும்புகள் உடையக்கூடிய விதமாக அழுத்தம் ஏற்படும் மூன்று சூழ்நிலைகளில் ஏற்படுகின்றது.

  • தோல்பட்டை மீது ஏற்படும் ஒரு தாக்குதல்
  • கை ஓங்கிய நிலையில் விழுதல்
  • கழுத்துப்பட்டை மீதான நேரடி தாக்குதல் (ஒரு மோதலில்)

கழுத்துப்பட்டை எலும்பு முறிவுக்கு உங்கள் வயதும் பெரும்பங்கு வகிக்கின்றது: இளம் வயதினராக இருக்கும்போது உங்கள் எலும்புகள் இன்னமும் வளர்ச்சியடைந்தபடி இருப்பதால் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன. கொலர் எலும்புகள் நீங்கள் 20 வயதை அடையும் வரை முழுஅளவில் கடினமடைவதில்லை. மற்றொரு வகையில் சொல்வதாயின், நீங்கள் 20 வயதுக்கு குறைந்தவராயின் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவிற்கான அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட பகுதியில் வலி
  • கைகளை அசைப்பதில் சிரமம்
  • வீக்கம் மற்றும் கழுத்துப்பட்டை சேர்ந்து நசுங்குப்படுதல்.
  • உங்கள் தோல்பட்டையை அல்லது கைகளை அசைக்கும்போது வலி அதிகரித்தல்.
  • கைகளை உயர்த்தும்போது அரைப்பது போன்ற ஒலி அல்லது உணர்வு ஏற்படுதல்.
  • உடைந்த பகுதிக்கு மேலே வீக்கம் (சில அரிதான சந்தர்ப்பங்களின்போது உடைந்த எலும்பின் பகுதி தோலையும் ஊடுருவி வெளியில் வந்துவிடும்)
  • உங்கள் தோல்பட்டை கீழ்நோக்கியும் முன்நோக்கியும் வளைதல்.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவுக்கான சிகிச்சை

உங்கள் கழுத்துப்பட்டை எலும்பு முறிந்துள்ளது என நீங்கள் நினைப்பீர்களாயின் ஒரு வைத்தியரை பார்ப்பது நல்லது. வைத்தியர் முதலில் காயம் எவ்வாறு ஏற்பட்டது மற்றும் அறிகுறிகள் என்ன என்பதையும் கேட்டறிந்துகொள்வார். அவர் உங்கள் தோல்பட்டையை பரிசோதித்துப் பார்ப்பதுடன் எங்காவது பலவீனமாகியுள்ளதா என்பதை மெதுவாக அழுத்திப் பார்ப்பார். இது வைத்தியருக்கு எங்கே முறிவு ஏற்பட்டுள்ளது என்பதையும், எங்காவது இரத்த நாளங்கள் சேதமடைந்துள்ளதா என்பதையும் அறிய உதவியாக இருக்கும். இவ்வகையான பரிசோதனையில் உங்கள் கைகளின், விரல்களின் வலிமை மற்றும் உணர்வு என்பவையும் பரிசோதிக்கப்படும்.

உங்கள் கழுத்துப்பட்டை எலும்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று வைத்தியர் எண்ணுவாராயின், அவர் உங்கள் தோல்பட்டையையும், பாதிக்கப்பட்ட பகுதியையும் ஒரு எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்க்கவேண்டும் என அறிவுறுத்துவார். எக்ஸ்ரே மூலம் பாதிக்கப்பட்ட பகுதியின் மையப்புள்ளியை அறிந்துகொள்ளவும் அதன் தீவிரம் பற்றி அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன் வேறு எங்காவது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதையும் வைத்தியர் அறிந்துகொள்ள எக்ஸ்ரே படம் உதவுகின்றது.

எலும்புகள் உடைந்திருப்பின் முறிவின் விபரங்களை பெரிய அளவில் தெளிவாகப் பார்ப்பதற்கு தேவையாயின் அவர் உங்களை கணனி டொமோகிராபி (CT) செய்யும்படி பரிந்துரைப்பார்.

கழுத்துப்பட்டை எலும்பு முறிவை தவிர்த்தல்

கழுத்துப்பட்டை எலும்பு முறிவுகள் எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்படுவதால் அதை தடுப்பது கடினமானது. ஆனால் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதை தவிர்க்கலாம்:

  • நீங்கள் தொடர்புபட்டுள்ள விளையாட்டில் ஈடுபடும்போது, உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவதுடன், உங்கள் விளையாட்டின் சரியான தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். சரியான வழியில் விளையாடுவதால் எதிர்பாராதவிதமாக ஏற்படும் அடி அல்லது விழுதல் போன்றவற்றை குறைத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் சமபோஷணையுள்ள உணவுகளை உண்பதால் உங்கள் எலும்புகளின் வலுவைப் பேணிக்கொள்ளலாம். காய்கறிகளையும், கல்சியம், விட்டமின் D அதிகம் உள்ள உணவுகளையும் உண்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவை உங்கள் எலும்புகளை வலுவாக்க உதவும்.
  • வலுப்பயிற்சி மற்றும் வளைந்துகொடுக்கக்கூடிய தசைகளைப் பெறப் பயிற்சி எடுத்தல். தசைகள் வளைந்துகொடுக்கக்கூடியதாகவும் வலுவுள்ளதாகவும் இருப்பது உங்கள் எலும்புகளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் நீங்கள் கடுமையாக விழுவதற்கான வாய்ப்பையும் குறைத்துவிடும். முறையான (Warm up) பயிற்சிகள் என்பன நீங்கள் விளையாடும்போது தசைகள் அதன் உச்ச செயற்பாட்டை மேற்கொள்ள உதவியாக அமையும்.
  • உங்கள் விளையாட்டுக்கு பொறுத்தமான நன்றாக வடிவமைக்கப்பட்ட சப்பாத்துக்களை பயன்படுத்துங்கள்.

நாம் அனைவரும் உடற்பயிற்சியின் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். அத்துடன் மென்மேலும் உடற்பயிற்சி செய்வதன் தேவைபற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதே வேளை உங்கள் உடலுக்கும் உயிருக்குமான சரியான உடற்பயிற்சிகள் உங்கள் இதயம் மற்றும் தசையை பலப்படுத்துவதுடன், கொழுப்பை குறைக்கவும், பல்வேறு நோய் ஆபத்துக்களை குறைக்கவும் உதவுகின்றது. 

வளரிளம் பருவத்தினர் மத்தியில் விளையாட்டில் திறமைகாட்டும் நண்பர்களுக்கு, செயற்பாடற்ற சோம்பேறித்தனமான நண்பர்களை விட மதிப்பு அதிகம் உள்ளது. அத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது என்டோர்பின் ரஷ் இரசாயனம் (endorphin rush) உருவாக்கப்படுவதால் மன அழுத்தத்தைக்கூட குறைக்க முடியும். இந்த இரசாயனங்கள் ஒரு பயிற்சியின் முன்னரும் பின்னரும் உங்கள் உடலில் உருவாகின்றன. அத்துடன் அவை உங்களின் மன அழுத்தத்தை பெருமளவு கட்டுப்படுத்த உதவும். அதேவேளை தெளிவான நன்மைகள் அனைத்தும் இருந்தாலும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதையும் மறவாதீர்கள்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிக்கான காரணங்கள்

நீங்கள் கட்டாயம் உடற்பயிற்சியை ஆரம்பிக்கவேண்டும். அது மகிழ்சிகரமானதும் நல்ல உணர்வைக் கொடுக்கக்கூடியதுமாகும். ஆனால் அது தவறான காரணங்களுக்காக செய்யப்படுமாயின் அது கட்டாய பழக்கமாகிவிடுகின்றது.

நீங்கள் எடை குறைத்தலை பிரதான இலக்காகக்கொண்டு உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான வழியில் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும். உங்களுக்கு நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். நாம் அடிக்கடி சிறந்த உடலமைப்பு கொண்டவர்களின் படங்களை விளம்பரங்களில் பார்த்துவருகிறோம்: இளம் மற்றும் ஒல்லியாக பெண்களையும், பலம் மிக்க மற்றும் கட்டுடல் கொண்ட ஆண்களையும் பார்த்து நீங்களும் அதுபோன்று ஆகவேண்டும் என்ற நடைமுறை சாத்தியமற்ற முயற்சியினால் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு பசியின்மை மற்றும் பெரும்பசி போன்ற உணவுக் கோளாறுகளையும் உண்டுபண்ணலாம். இந்த உணவுப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளில் சலிப்படைந்த நீங்கள், விரைவாக எடையைக் குறைக்க அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை செய்ய முனைவீர்கள்.

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராயின், மீண்டும் மீண்டும் செய்யும் உடற்பயிற்சி முக்கியமான போட்டியொன்றில் உங்கள் இலக்கை வெல்ல உதவும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நீங்கள் பயிற்சியாளரின் ஆலோசனையின்றி உங்கள் குழுவுடன் இணைந்து மேலதிக பயிற்சிகளைச் சேர்த்துக்கொள்வீர்கள். இதன்போது உங்களுக்கு ஆரோக்கியத்தை விட வெற்றிபெறுவதற்கான அழுத்தமே அதிகமாக இருக்கும். உங்கள் உடலுக்கு செயற்பாடுகள் தேவைதான். அதேபோல் ஓய்வும் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிக உடற்பயிற்சி உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் தசைப்  பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உடற்பயிற்சியாளராகத் திகழுங்கள்

நீங்கள் ஒருநாளைக்கு குறைந்தது 60 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சியில் தொடங்கி தீவிர உடற்பயிற்சி வரை மேற்கொள்ளவேண்டும் என உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால் சில வளரிளம் பருவத்தினர் தேவையான அளவைவிட மிகக் குறைவான உடற்பயிற்சிகளை செய்கின்றார்கள். அதேவேளை விளையாட்டு வீரர்கள் போன்ற சில வளரிளம் பருவத்தினர் தேவையைவிட அதிகமாக செய்கின்றார்கள்.

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்காக தேவைக்கு அதிகமாக மீண்டும் மீண்டும் உடற்பயிற்சி செய்வது ஒரு அலைக்கழிக்கும் நடத்தையென நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். நீங்கள் ஒரு பெரிய விளையாட்டு நிகழ்விற்காக பயிற்சியெடுப்பீர்களாயின், சராசரி அளவைவிட மேலதிக உடற்பயிற்சி தேவைப்படலாம். நீங்கள் பயிற்சியில் இல்லாதபோது பல உடற்பயிற்சிகளை ஒரு நாளில், தினமும் மேற்கொள்வதானது, நீங்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

உடற்பயிற்சியை சார்ந்துள்ளவர்கள் அவர்களுக்கு தேவையான உடற்தகுதியைப் பெறுவதற்காக எத்தகைய தீவிர முயற்சியையும் மேற்கொள்வார்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது நண்பர்களையோ, வீட்டு வேலைகளையோ அல்லது வேறு வேலைகளையோ தொடர்புபடுத்திக்கொள்வீர்களாயின், அது உங்கள் உடற்பயிற்சி செயற்பாடுகளுக்கு ஒரு ஆரோக்கியமற்ற தன்மையையே ஏற்படுத்தும்.

கட்டாய உடற்பயிற்சியின் அறிகுறிகள்

நீங்கள் சுய உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தும் பழக்கம் உள்ளவராயின், பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடமே கேளுங்கள்.

  • நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இல்லாவிடினும் வலுக்கட்டாயமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா?
  • நீங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதைவிட உடற்பயிற்சி செய்வதை விரும்புகிறீர்களா?
  • ஒரு உடற்பயிற்சியை தவறவிடும் பட்சத்தில் நீங்கள் குழப்பமடைகிறீர்களா?
  • நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை வைத்து உடற்பயிற்சி செய்யும் அளவை மேற்கொள்கிறீர்களா?
  • நீங்கள் இன்னமும் கலோரிகளை எரிக்க முடியவில்லையே என நினைத்து கவலைப்படுகிறீர்களா?
  • ஒரு நாள் உடற்பயிற்சியை தவறவிடும் பட்சத்தில் உடல் எடை அதிகரிக்கும் என கவலையடைகிறீர்களா?

இந்தக் கேள்விகளில் எதற்காவது ஆம்! என பதில் சொல்வீர்களாயின், உங்களுக்கு கட்டாய உடற்பயிற்சிப் பிரச்சினை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

கட்டாய உடற்பயிற்சிக்கு சிகிச்சையளித்தல்

நீங்கள் கட்டாய உடற்பயிற்சி செய்கிறீர்கள் என சந்தேகம் கொள்வீர்களாயின் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருடன், வைத்தியருடன், ஆசிரியருடன், ஆலோசகருடன், பயிற்சியாளருடன் அல்லது ஒரு நம்பகத்தகுந்த மூத்தவருடன் பேசுங்கள். கட்டாய உடற்பயிற்சியானது குறிப்பாக உண்ணும் கோளாறுடன் தொடர்புடையது, அது தீவிரமான மற்றும் நிரந்தர ஆரோக்கியப் பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடியது. சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மரணத்தைக்கூட அது ஏற்படுத்தலாம்.

ஏனெனில் கட்டாய உடற்பயிற்சிக்கு உணவு கோளாறுடன் நெருங்கிய  தொடர்பு உள்ளது. பசியின்மை, பெரும்பசி மற்றும் ஏனைய உணவுக்கோளாறுகள் தொடர்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தேவையான உதவியைப் பெறலாம். உங்கள் ஆசிரியர், பயிற்சியாளர் அல்லது பெற்றோர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புக்களிடம் உதவியைப்பெறலாம்.

அத்துடன் நீங்கள் ஒரு வைத்தியரிடம் செல்லவேண்டும். ஏனெனில் வளரிளம் பருவகாலத்தில் உங்கள் உடல் பல்வேறு முக்கியமான வளர்ச்சிகளை காணும். உங்களுக்குக் கட்டாய உடற்பயிற்சி பிரச்சினை இருக்குமாயின் நீங்கள் வைத்தியரிடம் சென்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கவேண்டிய வளர்ச்சி இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுக்கு உணவுப் பிரச்சினையும் இருக்குமானால் இதை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். நீங்கள் உணவைக் குறைத்து அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்யும் ஒரு பெண்ணாக இருப்பின், உங்களுக்கு மாதவிடாய் முறையாக நடைபெறாததுடன் ஒஸ்டியோபெரோசிஸ் (எலும்புகள் பலவீனமடைதல்) பிரச்சினையும் ஏற்படும். உங்களுக்கு அதிக உடற்பயிற்சி பிரச்சினை இருக்குமானால் அது உங்கள் உடலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஒரு வைத்தியரிடம் சென்று தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்று உங்கள் உடல் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது நல்லது.

கட்டாய உடற்பயிற்சியைத் தவிர்த்தல்

நீங்கள் கட்டாய உடற்பயிற்சியில் ஈடுபடுவீர்களாயின் உங்களின் தோற்றம் சிதைக்கப்படுவதுடன் சுய கௌரவமும் பாதிக்கப்படும். அத்துடன் நீங்கள் ஒரு ஆரோக்கிய எடையுடன் இருக்கும்போதுகூட உங்களுக்கு நீங்கள் எடைகூடி இருப்பதுபோலவும் உங்கள் உடல் தோற்றம் சரியாக இல்லாதது போலவும் தோன்றும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக கட்டாய உடற்பயிற்சிக்கு பிரச்சினையைத் தீர்க்க நிபுணத்துவ உதவி தேவைப்படும். அத்துடன் பின்வரும் சில விடயங்களை நீங்கள் மேற்கொள்வதால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும்:

  • தினசரி உங்கள் சுய கலந்துரையாடலில் மாற்றம் செய்யுங்கள். நீங்கள் கண்ணாடியில் உங்களைப் பார்க்கும்போது உங்களைப் பற்றி, உங்கள் உடலமைப்புப் பற்றி ஆகக்குறைந்தது ஒரு நல்ல விடயத்தையாவது சொல்லுங்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி சாதகமாக நினைக்க ஆரம்பியுங்கள்.
  • நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது சாதகமான மனநிலையோடு நல்ல அம்சங்கள் மீது கவனத்தை குவியுங்கள்.
  • நீங்கள் உங்களுக்கு ஒரு இடைவெளியைக் கொடுங்கள். கடின உழைப்பொன்றின் பின்னர் உங்கள் உடல் சொல்வதைக்கேட்டு அதற்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள்.
  • மிதமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடலைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் உடலை யதார்த்தமற்ற ஒல்லியான உடல் வடிவத்திற்கு மாற்ற முயற்சி செய்யாதீர்கள். உங்கள் வைத்தியர், உணவுமுறை நிபுணர், பயிற்சியாளர் அல்லது பொறுப்பு வாய்ந்த மூத்தவர்களுடன் உங்களுக்கு ஏற்ற சிறந்த ஆரோக்கிய உடல் எடை பற்றியும், எவ்வாறு ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களை வளர்த்துக்கொள்வது என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • உடற்பயிற்சியும் விளையாட்டும் உங்களை மகிழ்சியானவராகவும், ஆரோக்கியமானவராகவும் வைத்துக்கொள்ள உதவும். அளவான உடற்பயிற்சி பயிற்சி இவ்விரண்டையும் செய்யும்.

நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவரானால் தலையில் அடிபடுதல் ஒரு தீவிரமான பிரச்சினை என்பது தெரிந்திருக்கும். விளையாட்டில் ஈடுபடும்போது ஒரு நபருக்கு தவறிவிழக்கூடிய அல்லது ஏனைய வீரர்களுடன் அல்லது ஏதாவதொரு பொருளொன்றுடன் மோதக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் இருக்கும். இது பேரதிர்ச்சி (concussion) என அழைக்கப்படும். ஒரு வகையான மூளைக் காயமாக இது அறியப்படுகிறது. நீண்ட நாட்களாக விளையாடுபவர்களுக்கு காலத்திற்கு காலம் தலையில் அடிபடலாம். ஆனால் சரியான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பவர்களுக்கு இதைத் தவிர்க்க முடியும். உங்களுக்கு தலையில் அடிபடும் பட்சத்தில் விளையாட்டுக்கு சற்று இடைவெளி கொடுங்கள். உங்கள் தலையில் பட்ட அடி குணமடைய அனுமதிப்பதால் நீண்ட கால பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

மூளையதிர்ச்சிக்கான காரணங்கள்

மனிதனின் மூளை மிகவும் மிருதுவானது. உங்கள் உடல் மூளையை செரப்ரோஸ்பினல் திரவத்தைக் (cerebrospinal fluid) கொண்டு பாதுகாக்கின்றது. ஏனெனில் மூளை திரவத்தால் மிதப்பதுடன், அது சுற்றிவர நகர முடிவதால், விளையாட்டின்போது நீங்கள் விழுந்தால் அல்லது ஒரு மோதல் ஏற்பட்டால் அது மண்டை ஓட்டுடன் மோதி மூளை நசுங்கக்கூடும். அத்துடன் அது இரத்த நாளங்களை கிழிக்கவும், நரம்புகளை காயப்படுத்தவும் கூடும். இக்காயங்கள் மூளையதிர்ச்சிக்குக் காரணமாவதுடன் மூளையின் செயற்பாட்டை தற்காலிகமாக இழக்கவைக்கலாம்.

விளையாட்டின்போது மூளையதிர்ச்சி ஏற்படும் சில வழிகள்
  • உதைப்பந்தாட்டத்திலும் ரக்பியிலும் பந்து தடுப்பாட்டம்
  • கிரிக்கட் பந்தொன்றினால் தலையில் அடிபடுதல்.
  • உதைப்பந்தாட்டத்தின்போது பந்தை தவறாக கையாள்வதால், ஸ்கேட் போட்டிங் அல்லது பைக்கிங்கின்போது வைப்அவுட்(wipeouts) பண்ணுவது.
  • இரண்டு வீரர்களுக்கிடையிலான மோதல்.

மூளையதிர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்

நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது உங்கள் தலை மோதப்பட்டு நீங்கள் அதற்கு எதையும் செய்யாதிருந்திருப்பீர்களாயின், மூளையதிர்ச்சிக்கான அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மூளையதிர்ச்சி உடனடியாக எந்த அறிகுறிகளையும் காட்டாது. 3 நாட்களுக்கு பின்னர் அறிகுறிகள் தெளிவாகத் தெரியவரும்.   

உங்களுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் எனவும் அது கூடுவதாகவும் நீங்கள் நினைப்பீர்களாயின் கீழ் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் முடிந்தவரை விரைவாக ஒரு வைத்தியரைச் சந்தியுங்கள்:

  • தலைவலி
  • மயக்கம்
  • உடம்பு சரியில்லை அல்லது வீசப்படுவது போன்ற உணர்வு
  • ஒருங்கிணைப்பு அல்லது சமநிலை சிரமம்
  • மங்களான பார்வை
  • தெளிவற்ற பேச்சு அல்லது தெளிவற்ற விடயங்களைப் பேசுவது
  • உணர்வு குழம்புதல்
  • குழப்பமான உணர்வு மற்றும் கவனம் செலுத்த, சிந்திக்க அல்லது முடிவுகளை எடுக்க சிரமப்படுதல்
  • விடயங்களை நினைவில் வைத்திருப்பதில் பிரச்சினை
  • தூக்க உணர்வு
  • அயர்ந்து தூங்குவதில் பிரச்சினை
  • வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ தூங்குதல்
  • எந்த வெளிப்படையான காரணங்களுமின்றி கோபம், எரிச்சல் அடைதல்
  • வழக்கத்தை விட கவலை அல்லது அதிகம் உணர்ச்சிவசப்படுதல்

மூளையதிர்ச்சிக்கு சிகிச்சையளித்தல்

  • நீங்கள் விளையாடும்போது உங்கள் தலையில் காயம் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக விளையாடுவதை நிறுத்திவிடுங்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு பயிற்றுவிப்பாளர் உங்களை களத்திலிருந்து அகற்றுவதற்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் உங்களுக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் இல்லாவிடின், அல்லது உங்கள் பயிற்றுவிப்பாளர் உங்களை விளையாட்டிலிருந்து வெளியில் செல்ல அனுமதி கொடுக்காவிடின், நீங்களாகவே விளையாட்டுக் களத்திலிருந்து வெளியில் செல்லவேண்டும்.
  • நீங்கள் சைக்கிளோட்டுவீர்களாயின், அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். மீண்டுமொரு முறை உங்கள் தலையில் காயம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்காதீர்கள். இரண்டாவது முறையாக தலைக்காயம் ஏற்படுமாயின், அது இரண்டாவது தாக்க நோய் அறிகுறி என அழைக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும். இரண்டாவது தாக்க நோய் அடிக்கடி ஏற்படுவதில்லை, ஆனால் அது நீடித்த மூளைக்காயத்தை ஏற்படுத்துவதுடன் மரணத்திற்குக்கூட காரணமாகி விடலாம்.
  • உங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டொன்றின்போது காயம் ஏற்படுமாயின் ஒரு பயிற்றுவிப்பாளர் அல்லது தடகள பயிற்றுவிப்பாளர் உங்களை காயத்தின் பின்னர் நன்கு பரிசோதிக்கவேண்டும். இது சைட்லைன் பரிசோதனை (sideline testing) எனப்படும். ஏனெனில் இது விளையாடும்போது பக்கவாட்டுப் பகுதியில் ஏற்படுகிறது. சைட்லைன் பரிசோதனை பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகப் போட்டிகளின்போதும் பொதுவானதாகும். உங்களை நன்கு கவனித்தபின் சில எளிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன்போது ஒரு பயிற்றுவிக்கப்பட்ட நபரால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவையா என்பதையும் தீர்மானிக்க முடியும்.

பெரும்பாலான பாடசாலைகள் அல்லது விளையாட்டுக் கழகங்களின் பரிசோதனைகள் மூலம் விளையாட்டு வீரர்களின் சாதாரண மூளைச் செயற்பாடுகளை அளவிட முடியும். இந்தச் இது பேஸ்லைன் மூளையதிர்ச்சிப் பரிசோதனைகள் (baseline concussion tests) என அழைக்கப்படும். பயிற்றுவிப்பாளர்கள், வைத்தியர்களால் பேஸ்லைன் பரிசோதனைகளை சைட் லைன் பரிசோதனையுடன் ஒப்பிட்டுப்பார்த்து விளையாட்டு வீரரின் மூளை சரியாக செயற்படுகிறதா என்பதைச் சொல்ல முடியும்.

நீங்கள் எப்போது மீண்டும் விளையாடலாம்?

மூளையதிர்ச்சி ஏற்பட்ட பின்னர் பெரும்பாலான விளையாட்டு வீரர்களால் கேட்கப்படும் கேள்வி 'நான் எப்போது மீண்டும் விளையாடலாம்' என்பதேயாகும். அதற்கு மிக எளிதாக சொல்லக்கூடிய பதில் யாதெனில் மருத்துவர் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது விளையாடலாம் என்பதுதான். மூளையதிர்ச்சியால் தந்திரமாக செயல்பட முடியும்: நீங்கள் சுகத்தை உணரலாம், ஆனால் உங்கள் சிந்தனைகள், நடத்தைகள் அல்லது ஏனைய விடயங்கள் வழமைநிலைக்குத் திரும்புவதில்லை. ஒரு வைத்தியரால் மட்டுமே இந்த விடயங்களை உறுதியாகச் சொல்ல முடியும். வைத்தியர் நீங்கள் மீண்டும் விளையாடலாம் என்று சொல்லும் வரை காத்திருப்பது அவசியமானதாகும். ஆனால் நீங்கள் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்புவது சிலவேளை உங்களுக்கு அழுத்தம் தருவதாக இருக்கலாம். உங்களால் விளையாட முடியாமல் போனதையிட்டு நீங்கள் கவலைப்படலாம். ஆனால் பெரும்பாலான தொழில்முறையான விளையாட்டுக்கழகங்களில் மூளையதிர்ச்சி ஏற்பட்ட ஒரு விளையாட்டு வீரர் எப்போது விளையாடுவது என்பதில் விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் அவர்களின் வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே, எனவே இரண்டாவது தாக்க நோய் அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்போது அவர்களை மீண்டும் மிக விரைவாக அணிக்குள் திரும்ப அழைப்பதில்லை. வைத்தியர் உங்களை மீண்டும் விளையாடுவதற்கு ஆயத்தமாகும்படி சொல்வதற்குப் பல வழிகள் உள்ளன, ஒரு வைத்தியர் நீங்கள்  குணமடைந்துள்ளதாக கருதுவது எப்போதெனில்:

  • மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தனிந்தபிறகு
  • நீங்கள் மீண்டும் உங்கள் முழுமையான ஞாபக சக்தியையும், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும் மீளப்பெறும்போது
  • உங்களுக்கு ஜொக்கிங், ஸ்பிரின்டிங், சிட் - அப்ஸ் அல்லது புஷ் - அப்ஸ்களின் பின்னர் மூளையதிர்ச்சி அறிகுறிகள் ஏதும் ஏற்படாதபோது

வைத்தியர் ஓகே சொல்லிவிட்டால், நீங்கள் விளையாட்டை மீண்டும் ஆரம்பிக்கலாம். ஏதாவது அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக விளையாட்டை நிறுத்திவிடுங்கள். சரியாக நோய் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவீர்களாயின், உங்களால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நீண்டகால ஆரோக்கியப் பிரச்சினைகளின்றி குணமடைந்துவிடலாம்.

விளையாட்டின்போது மூளையதிர்ச்சியை தவிர்த்தல்

சரியான உபகரணங்களோடு ஆரம்பியுங்கள். எப்போதும் நீங்கள் ஈடுபட்டிருக்கும் விளையாட்டில் அல்லது சைக்கிளோட்டுதலின்போது சரியான தலைக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் அணிந்திருக்கவேண்டும். உங்களால் அனைத்து மூளைக்காயங்களையும் தவிர்க்க முடியாது. ஆனால் ஹெல்மெட்டுக்கள், மௌத்கார்ட்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கவசங்கள் மூலம் மூளைக்காயம் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கக்கலாம்.

  • பாதுகாப்பாக விளையாடுங்கள் - சரியான தலைக்கவசம் உங்களைப் பாதுகாக்கும் முதல் விடயமாகும். ஆனால் அபபடியிருந்தும் நீங்கள் மூளையதிர்ச்சியை அல்லது மூளைக்காயத்தை அடையக்கூடும், ஏனெனில் ஹெல்மெட்களால் உள்பகுதிக்குள் இருந்து ஏற்படும் காயங்களை நிறுத்த முடியாது. நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால்கூட உங்கள் தலையில் அடிபட்டதும் உங்கள் மூளை மண்டையோட்டுடன் மோதக்கூடிய ஆபத்து உள்ளது.
  • முற்றுமுழுதாக உங்கள் தலைக்கவசத்தை நம்பியிருக்காதீர்கள் - விளையாட்டில் சில விதி முறைகளில் இதுவும் ஒன்று. சரியான தொழில்நுட்பங்களை கற்று உங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்வதுடன் ஆபத்தான விளையாட்டுக்களை தவிர்ப்பது அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியது.

நீரிழப்பு என்பது நீங்கள் உட்கொண்ட நீரைவிட அதிகமான நீரை உடல் இழக்கும் ஒரு நிலையாகும். நீரிழப்பு வளரிளம் பருவத்தினருக்கு மட்டும் உரித்தான தீவிரமான பிரச்சினையல்ல அது குழந்தைகளுக்கும், இள வயதினருக்குக்கூட ஏற்படலாம். ஆனால் நீங்கள் உங்கள் தாகத்தை அலட்சியப்படுத்துவீர்களானால், நீரிழப்பு உங்களின் வேகத்தைக் குறைத்துவிடும்.

உங்கள் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரே உள்ளது. உங்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கும்போது உங்கள் உடலின் வழமையான இயக்கத்திற்குத் தேவையான நீரின் அளவு குறைந்துள்ளது என்றே அர்த்தமாகும். நீர் சிறிதளவு குறைந்தால் அது ஒரு பிரச்சினையல்ல, ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அப்பிரச்சினையை முற்றிலும் கவனிக்காமல் விடக்கூடும். தொடர்ந்து தேவையான அளவு நீரை அருந்தாமல் நீரிழப்பு ஏற்படுமாயின் அது சில நேரங்களில் உங்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

நீரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

வளரிளம் பருவத்தினரிடையே நீரிழப்பு ஏற்பட ஒரு பொதுவான காரணம் இரைப்பை நோயாகும். நீங்கள் வயிற்றுப்புழுவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, வாந்தி எடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக நீரிழப்பு ஏற்படும். உங்களுக்கு உணவு அல்லது நீர் அருந்த வேண்டிய உணர்வு ஏற்படாமலிருக்கக்கூடும். இதன்போது உங்கள் வயிற்றில் வைரஸ் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட வேறு காரணங்களால் நீரிழப்பு ஏற்பட்டு நீங்கள் நோயாளியாகலாம். உதாரணமாக உங்களுக்கு தொண்டைப் புண் ஏற்பட்டிருப்பின், எதையும் சாப்பிடவோ அல்லது நீர் அருந்தவோ முடியாமல் இருக்கும். அத்துடன் உங்களுக்கு காய்ச்சல்,  ஏற்பட்டிருப்பின் உங்கள் உடலை குளிர்விக்க எடுக்கும் முயற்சியாக தோலிலுள்ள நீர் ஆவியாவதும் ஒரு காரணமாக அமையலாம்.

அத்துடன் விளையாடும்போது நீரிழப்பு ஏற்படுமென்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விசேடமாக வெப்பமான நாளில் வியர்வை மூலம் அதிகளவு நீர் வெளியேறும்போது அதற்கேற்ற வகையில் நீரை அல்லது பானங்களைப் பருகுவது அவசியமானதாகும். சிறிய நீரிழப்புக்கூட உடல் மற்றும் மன செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நீரிழப்புக்கான அறிகுறிகள்

நீரிழப்பை எதிர்கொள்ள, உங்கள் உடலில் சரியான நீர் எஞ்சியிருக்கவேண்டும். முதலில், நீங்கள் பிரச்சினையை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தாகம் ஏற்படுவது நீரிழப்புக்கான ஒரு அறிகுறி என்றாலும், அது ஒரு முன்கூட்டிய அறிகுறியாக இருக்காது. அதேவேளை தாகத்தை உணரும்போது, நீங்கள் ஏற்கனவே நீரிழப்புக்கு உள்ளாகியிருப்பீர்கள். நீரிழப்புக்கான ஏனைய அறிகுறிகளாவன:

  • மயக்க உணர்வு மற்றும் தலைசுற்றல் 
  • உலர்ந்த அல்லது ஒட்டும் வாய்
  • சிறுநீர் கடும் நிறமாகவும் குறைவாகவும் வெளியேறல்

இந்நிலை அதிகரிக்கையில் உடல் பாகங்கள் மேலும் பாதிப்படைந்து உங்களுக்கு அதிகமான நோய்க்குணங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

நீரிழப்பைத் தவிர்த்தல்

நீரிழப்பை தவிர்ப்பதற்கு குறிப்பாக வெப்பமான நாட்களில் அதிக அளவான திரவங்களை அருந்துவதுதான் இலகுவான வழி. பொதுவாக நீர் ஒரு சிறந்த தெரிவாகும். நீரை அருந்துவதால் உடலில் கலரி அதிகரிக்காததுடன் ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்ததாகும்.

உங்களுக்குத் தேவையான நீரானது வயது, நிறை, உடற்செயற்பாடுகளின் அளவு மற்றும் சுற்றாடல் வெப்ப நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.

வெப்பமான நாட்களில் வெளியில் செல்லும்போது உங்கள் செயற்பாட்டிற்கு ஏற்றவாறு சரியான ஆடைகளை அணிந்துசெல்லுங்கள். சற்று தளர்வாக உள்ள ஆடைகளையும் முடிந்தால் தொப்பியையும் அணியுங்கள். அது உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் வியர்ப்பதையும் குறைக்கின்றது.

உங்களுக்கு உடல் வரட்சி அல்லது மயக்க உணர்வு ஏற்பட்டிருக்குமாயின் எங்காவது நிழல் உள்ள அல்லது குளிர்மையான இடத்தில் அமர்ந்து சற்று ஓய்வெடுப்பதுடன், அதிகமான நீரை அருந்துங்கள்.

வளரிளம் பருவத்தினர் மத்தியில் மயக்கம் ஏற்படுவது பொதுவான விடயமாகும். ஆனால் நல்ல செய்தி யாதெனில் அது வழக்கமானது என்பதுடன் தீவிரமானது அல்ல என்பதுதான்.

மயக்கத்தை சின்கோப் (மயக்கநிலை) (pronounced SIN-ko-pee) என்று அழைக்கப்படும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவடைவதனால் ஒரு திடீர் மயக்கநிலை ஏற்படுகின்றது.

மயக்கநிலையை ஒரு மருத்துவநிலை என்று சொல்லலாம், அதேவேளை ஒரு நல்ல ஆரோக்கியமுள்ள ஒருவருக்கும் இது ஏற்படும். உங்களுக்கு சில நேரங்களில் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் அல்லது உணர்வு இழத்தல் ஏற்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில், உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களில் முற்றுமுழுதாக மீண்டும் உணர்வு நிலைக்கு வந்து விடுவீர்கள்.

மயக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்

உங்களுக்கு மயக்கம் ஏற்படுவதற்கான சில காரணங்கள் இதோ:

  • உடல் தூண்டுதல்கள்: அதிக வெப்பத்தில் அல்லது நெரிசலில் இருத்தல், காற்றோட்டம் குறைவாக இருத்தல் என்பன வளரிளம் பருவத்தினர் மத்தியில் மயக்கம் ஏற்படுவதற்கான காரணங்களாகும். அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மற்றும் வெப்பமான பகுதிகளில் தொழில்புரிவதுடன் தேவையான அளவு நீரை அல்லது திரவங்களை அருந்தாமையும் (உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு) மயக்கம் ஏற்பட காரணமாகின்றது. நீரிழப்பிற்குக் காரணமான பசி மற்றும் சோர்வு போன்ற ஏனைய தூண்டுதல்களாலும் மயக்கம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் அதிக நேரம் நின்றுகொண்டிருத்தல், உட்கார்ந்திருந்துவிட்டு அல்லது படுத்திருந்துவிட்டு மிக விரைவாக எழுந்திருத்தலும் சிலருக்கு மயக்கம் ஏற்படக் காரணமாகின்றது.
  • உணர்ச்சிவசப்பட்ட மன அழுத்தம்: உணர்ச்சிகளான பயம், வலி, கோபம் அல்லது அதிர்ச்சி போன்றவை உங்கள் நரம்பு அமைப்பை பாதிக்கலாம், இதனால் இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்பட காரணமாகின்றது. இதனாலேயே பலருக்கு பயம் அல்லது அதிர்ச்சியான சம்பவமொன்று நிகழும்போது மயக்கம் ஏற்படுகின்றது.
  • அதிக காற்றோட்டம்: ஒருவர் அதிக காற்றோட்டம் காரணமாக வேகமாக மூச்செடுப்பாராயின், அவரது இரத்தத்தில் கார்பன் டயொக்சைட் (CO2) குறைகின்றது. இது அந்த நபரை மயக்கத்திற்குள்ளாக்குகின்றது. சிலருக்கு தீவிரமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கு, அதிர்ச்சி அல்லது அதிக கவலை போன்ற காரணங்களால் நீரிழப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு உள்ளாவதே காரணமாகும்.
  • போதைப் பொருள் பாவனை: சில சட்டவிரோத போதைப் பொருட்களை (கொக்கேய்ன் அல்லது மெதம்பெடமைன்) பாவித்தல் அல்லது இன்ஹேலர் பாவனையும் மயக்கத்திற்கு காரணமாகும்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல்: மூளை ஒரு மனிதனை விழிப்பாக வைத்திருப்பதற்கு அதற்குத் தேவையான அளவு சர்க்கரை இரத்தத்தின் மூலம் ஒழுங்காக கிடைப்பதை உறுதிசெய்கிறது. ஆனால் நீங்கள் நீரிழிவுக்காக இன்சுலின் அல்லது ஏனைய மருந்துகளை பெற்றுக்கொள்பவராயின் அல்லது நீங்கள் முறையாக சாப்பிடாமல் அளவுக்கு அதிகமாக வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சில நேரங்களில் நீரிழிவு இல்லாதவர்களும் முறையாக உணவு உட்கொள்ளாமல் பட்டினி கிடந்தால் சிலவேளை அவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.
  • இரத்த சோகை: ஒருவருக்கு இரத்த சோகை காரணமாக வழக்கத்தை விட இரத்தத்தில் குறைவான சிவப்பு இரத்த அணுக்கள் இருக்குமாயின், அவரின் மூளைக்கும் ஏனைய திசுக்களுக்கும் தேவையான ஒக்சிஜன் அளவு வழங்கப்படுவது குறைந்துவிடும். கடுமையான மாதவிடாய் ஏற்படும் பெண்பிள்ளைகளுக்கும் அல்லது இரும்புச்சத்துக் குறைபாடு போன்ற ஏனைய காரணங்களால் மக்களுக்கு இரத்தசோகை ஏற்படுவதுடன் பெரும்பாலும் மயக்க நிலை ஏற்படவும் காரணமாக அமைகின்றது.
  • கர்ப்பம்: சாதாரணமாக கர்ப்ப காலத்தில் உடலில் இரத்த ஓட்ட அமைப்பு உட்பட பல்வேறு உறுப்புக்கள் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனால் இரத்த அழுத்த அளவு குறைந்து பெண்களை மயக்க நிலைக்கு உள்ளாக்குகின்றது. இதற்கு மேலதிகமாக உடலின் நீரின் தேவை அதிகரிக்கின்றது. இதன்போது தேவையான அளவு பானங்களை அருந்தாவிடின் பெண்களுக்கு மயக்க நிலை ஏற்படுகின்றது. கர்ப்பப்பை வளர்ச்சியடையும்போது, அது அழுத்தப்பட்டு பெரிய இரத்த நாளங்களின் இரத்த ஓட்டம் பகுதியளவு தடைபடுவதுடன் மூளைக்கு வழங்கப்படும் இரத்தத்தின் அளவும் குறைகின்றது.
  • உணவு உட்கொள்ளுதலில் கோளாறுகள்: பசியற்ற மற்றும் பெரும்பசி உள்ளவர்களுக்கு பட்டினியிருத்தல், வாந்தி அல்லது அதிக உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால் நீரிழப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் மற்றும் இரத்த அழுத்தத்தில் அல்லது இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மயக்கம் ஏற்படுகின்றது.
  • இதயப் பிரச்சினைகள்: அசாதாரணமான இதயத்துடிப்பு மற்றும் இதயப் பிரச்சினைகள் ஒரு மனிதரை மயக்க நிலைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக ஒருவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்யும்போது மயக்கமடைந்தால் அவருக்கு இருதயப்பிரச்சினைகள் இருக்கலாம் என வைத்தியர் சந்தேகப்படலாம். இதனால் இதயத்தின் நிலைமையை கண்டறிய சில பரிசோதனைகளை மேற்கொள்வார்.

சில மருத்துவ நிலைகளில், வலிப்புத்தாக்கங்கள் அல்லது அபூர்வ வகையிலான தலைவலி போன்ற காரணங்கள் உங்களுக்கு மயக்கம் வருவதுபோல் தோன்றும். ஆனால் அது மயக்க நிலைக்கு ஒப்பானதல்ல.

மயக்க நிலைக்கு சிகிச்சையளித்தல்

உங்களுக்கு ஒரு முறை மட்டும் சிறிது நேரத்திற்கு மயக்கம் ஏற்படுமாயின் அதற்கான காரணம் மிகத்தெளிவானது. (வெப்பமான  நிலையில் இருத்தல், நெருக்கடி மிகுந்த இடத்தில் இருத்தல்) அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நீங்கள் மருத்துவ நிலையில் இருப்பின் அல்லது மருந்துக் குறிப்பின்படி மருந்து எடுப்பதாயின், நீங்கள் ஒரு வைத்தியரைப் பார்ப்பது நல்லது.

அத்துடன் உங்களுக்கு நெஞ்சுவலி, படபடப்பு, (காரணமின்றி இதயத்துடிப்பு அதிகரித்தல்) மூச்செடுப்பதில் சிரமம், வலிப்பு, அல்லது உடற்பயிற்சி செய்யும்போது அல்லது உடல் செயற்பாட்டின்போது மயக்கம் ஏற்படுதல், விசேடமாக உங்களுக்கு ஒரு தடவைக்கு மேல் மயக்கம் ஏற்பட்டால், உங்கள் வைத்தியருடன் பேசுங்கள். அடிக்கடி மயக்கம் ஏற்படுவது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

மயக்கம் அடைந்த ஒருவருக்கு உதவி செய்தல்

நீங்கள் மயக்கம் ஏற்பட்ட ஒருவருடன் இருப்பின், அந்த நபரை நேராக படுக்க வைக்கவும். ஆனால் அவர் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் குறித்த நபரை நகர்த்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். அதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தை மீட்க அவர் அணிந்திருக்கும் பெல்ட், கொலர் அல்லது டையை தளர்த்துங்கள். குறித்த நபரின் பாதத்தையும் கால்களின் கீழ் பகுதியையும் ஒரு பிரயாணப் பை அல்லது மடித்த ஜெக்கட்டின் மேல் தூக்கி வைப்பதன் மூலம் மூளையை நோக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

மயக்கமடைந்த ஒருவர் விரைவில் குணமாகிவிடுவார். சாதாரணமாக மயக்கத்தின் பின்னர் குறித்த நபர் சற்று பலவீனமாக இருப்பார், அந்நபர் சாய்ந்திருக்கிறார் என்பதை சற்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவரை விரைவாக எழுப்பிவிடுவது மீண்டும் மற்றுமொரு மயக்கம் ஏற்படக் காரணமாகிவிடும். எனவே அவரை சற்றுநேரம் சாய்ந்து அல்லது அமர்ந்து ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்.

மயக்கமடைதலை தவிர்த்தல்

சிலநேரங்களில் நீங்கள் மயக்கமடைவதற்கு முன்னர் திடீரென ஒருவித மயக்க உணர்வு ஏற்படும். உங்களுக்கு பார்வையில் வித்தியாசம் தெரியும். வேகமான இதயத் துடிப்பு, வியர்த்தல், மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றும். பெரும்பாலும் உங்களுக்கு மயக்கம் ஏற்படும் போது நீங்கள் வீசப்பட்டுவிடக்கூடும்.

மயக்கமடையப்போவதாக தோன்றினால் நீங்கள் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்:
  • முடிந்தால் கீழே படுத்துக்கொள்ளுங்கள்: இதனால் மயக்க அத்தியாயத்தை தவிர்த்து இரத்த ஓட்டம் மூளைக்கு செல்ல உதவியாக இருக்கும். உங்களுக்கு குணமாகிவிட்டது என நீங்கள் உணர்ந்தால் சில நிமிடங்கள் மெதுவாக உடலை நிமிர்த்தி அமர்ந்த நிலையில் இருந்துவிட்டு பின்னர் எழுந்திருங்கள்.
  • உங்கள் தலையை முழங்கால்களுக்கிடையில் கீழ்நோக்கி முன்னால் வைத்து உட்காருங்கள்: இதனால் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நீங்கள் குணமாகிய பின்னர் மெதுவாக நிமிர்ந்து உட்காருங்கள், பின்னர் எழுந்து நில்லுங்கள்.
  • நீங்களாகவே நீரிழப்பு ஏற்பட வழிவகுக்காதீர்கள்: குறிப்பாக வெப்பமான சூழ்நிலையில் வியர்ப்பதால் உடலுக்கு ஏற்படும் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தேவையான அளவு பானங்களை அருந்துங்கள். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்னரும் பின்னரும் தேவையான அளவு நீரை அருந்துங்கள்.
  • இரத்தச்சுழற்சிக்கு இடமளியுங்கள்: நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்க நேரிட்டால் இடைக்கிடை உங்கள் கால் தசைகளை சற்று விறைப்பாக்குங்கள். இதனால் இரத்தச் சுழற்சி சீரடைந்து மூளைக்கும் இதயத்திற்கும் இரத்தம் சென்றடைய உதவும். அத்துடன் அதிகமான சூடு மற்றும் காற்றோட்டமில்லாத இடத்தை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி என்பன சமபலனுடைய ஆரோக்கிய வாழ்க்கை முறையாகும். விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள், அதேவேளை விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்களைவிட குறைந்த அளவில் மன அழுத்தம் ஏற்படுபவர்களாகவும், மது, சிகரட், போதை வஸ்து பாவனை குறைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் சில பெண்பிள்ளைகள் அவர்களது உடலையும் விளையாட்டுத் தேவைகளையும் சமப்படுத்தாதலால் கடும் உடல்நலப் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

தீவிர விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் சில பெண் பிள்ளைகளுக்கு 'பிமேல் அத்லேட் டிரயட்' (female athlete triad) என அழைக்கப்படும் பிரச்சினை ஏற்படும் ஆபத்து உள்ளது. பெண்களுக்கான தடகள முக்காரணிப் பிரச்சினையானது முறையற்ற உணவுப் பழக்கம், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் ஒஸ்டியோபெரோசிஸ் போன்ற மூன்று வகையான நோய்களின் கூட்டாகும். பெண் தடகள வீரரரொருவருக்கு ஒன்று, இரண்டு அல்லது இம்மூன்றும் அடங்கிய பெண் தடகள முக்காரணி நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

காரணி #1: முறையற்ற உணவுப் பழக்கம்

தடகள முக்காரணிப் பாதிப்புள்ள பல பெண்பிள்ளைகள் சிறப்பாக விளையாடும் நோக்கத்துடன் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். முறையற்ற உணவு பழக்கத்தால் அவர்களது உடலின் சக்தி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சில வகையான உணவுப் பொருட்களை (கொழுப்பு அடங்கிய உணவுப்பொருட்கள்) தீய உணவுப் பொருட்களாக நினைத்து அவற்றைத் தவிர்க்கின்றனர். இவ்வாறு அவர்கள் தேவையான அளவு உணவை உட்கொள்ளாததால் உடலுக்குத் தேவையான அளவு கலோரி கிடைப்பதில்லை. இதனால் பசியற்ற உளநோய் மற்றும் பெரும்பசி உளநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.    

காரணி #2:  மாதவிலக்கின்மை

தீவிரமான உடற்பயிற்சி மற்றும் தேவையான அளவு உணவு உட்கொள்ளாமை போன்றவை முறையான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஹோமோன்களின் அளவு குறைய காரணமாக அமைகின்றது. அதன் விளைவாக பெண்களின் மாதவிடாய் முறையற்ற விதத்தில் ஏற்படவும் அல்லது முற்றாக நின்றுபோகவும்கூடும். முதலாவது வருடத்தில் எப்போதாவது மாதவிடாய் தவறுவது வழமையான விடயமாகும். தடகள வீராங்கனைகளுக்கு மாதவிடாய் தானாகவே தவறுவது 'அத்லேட் டிரயட்' பிரச்சினை காரணமாகத்தான் என்று அர்த்தம் இல்லை. அதற்கு கர்ப்பம் அல்லது மருத்துவ நிலை போன்ற வேறு காரணங்கள் ஏதாவது இருக்கலாம். நீங்கள் பாலியல் உறவில் ஈடுபட்டு மாத விடாய் தவறும்பட்சத்தில் நீங்கள் உங்கள் வைத்தியருடன் பேசவேண்டும்.

சில பெண் பிள்ளைகள் மிகத் தீவிரமாக விளையாட்டில் ஈடுபடுவதால் அவர்களுக்கு முதலாவது மாதவிடாய்கூட ஏற்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் மிகவும் கடுமையாக பயிற்சி எடுப்பதே காரணமாகும். ஏனையவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் தங்களது பயிற்சியை அதிகரித்து, உணவுக் கட்டுப்பாடுகளை பிழையான முறையில் மேற்கொண்டால் அவர்களின் மாதவிடாய் சுழற்சி நின்றுபோகலாம்.

காரணி #3: ஒஸ்டியோபொரோசிஸ்

அத்லேட் டிரயட் நோய் உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகவே இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக மற்றும் ஊட்டச்சத்து குறிப்பாக கல்சியம் குறைபாடு காணப்படுபவர்களுக்கு ஒஸ்டியோபொரோசிஸ், தடகள முக்காரணி நோயின் மூன்றாவது தோற்றத்திற்கு வழிவகுக்கும். ஒஸ்டியோபெரோசிஸ் நோய் ஏற்படுவதனால் எலும்பின் அடர்த்தி குறைவடைவதுடன் எலும்புகள் பலவீனமடைகின்றன. இந்த நிலையில் பெண் தடகள வீராங்கனைகளின் தொழில் பாதிக்கப்படும். அதனால் மன அழுத்தம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

வழக்கமாக வளரிளம் பருவப் பெண்களுக்கு அவர்களின் எலும்புகள் மேலும் வளர்ச்சியடையவேண்டும். இதை பீக் போன் மாஸ் (peak bone mass) என்று அழைப்பர். பெண்கள் இப்போதே தேவையான அளவு கல்சியத்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களின் எலும்புகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் தடகள முக்காரணிப் பிரச்சினைகள்

பெரும்பாலான பெண்பிள்ளைகள் போல நீங்களும் உங்கள் உடல் அளவு மற்றும் வடிவம் பற்றி அக்கறை கொள்வீர்கள். ஆனால் போட்டி மிகுந்த தடகள விளையாட்டு வீராங்கனையாக மாற நீங்கள் மேற்கொள்ளும் கடும் பயிற்சிகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

பெண் பிள்ளைகளில் தடகள முக்காரணிப் பிரச்சினைகள் உள்ளவர்கள் எப்போதும் தங்களது விளையாட்டைப் பற்றி பெரிதும் அக்கறை கொள்வதுடன் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள கிட்டத்தட்ட எதையும் செய்வார்கள். தற்காப்புக் கலை மற்றும் படகோட்டுதல் போன்ற விளையாட்டுக்கள், விளையாட்டு வீரர்களை எடையால் வகைப்படுத்துவதற்கு ஒரு உதாரணமாகும். எனவே பெண்பிள்ளைகளைப் பொறுத்தவரை பயிற்சித் திட்டத்தில் எடையை கவனத்தில் கொள்ளும்போது அது ஒரு முக்கிய பங்குவகிப்பதுடன் உணவு முறைக்கேட்டினால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகவும்கூடும்.

விளையாட்டுக்களில் பங்குபற்றும்போது, அங்கு ஒரு சிறிய தோற்ற மதிப்பீட்டானது உங்களை 'அத்லேட் டிரயட்' பிரச்சினைக்கு ஆளாக்கிவிடலாம். ஜிம்னாஸ்டிக்ஸ், சுழியோட்டம், பலே நடனம் என்பன மெலிந்த, ஒல்லியான உடல் வடிவத்தை மதிப்பிடும் விளையாட்டுக்களுக்கு உதாரணமாகும். எடை குறைப்பு உங்களுக்கு புள்ளிகளை அதிகரிக்க உதவும் என பயிற்சியாளர் அல்லது நடுவர்களால்கூட சொல்லப்படலாம்.

எனினும் தூர ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் உடல் அளவு மற்றும் வடிவம் அவ்வளவு முக்கியமில்லை. உங்கள் சக வீரர்கள், பெற்றோர், பங்காளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாம். ஏனெனில் சில பவுன்டுகள் எடை குறைவது உங்கள் திறமையை அதிகரிக்கும் என பிழையாக அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறான ஒரு சில பவுன்ட் எடை இழப்புக்கள் உங்களின் திறனை எந்த வகையிலும் அதிகரிக்காது என்பதே உண்மை. விளையாட்டில் போதுமான தகுதியுடனும் சுறுசுறுப்புடனும் போட்டியிட மேலதிக கொழுப்பை விட தசையையே கொண்டிருக்கவேண்டும். எனவே நீங்கள் உணவைக் குறைப்பதால் தசைகள் பசியால் வாடிவிடும். அத்துடன் நீங்கள் தேவையில்லாமல் எடையை இழப்பதால் மாதவிடாய் மற்றும் எலும்பு வளர்ச்சி போன்றவை பாதிக்கப்படலாம்.

மேலதிகமாக, சில போட்டி விளையாட்டு வீராங்கனைகள் குறைந்த சுய மதிப்பு, குடும்ப அழுத்தம் போன்ற காரணங்கள் அவர்களை உணவுக்கோளாறு ஆபத்திற்கு இட்டுச் செல்கிறது.

'அத்லேட் டிரயட்' நோய்க்கான அறிகுறிகள்

உங்களுக்கு பெண்களுக்கான அத்லேட் டிரயட்' ஆபத்துக் காரணிகள் இருப்பின், நீங்கள் ஏற்கனவே சில கோளாறுகளை அனுபவங்களாகவும் அறிகுறிகளாகவும் உணர்ந்திருப்பீர்கள் அவையாவன:

  • எடை இழத்தல்
  • முறையான பருவத்தில் மாதவிடாய் ஏற்படாமை
  • சோர்வு மற்றும் கவனம் செலுத்தும் திறன் குறைதல்
  • அழுத்த முறிவு (குறிப்பிடத்தக்க எந்தக் காயமுமின்றி ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்படுதல்)
  • ஏனைய காயங்கள்

'அத்லேட் டிரயட்' பிரச்சினை ஏற்படும் பெண்பிள்ளைகளுக்கு பொதுவாக ஏற்படும் உணவுக் கோளாறு அறிகுறிகள் வருமாறு:

  • எடை இழப்பு ஏற்பட்டிருந்தும் தொடர்ந்து உணவுக் கட்டுப்பாடு
  • உணவு மற்றும் எடை பற்றிய சிந்தனையுடன் இருத்தல்
  • உணவு நேரத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி கழிவறைக்கு செல்லுதல்
  • மலமிலக்கியைப் பயன்படுத்துதல்
  • உடையக்கூடிய நகங்களும் கூந்தலும்
  • புளிமியா உள்ள பெண்கள் அடிக்கடி வாந்தி எடுப்பதனால் பல் எனாமல் குறைகின்றது. இதனால் பல் துவாரம் ஏற்படும்.
  • குளிர் உணர்திறன்
  • இதயத் துடிப்பு வேகம் குறைதல் மற்றும் இரத்த அழுத்தம்
  • இதயக் கோளாறுகள் மற்றும் நெஞ்சு வலி

பெண்களுக்கான் 'அத்லேட் டிரயட்' நோய்க்கான சிகிச்சை

வைத்தியர் ஒருவரின் அல்லது தொழில் ரீதியான சுகாதார உத்தியோகத்தரின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த யாருக்காவது 'அத்லேட் டிரயட்' நோய் அறிகுறிகள் இருக்குமாயின் அவர் மீதான உங்கள் அக்கறையை கலந்தாலோசிப்பதுடன் சிகிச்சைப் பெறுவதற்காக அவரை ஊக்குவியுங்கள். அதற்கு அவர் மறுப்பாராயின் அவரது பெற்றோர், பயிற்றுவிப்பாளர், ஆசிரியர் அல்லது பாடசாலை தாதிக்கு உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் நண்பியின் ஆரோக்கிய விடயம் பற்றி கேள்வி கேட்பது, அவரது விடயத்தில் தலையிடுவதாக நீங்கள் கவலைப்படக்கூடும். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் உங்கள் கவலையானது உங்கள் நண்பியின் ஆரோக்கியத்தின்மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு ஒரு அடையாளமாகும்.

பெண்களுக்கான 'அத்லேட் டிரயட்' நோயைத் தவிர்த்தல்

நீங்கள் ஒரு வளரிளம் பருவ விளையாட்டு வீரராக இருப்பின், உங்கள் ஆரோக்கியத்தை நல்ல உயர் மட்ட நிலையில் வைத்திருக்க இதோ சில குறிப்புகள்:

  • உங்கள் மாதவிடாயை கண்காணியுங்கள்: உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை இலகுவில் மறந்துவிடலாம், எனவே அதை கலண்டரில் குறித்து வையுங்கள். அதில் மாதவிடாய் எப்போது ஆரம்பித்தது எப்போது நின்றது, இரத்தப் போக்கு குறிப்பிடத்தக்க அளவில் கடுமையானதா அல்லது எளிதானதா என்று பதிந்து கொள்ளுங்கள். அந்த முறையை கடைபிடிப்பதால் உங்களுக்கு மாதவிடாய் தவறுமாயின் அது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அத்தோடு நீங்கள் வைத்தியரிடம் சரியான தகவல்களைக் கொடுக்கவும் அது உதவியாக இருக்கும்.
  • உணவு அல்லது சிற்றுண்டியை தவிர்க்கவேண்டாம்: நீங்கள் தொடர்ச்சியாக பாடசாலைக்கு, பயிற்சிக்கு அல்லது போட்டிகளுக்கு செல்லவேண்டியிருந்தால், நேரத்தை சேமிப்பதற்காக உணவு மற்றும் சிற்றுண்டியை தவிர்க்கலாம். ஆனால் இப்பொழுது உண்ணும் உணவுதான் பின்னர் உங்கள் திறன்களை அதிகரிக்கிறது, எனவே உங்கள் லொக்கரில் அல்லது பையில் உங்களுக்குப்பிடித்த, விரைவாகவும், இலகுவாகவும் உண்ணக்கூடிய உணவுகளான பேகல்ஸ், சிறிய சீஸ் துண்டுகள், உப்பிடப்படாத பருப்பு மற்றும் விதைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்திருங்கள். 
  • வளரிளம் பருவ விளையாட்டு வீரர்களுக்காக பணியாற்றும் ஒரு உணவுக்கட்டுப்பாட்டு நிபுணர், அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் சென்று ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை தயாரித்துத் தருவதுடன் நீங்கள் உடலுக்குத் தேவையான அளவு கலோரிகளையும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, கல்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றையும் ஒழுங்காக பெற்றுக்கொள்கின்றீர்களா என்பதையும் கண்டறிவார். அத்துடன் தேவைப்படின் நீங்கள் உண்ணவேண்டிய மேலதிக உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.
  • நீங்கள் உங்களுக்காக செய்யுங்கள்: அணியினரிடமிருந்து, பெற்றோரிடமிருந்து அல்லது பயிற்றுவிப்பாளரிடமிருந்து வரும் அழுத்தங்கள் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை விரும்பத்தகாத செயலாக மாற்றிவிடும். நீங்கள் விளையாட்டை அனுபவிக்காவிடின், ஒரு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் உடல் மற்றும் வாழ்க்கையை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உடலுக்கு எந்த சேதத்தை விளைவித்தாலும், அந்த உடலுடன் நீங்கள்தான் வாழவேண்டுமேயொழிய, உங்களின் அணியினரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ அல்ல.

நீங்கள் தீவிரமாக விளையாட்டில் விசேடமாக அதிக ஓட்டங்களில் ஈடுபட்டிருப்பவராயின், உங்களுக்கு அரை பூட்டு (அடிவயிறும் தொடையும் சேருமிடத்தில்) திரிபு ஏற்பட அதிக வாய்புள்ளது. இதை அரை பூட்டு இழுப்பு என்றும் அழைப்பர். அரை பூட்டு திரிபு ஒன்று அல்லது இரண்டு தசைகளுக்கு ஒரு பகுதியளவான அல்லது முழு அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

இத்தசைகளில் எடக்டர் (adductor muscles) தசைகள் எனப்படும் ஐந்து வகையான தசைகள் உள்ளன: பெக்டினஸ், எடக்டர், பிரெவிஸ் மற்றும் எடக்டர் லொங்குஸ் (குறுகிய எடக்டர்) ஆகியன உங்கள் அரை பூட்டிலிருந்து தொடை வரை இயங்குகின்றது. கிரேசிலிஸ் மற்றும் எடக்டர் மெக்னஸ் (நீண்ட எடக்டர்ஸ்) ஆகிய தசைகள் அரை பூட்டிலிருந்து உங்கள் முழங்கால்வரை இயங்குகின்றது.

அரை பூட்டு திரிபு பொதுவாக ஓடவேண்டியும் குதிக்கவேண்டியும் ஏற்படும் விளையாட்டுக்களான உதைப்பந்தாட்டம், ரக்பி, கூடைப்பந்து மற்றும் தடகளம் போன்றவற்றில் வழக்கமாக ஏற்படும் ஒன்றாகும். அவை முதலாம் தரத்திலிருந்து வகைப்படுத்தப்பட முடியும், இது சில அறிகுறிகளுடனான சிறிய காயங்களையுடையது அத்துடன் குறுகிய காலத்திற்குள் குணமாகக்கூடியது. 3 ஆம் தர திரிபானது முற்றிலுமாக அல்லது கிட்டத்தட்ட முற்றிலுமாக அரை பூட்டு தசை கிழிந்த நிலையைக் குறிக்கும்.

அரை பூட்டு திரிபு ஏற்படுவதற்கான காரணங்கள்

பொதுவாக எடக்டர் தசைகள் அதிக தூரத்திற்கு விரிவடைதுடன் கிழிய ஆரம்பிக்கும்போது இடுப்புத் திரிபு ஏற்படுகின்றது. அத்துடன் எடக்டர் தசைகள் ஆயத்தமில்லாமல் (வழக்கமாக நீங்கள் உடலுக்கு முறையாக ஊக்கப்படுத்தும் பயிற்சி செய்யாது விளையாட்டில் சடுதியாக ஈடுபடும்போது) திடீரென அவற்றின் மீது அழுத்தம் சுமத்தப்படுவதால் அல்லது இரண்டு தசைகளில் ஒன்றிற்கு தாக்குதல் ஏற்படும்போது அரை பூட்டு திரிபு ஏற்படுகின்றது.

அரை பூட்டு திரிபு ஏற்படுவதற்கான பிரதான காரணிகள் பின்வருமாறு:

  • குறுகிய தூர ஓட்டம், வேகத்தை சடுதியாக அதிகரித்தல், திடீர் திசை மாற்றங்கள்: உதாரணமாக தடை தாண்டி ஓட்டம், நீளம் பாய்தல், கூடைப்பந்து, கால்பந்து மற்றும் ரக்பி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
  • இறுக்கமான தசைகள்: முறையாக ஊக்கப்படுத்தும் பயிற்சி செய்யாத, விரிவடையாத தசைகள் அதிகமாக கிழிபட வாய்ப்புகள் உள்ளன. இது விசேடமாக குளிர்ச்சியான கால நிலையின்போது ஏற்படுகின்றது.
  • பலவீனம் அல்லது சோர்வு: பலவீனமான தசைகளால் உடற்பயிற்சியின் அழுத்தத்தை குறைந்த அளவே சமாளிக்க முடியும். மற்றும் தசைகள் களைப்படைந்து சக்திகளை உறிஞ்சக்கூடிய சில திறன்களை இழத்தல் போன்ற காரணங்களால் காயம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
  • காயமொன்று ஏற்பட்டபின் மீண்டும் விரைவாக விளையாட வருதல்: அரை பூட்டு திரிபு முழுதாக குணமடைய காலமும் ஓய்வும் தேவைப்படுகிறது. திரிபொன்றின் பின்னர் விறைவாக மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவது மீண்டும் திரிபு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

அரை பூட்டு திரிபிற்கான அறிகுறிகள்

அரை பூட்டு திரிபுக்கான அறிகுறிகள் திரிபுகளைப் பொறுத்து சற்று மாறுபடும். அனைத்து இடுப்புத் திரிபுகளின்போதும் பாதிக்கப்பட்ட பகுதியில் வலி ஏற்படுவதுடன் மென்மையடைந்து காணப்படும், நீங்கள் உங்கள் பாதங்களை ஒன்றாக இணைக்கும்போது அல்லது முழங் கால்களை உயர்த்தும்போது வலி ஏற்படும். திரிபொன்று கடுமையாக இருப்பின், காயத் தின்போது உங்களுக்கு உறுத்தல் மற்றும் முறிவு உணர்வும் அதற்கு பின்னர் கடுமையான வலியும் ஏற்படும்.

அரை பூட்டு திரிபைத் தவிர்த்தல்

அரை பூட்டு திரிபை தவிர்க்கக்கூடிய பிரதானமான விடயமானது நீங்கள் உடற்பயிற்சி அல்லது தீவிர உடற் செயற்பாட்டிற்கு செல்வதற்கு முன்னர் முறையான 'வோம் - அப்' மற்றும் தசை விரிவை ஏற்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். உங்களை முறையாக தயார்படுத்த ஒரு இடத்தில் ஓரிரண்டு நிமிடங்கள் ஓடுங்கள், அல்லது குதியுங்கள். பின்னர் சில மாறுபட்ட நீட்சிகளை செய்யுங்கள். பயிற்றுவிப்பாளர் அல்லது விளையாட்டு மருத்துவ நிபுணர் இதை எவ்வாறு செய்வதென உங்களுக்குச் சொல்லித் தருவார்.

அரை பூட்டு திரிபை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய ஏனைய விடயங்கள் பின்வருமாறு:

  • வருடம் முழுவதும் உங்கள் தசைகளை வலுவானதாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக்கொள்ளுங்கள். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிறந்த தசை நீட்சித் திட்டத்தை பின்பற்றுங்கள்.
  • மெதுவாக உங்கள் உடற்பயிற்சியின் வேகத்தை அதிகரியுங்கள். நீங்கள் ஓடும் தூரத்தையும், நீங்கள் விளையாட்டொன்றில் ஈடுபடும் நேரத்தையும் ஒரு வாரத்திற்கு 10% வீதத்திற்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
  • உங்கள் அரை பூட்டில் வலி ஏற்படுமாயின் உடற்பயிற்சியை உடனடியாக நிறுத்திவிடுங்கள்: உங்கள் திரிபடைந்த அரை பூட்டைப்பற்றி கவலைப்படுவீர்களாயின், அதற்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள். அத்துடன் உங்களுக்கு ஏற்படும் வலி குறைவடையும் வரையும், காயம் ஏற்பட்ட எடக்டர் தசைகள் பூரணமாகக் குணமடையும்வரை உங்கள் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கவேண்டாம்.
  • விளையாட்டின்போதும் உடற்பயிற்சியின்போதும் முறையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். உங்கள் பயிற்றுவிப்பாளர் விளையாட்டுக்கான குறிப்புகள் மற்றும் குறிப்புகளை வழங்குவார்.
  • உங்கள் கால்களுக்கு நன்கு பொருந்தக்கூடிய சப்பாத்துக்களை அணியுங்கள். நீங்கள் அணியும் சப்பாத்து அதன் வடிவத்தை இழந்திருப்பின், அதை ஒதுக்கவிட்டு புதிய சப்பாத்தொன்றை வாங்குகள்.

நீங்கள் ஒரு சுறுசுறுப்பான வளரிளம்பருவ விளையாட்டு வீரராயின், நீங்கள் ஏற்கனவே தொடை திரிபு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பொதுவாக விளையாட்டின்போது ஏற்படும் காயமாகும். மூன்று தசைகள் உங்கள் காலின் பின் பகுதியில் தொடையிலிருந்து முழங்கால்வரை இருக்கின்றன: அவை பைசெப்ஸ் பெமோரிஸ், செமி டென்டினொசஸ் மற்றும் செமி மெம்ப்ரனொசஸ் என்று அழைக்கப்படுகின்றது. அவை உங்கள் இடுப்பை வளைக்கவும், முழங்காலை நீட்டிக்கவும் உதவுகின்றன. தொடை திரிபு சில நேரங்களில் தொடை இழுப்பு என அழைக்கப்படுகின்றது. தொடை திரிபால் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேட்பட்ட தசைகள் அதிக தூரத்திற்கு நீட்சியடைவதால் கிழிபட ஆரம்பிக்கின்றது.

தொடை திரிபு சிறிதளவு வலியை ஏற்படுத்தக்கூடியதுடன் குறுகிய நேரத்திற்குள் குணமாகக்கூடியது. ஆனால் முற்று முழுதான தசை கிழிதலின்போது, சத்திர சிகிச்சையால் சரிசெய்ய வேண்டிவரலாம். அத்துடன் சில வாரங்களுக்கு நீங்கள் ஊன்றுகோள் பாவிக்கவும் நேரிடலாம்.

தொடை திரிபுக்கான காரணங்கள்

பொதுவாக நீங்கள் ஓடும்போது உங்கள் கால்கள் தரையில் பதிவதற்கு முன்னர் முழு அளவில் நீட்டப்படுவது போன்ற உங்கள் தசைகளுக்கு அதிக சுமையேற்றப்படுவதன் காரணமாக தொடை திரிபு ஏற்படுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில், தொடை தசைகள் அதிக தூரத்திற்கு நீட்சியடைகின்றன, அவ்வாறு அவற்றுக்குக் கட்டாயமாக ஒரு திடீர் சுமையை ஏற்றுவது, அதாவது உங்கள் கால் தரையில் பதியும்போது உங்கள் முழு எடையும் அதன் மேல் ஏற்றப்படும்போது அத்தசைகள் கிழிய ஆரம்பிக்கின்றன.

நீங்கள் குறுகிய தூரம் மிக வேகமாக ஓடுதல் அல்லது குதித்தல் (தடகள, உதைப்பந்தாட்டம், ரக்பி, கூடைப்பந்து மற்றும் நடனம்) போன்றவற்றில் ஈடுபடும் ஒருவராக இருப்பின் உங்களுக்கு தொடை திரிபு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறான காயங்கள் பொதுவாக வளரிளம் பருவத்தினரிடையே வேகமாக வளர்ச்சியடைபவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடியவை. ஏனெனில் ஒரு நபரின் கால் எலும்புகள் தசைகளைவிட மிக வேகமாக வளர்ச்சியடையலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் தசைகளை வலுக்கட்டாயமாக நீட்சியடையவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

தொடை திரிபை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான விடயங்கள் பின்வருமாறு:

  • முறையாக ஊக்கப்படுத்தும் பயிற்சியை மற்றும் தசை நீட்சியை மேற்கொள்ளாது உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்: இறுக்கமான தசைகளுக்கு, வலுவான நெகிழ்வுத்தன்மையுடனும், நீட்சியுடனுமான தசைகளைவிட திரிபு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
  • முறையான வடிவம் இல்லாதிருத்தல் அல்லது அதை அதிகமாக செய்தல்: பலவீனமான தசைகளால் உடற்பயிற்சியின் அழுத்தத்தை குறைந்த அளவே சமாளிக்க முடியும். மற்றும் தசைகள் களைப்படைந்து சக்திகளை உறிஞ்சக்கூடிய சில திறன்களை இழத்தல் போன்ற காரணங்களால் காயம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
  • கால்களின் தசைகளின் அளவு சமநிலையற்றிருத்தல்: உங்கள் கால்களின் முன் பகுதியில் உள்ள தசைகள், தொடை தசைகளைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பது அசாதாரணமானதல்ல. நீங்கள் ஓட்டத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடும்போது குவாட்ரிசெப்ஸ் தசைகளைவிட தொடை தசைகள் விரைவாக சோர்வடைகின்றன. இதனால் அவற்றிற்கு பெரும் அழுத்த ஆபத்தை உண்டு பண்ணலாம்.
  • தவறான தொழில்நுட்பம்: உங்களுக்கு சிறந்த ஓட்ட யுக்திகளை அல்லது தொழிநுட்பத்தைப் பயன்படுத்தாவிட்டால், அது தொடை தசைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிடும்.
  • காயம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் விரைவாக விளையாட வருவது: தொடை தசை திரிபு முழுமையாக குணமடைவதற்கு அதிக காலமும், ஓய்வும் தேவை. தொடை தசை திரிபு ஏற்பட்டு முழுமையாக குணமடைவதற்கு முன்னர் விரைவாக மீண்டும் விளையாட வருவது மீண்டும் உங்கள் தொடை காயமடையும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

தொடை திரிபுக்கான அறிகுறிகள்

நீங்கள் ஓடும்போது உங்கள் தொடை தசைகளில் திரிபு ஏற்பட்டிருப்பின் அது உங்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும். உங்களுக்கு சிறிதான வலி மற்றும் கால்களின் பின்புறத்தில்  உறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதன்போது உங்களால் ஓட முடியாது, நீங்கள் விழுந்துவிடலாம்.

தொடை தசை திரிபுக்கான ஏனைய அறிகுறிகள்
  • உங்கள் கால்களை வளைக்கவோ அல்லது நீட்டவோ முனையும்போது தொடையின் பின்புறத்தில் வலி ஏற்படுதல்.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம், மென்மைடையதல் மற்றும் சிராய்வுப் புண் ஏற்படுதல்.
  • காயம் ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு உங்கள் கால்கள் பலவீனமாக இருத்தல், குறிப்பிட்ட தீவிர திரிபு அல்லது முழுமையான தசை கிழிவு நிகழ்ந்தபின் கிழிக்கப்பட்ட தசையில் இடைவெளி இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுதல்.

தொடை திரிபுக்கான சிகிச்சைகள்

உங்கள் தொடை தசையில் வலி ஏற்படுமாயின் விளையாட்டை அல்லது பயிற்சியை உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் திரிபடைந்த தொடைப் பகுதியைப்பற்றி கவலைப்படுவீர்களாயின், அதற்கு ஓய்வெடுப்பதற்கான நேரத்தைக் கொடுங்கள். அத்துடன் உங்களுக்கு ஏற்படும் வலி குறைவடையும் வரையும், காயம் ஏற்பட்ட எடக்டர் தசைகள் முழுமையாக வழமை நிலைக்குத் திரும்பும் வரை உங்கள் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவேண்டாம்.

தொடை திரிபை தவிர்த்தல்

தசைகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது தசை திரிபை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். அதைத் தவிர்ப்பதற்கும், அதிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்வதற்குமான சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன. 

  • நீங்கள் உடற்பயிற்சி அல்லது தீவிர உடற் செயற்பாட்டிற்கு செல்வதற்கு முன்னர் முறையான வோம் - அப் பயிற்சியில் ஈடுபடுதல் வேண்டும். உங்கள் உடலை தயார்படுத்த ஒரு இடத்தில் ஓரிரண்டு நிமிடங்கள் ஓடுங்கள், அல்லது குதியுங்கள். பின்னர் சில மாறுபட்ட தசை நீட்சிப் பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் பயிற்றுவிப்பாளர் அல்லது விளையாட்டு மருத்துவ நிபுணரிடம் இவைபற்றி சற்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விளையாடிய பின்னரும் சில மாறுபட்ட தசை நீட்சிப் பயிற்சிகளைச் செய்யுங்கள். இதன்போது மெதுவாக உங்கள் தசைகளை நீட்சி செய்யுங்கள், ஒவ்வொரு நீட்சிக்கும் 30 விநாடிகள் அல்லது அதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • வருடம் முழுவதும் உங்கள் தசைகளை வலுவானதாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக்கொள்ளுங்கள். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிறந்த தசை நீட்சி பயிற்சித் திட்டத்தை பின்பற்றுங்கள். இதனால் நீங்கள் தீவிரமான ஒரு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதும் உங்கள் தசைகளுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது.
  • மெதுவாக உங்கள் உடற்பயிற்சியின் வேகத்தை அதிகரியுங்கள். நீங்கள் ஓடும் தூரத்தையும், விளையாட்டொன்றில் ஈடுபடும்; நேரத்தையும் ஒரு வாரத்திற்கு 10% வீதத்திற்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அதிக அளவில் குதித்து மேற்கொள்ள வேண்டிய விளையாட்டில் ஈடுபட்டிருப்பவராயின் நீங்கள் ஜம்பர்ஸ் மூட்டு (Jumper's Knee) யைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த நிலைமையை பெடெல்லர் டென்டொனிட்டிஸ் அல்லது பெடெல்லர் டென்டினோபதி எனவும் அழைப்பர். patella (kneecap) எனப்படும் முழங்காலின் வட்ட வடிவ எலும்பை பிரதான எலும்புடன் (shin bone) இணைக்கும் தண்டு போன்ற திசுவான படெல்லர் தசைநாரில் ஏற்படும் வீக்கம் அல்லது காயமாகும். ஜம்பர்ஸ் மூட்டு என்பது அளவுக்கு அதிகமான பாவனையால் ஏற்படும் காயமாகும் (உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மீண்டும் மீண்டும் செயல்படுவதால் திசு சேதம் அல்லது எரிவு ஏற்படுவதால் இது ஏற்படுகின்றது.) 

ஜம்பர்ஸ் மூட்டியின்போது, படெல்லா தசைநார் சேதமடைகின்றது. முழங்கால்களை விரிக்க தசைநார்கள் மிக முக்கியமானதாகும். படெல்லா தசைநார்கள் சேதமடைந்ததும் வட்டவடிவ எலும்புக்கு (படெல்லா) எந்தவிதமான உறுதுணையோ அல்லது உதவியோ இல்லாமல் போய்விடுகிறது. இதனால் முழங்காலில் வலியும் வீக்கமும் ஏற்பட்டு கால்களை நீட்டுவதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

உங்கள் முழங்கால் எவ்வாறு செயற்படுகின்றது?

எவ்வாறு ஜம்பர்ஸ் மூட்டு ஏற்படுகிறதென்பதை விளங்கிக்கொண்டால், அது முழங்கால் எவ்வாறு செயற்படுகிறதென்பதை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். உடலில் மிகப்பெரிய மூட்டு முழங்கால்தான். அது  காலுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், கால்களை திருப்புவதற்கும் குனிவதற்கும், நேராக்கவும் உதவுகின்றது. உடலின் பல பாகங்கள் முழங்காலுடன் தொடர்புகொள்வதுடன் அது முறையாக செயற்படவும் அனுமதிக்கின்றன.

  • தொடை எலும்பு, கால் எலும்பு மற்றும் படெல்லா என அழைக்கப்படும் வட்ட வடிவான எலும்பு (knee cap) போன்ற எலும்புகள் முழங்காலுக்கு தேவையான, உடலின் எடையை தாங்கக்கூடிய சக்தியைக்கொடுத்து உதவியாக செயல்படுகின்றன. முழங்காலில் சந்திக்கும் எலும்புகள் அது சுமுகமாக வளைவதற்கு அனுமதிக்கின்றன.
  • எலும்புகள் தேவையானவாறு திரும்புவதற்கும், நேராக்கவும் தேவையான மூட்டுக்களுக்கு உதவியாக தசைகள் இருக்கின்றன. இத்தசைகளாவன, முழங் கால்களைச் சுற்றியிருக்கும் குவார்டிசெப்ஸ் (தொடையின் முன்னால் இருக்கும்) தசைகள் மற்றும் ஹாம்ஸ்ட்ரிங் (தொடையின் பின்னால் உள்ள தசைகள்) ஆகியவையாகும். குவார்டிசெப்ஸ் தசைகள் கால்களை நேராக்கவும், நீட்டிக்கவும் உதவுகின்ற அதேவேளை ஹாம்ஸ்டிரிங்க் தசைகள் முழங்கால்களை திருப்புவதற்கு உதவுகின்றன.
  • வலுவுடைய பட்டைகளான தசை நாண்கள் எலும்புகளுடன் இணைக்கின்றன. முழங்காலின் முன்னால் உள்ள தசைநார்களாவன குவார்டிசெப்ஸ் தசைநார்கள் மற்றும் படெல்லர் தசைநார்கள் போன்றவையாகும். குவார்டிசெப்ஸ் தசைநார்கள் படெல்லா தசைநாரின் மேல் பகுதியுடன் இணைவதுடன் கால்களை நீட்ட உதவுகின்றது. படெல்லார் தசைநாரானது வட்டவடிவிலான எலும்பு (knee cap) மற்றும் டிபியாவின் மேல்பகுதியுடன் இணைகின்றது.
  • தசைநாண்களைப்போலவே தசைநார்களும் வலுவான பட்டைகளைக்கொண்ட திசுக்களால் ஆனவை, அது எலும்புகளுடன் எலும்புகளை இணைக்கிறன.

எலும்புகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஒன்றாக தொழில்பட்டு முழங்காலை நகருவதற்கு, வளைவதற்கு, நேராக்குவதற்கு, குதிக்க மற்றும் கால்களை நிலத்தில் பதிய வைக்க தேவையான ஆதார சக்தியை வழங்கி கால்களை செயல்படவைக்கின்றன.

ஜம்பர்ஸ் மூட்டு ஏற்படுவதற்கான காரணங்கள்

தொடர்ச்சியாக பாய்தல், குதித்தல் மற்றும் வேகமாக ஓடும்போது சடுதியாக திசைகளை மாற்றுதல் காரணமாக தசைகளில் திரிபுகள், கிழிவுகள் மற்றும் பெடலர் தசைநார்களில் சேதம் என்பன ஏற்படுகின்றன. நீங்கள் வழக்கமாக தடகள விளையாட்டுக்கள் (விசேடமாக உயரம் பாய்தல்), கைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஓட்டம் மற்றும் உதைப்பந்தாட்டம் போன்ற தொடர்ச்சியாக குதித்து மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்களில் ஈடுபடுபவராயின், நீங்கள் அதிக அளவில் உங்கள் முழங்கால்களுக்கு அழுத்தம் கொடுப்பீர்கள்.

ஜம்பர்ஸ் மூட்டு பாதிப்பால் சிறிய காயங்கள் ஏற்படலாம், அது அவ்வளவு தீவிரமாக இருக்காது. இதனால் பல விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபடும்போது, காயங்களை உதாசீனம் செய்துவிட்டு, அவர்களாகவே சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியது யாதெனில் ஜம்பர்ஸ் மூட்டு மிகவும் தீவிரமானது. அது காலப்போக்கில் மோசமடைந்து இறுதியில் சத்திர சிகிச்சை செய்யவேண்டி ஏற்படலாம். முன்கூட்டியே சிகிச்சையில் கவனம் செலுத்துவதால் முழங்காலின் தொடர்ச்சியான சேதத்தை தவிர்க்கலாம்.

ஜம்பர்ஸ் மூட்டின் அறிகுறிகள்

ஜம்பர்ஸ் மூட்டுக்கான பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • பெடலர் தசை நாரில் நேரடியாக வலி ஏற்படுதல் (அல்லது குறிப்பாக முழங்காலுக்கு கீழே)
  • குறிப்பாக முழங்காலில் இருக்கும்போது, பாயும்போது, ஸ்குவேட்டிங் செய்யும்போது, படிகளில் ஏறும்போது விறைப்பு ஏற்படும்
  • முழங்காலை திருப்பும்போது வலி ஏற்படுதல்
  • குவார்ட்ரிசெப்ஸ் தசையில் வலி ஏற்படுதல்
  • கால்கள் அல்லது கெண்டையில் பலவீனம்

குறைவாகக் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • சமநிலை பிரச்சினைகள்
  • முழங்காலின் கீழ்ப்பகுதியில் வெப்பமடைதல், மென்மடையதல், வீக்கமடைதல்

ஜம்பர் முட்டுக்கான சிகிச்சைகள்

பலருக்கு தெரபி வகையிலான சிகிச்சை செய்யப்படுகின்றது. அவர்களில் பலருக்கு பழமைவாத பராமரிப்புத் திட்டங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகின்றது. அவை பின்வருமாறு:

  • செயற்பாட்டு மொடிபிகேஷன்: முழங்கால் மூட்டு (வட்ட வடிவ எலும்பு knee cap) க்கு அழுத்தங்களைக்கொடுக்கும் செயற்பாடுகளை குறைத்தல். (உதாரணமாக: குதித்தல் அல்லது ஸ்குவேட்டிங்) சில 'லோடிங்' உடற்பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படலாம்.
  • க்ரையோதெரபி: விசேட செயற்பாடுகளையடுத்து ஐஸ் கட்டிகளை 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு  4 - 6 தடவைகளுக்கு மூட்டில் தடவுங்கள்.
  • மூட்டு இயக்கம் மற்றும் இயக்க வடிவியல் மதிப்பீடு: இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டு போன்ற கூட்டு வரம்பில் மதிப்பிடப்படுகிறது.
  • இழுத்தல்: இழுத்தல் (1) இடுப்பையும் முழங்காலையும் (தொடை, கெண்டைக்கால், இலியோப்சோஸ், நேர்த்தசை, எடக்டர்ஸ்) போன்றவற்றை. வளைத்தல் (2) இடுப்பு மற்றும் முழங்கால் (குவார்டிசெப்ஸ், குளுடீல்ஸ்). விரிவாக்கம் (3) இலியோடிபியல் பேன்ட் (இடுப்பு மற்றும் கால்களின் மேல் பகுதியிலுள்ள பெரிய தசைநார்) மற்றும் (4) சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் முழங்கால் மூட்டு (knee cap) கட்டமைப்புக்களை நீட்டுதல்.
  • வலுவூட்டுதல்: இதற்காக குறிப்பிட்ட சில பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • மற்றும் மூட்டு, தசை மற்றும் தசைநார்களுக்கு தெரபி சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

முழங்கால் காயங்கள்

பொதுவாக நீங்கள் ஒரு சுறுசுறுப்பான வளரிளம் பருவ விளையாட்டு வீரராயின் உங்களுக்கு முழங்கால் காயம் ஏற்படும். அத்துடன் ஒரு கிழிந்த மத்திய இணைக் கட்டுநாண் (MCL), மற்றும் முழங்காலுக்கு ஸ்திரத்தன்மையை கொடுக்கும் தசைநார் போன்றவை பொதுவான முழங்கால் காயங்களுக்கு உட்படும். 

MCL இனால் என்ன நடக்கின்றது?

MCL என்பது முழங்காலின் நான்கு பிரதான தசைநார்களில் ஒன்றாகும். அது முழங்காலின் பக்கவாட்டில் அமைந்துள்ளது. தசைநாரின் ஒரு பக்க முனை தொடை எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், தசைநாரின் மற்ற முனை கால் எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு இணை கட்டுநாண் (MCL), அதே நிலையில் முழங்காலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆஊடு ஆனது முழங்கால் மூட்டுக்களை அளவுக்கு அதிகமாக விரிவாக்கம் செய்யாமல் தடுக்கின்றது.

MCL கிழிபடுவதற்கான காரணங்கள்

நீங்கள் உதைப்பந்தாட்டம் அல்லது ரக்பி போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளவராயின் உங்களுக்கு அதிக அளவில் கிழிபட்ட ஆஊடு கிழிபடும் வாய்ப்பு உள்ளது. முழங்காலின் வெளிப்பகுதி தாக்கப்படுதல், கட்டுக்கடங்காமல் உள்பக்கம் திரும்புதல் போன்ற காரணங்களால்  இக்காயம் ஏற்படுகின்றது. இதனால் ஆஊடு க்கு அழுத்தம் ஏற்பட்டு, ஒரு கயிறு போன்ற பட்டி இழுப்பட்டு அல்லது பாதியாக உடைந்துவிடுகின்றது.

கிழிபட்ட MCL க்கான அறிகுறிகளும் அடையாளங்களும்

ஒருவருக்கு பாதியளவில் அல்லது முழுமையாக கிழிந்த ஆஊடு க்கான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் அது அவரின் காயத்தின் தீவிரத்தைப் பொறுத்ததாகும்.

வலி மற்றும் வீக்கம் மிகத் தீவிரமாக இருக்கலாம், சிலருக்கு (கடுமையான காயத்தின்போது) நடக்கும்போது எடை தாங்க முடியாமல் உறுதியற்ற உணர்வு இருக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட காலில் எடை தாங்க முடியாத தன்மை இருக்கும். 

பலர், குறிப்பாக இந்தக் காயங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லது இதற்கு முன்னர் தசைநார் கிழிவு ஏற்பட்டவர்கள், நடக்கும்போது தசைநார்களில் ஒரு பொப் சத்தம் கேட்கின்றதென்று தெரிவித்துள்ளனர்.

கிழிந்த MCL க்கான சிகிச்சைகள்

உங்களுக்கு பாதியளவில் அல்லது முழு அளவில் ஆஊடு  பாதிப்பு ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு காயம் ஏற்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் கட்டாயம் வலி ஏற்படும். அதிர்ஷ்டவசமாக, இக்காயம் 1 - 6 வரையான வார காலத்துக்கு உங்கள் முழங்கால் மூட்டுக்கு ஓய்வு கொடுத்தால் அது தானாகவே குணமாகிவிடும்.

கிழிபட்ட MCL காயங்கள் ஏற்பட்ட பலருக்கு மூட்டை வலுப்படுத்த தேவையான சிகிச்சை மேற்கொள்ளவேண்டியேற்படும்.

உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்தால், களத்தில் அல்லது வீட்டில், உங்கள் அனைத்து செயற்பாடுகளையும் விட்டுவிட்டு  (மேலும் காயம் ஏற்படுவதை தவிர்க்க) உடனடி மருத்துவ உதவியை நாடுங்கள். அதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஐஸ் கட்டிகளை வைப்பதால் காயம் முடிந்தவரை வீக்கத்தை குறைக்கும். முழங்காலுக்கு சுமையை ஏற்றாதீர்கள்.

நீங்கள் ஒரு வளரிளம் பருவத்தினராக மற்றும் விளையாட்டு வீரராக இருப்பின், உங்களுக்கு ஒஸ்குட்-ஸ்லாட்டர் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

1993 ஆம் ஆண்டு வைத்தியர் ஒஸ்குட் மற்றும் கார்ல் ஸ்லாட்டர் ஆகியோர் முதன் முதலாக தங்கள் நோயாளிகளின் அறிகுறிகளை அடையாளம் கண்ட பின்னர் இந்த நோயைப்பற்றி விபரித்திருந்தார்கள். வைத்தியர்கள் இந்த நோயை பெரும்பாலும் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களுக்கு ஏற்படும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினையாக இனங்கண்டார்கள். இது பெரும் பாலும் திடீர் வளர்ச்சியின்போது ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

OSD நோய் ஏற்பட காரணம்

ஒஸ்குட்- ஸ்லாட்டர் நோய் முழங்காலை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் காயமாகும். அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்ற அதிக உடல் செயற்பாடுகளின் அழுத்தம் காரணமாக முழங்கால் சில்லு (kneecap) இலிருந்து (படெல்லா என அழைக்கப்படுகின்றது) முன் எலும்பு (முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையிலான) வரை இணைக்கும் தசைநாரில் வீக்கமும் வலியும் ஏற்படுவதை இது குறிக்கும்.

ஏனெனில் அப்பகுதி அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் அழுத்தம் உண்டாகி வலியும் வீக்கமும் ஏற்படும் அல்லது முன் எலும்பில் சிறிய முறிவு ஏற்படும். இந்த வலியானது உடற்பயிற்சி, குதித்தல் மற்றும் கூடைப்பந்து, கரப்பந்து, கால்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களுக்கு மோசமடைகின்றது. சில வளரிளம் பருவத்தினருக்கு இரண்டு முழங்கால்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலைமை பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. விசேடமாக முழங் காலை அதிகம் வளைத்து மேற்கொள்ளப்படும் குதித்தல் மற்றும் ஓடுதல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படுகின்றது. ஆனால் பெண்களில், ஒஸ்குட்- ஸ்லாட்டர் நோயானது போட்டி விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிகம் காணப்படுகின்றது.

OSD நோய் அறிகுறிகளும் அடையாளங்களும்

ஒஸ்குட் - ஸ்லாட்டர் நோய் பல்வேறு மக்களுக்கு பல்வேறு விதமான காரணங்களால் ஏற்படுகின்றது. இவை அனைத்தும் நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து அமைகின்றது. நீங்கள் விளையாட்டில் மட்டும் ஈடுபடுபவராயின் உங்களுக்கு சிறிதளவான முழங்கால் வலி மட்டுமே ஏற்படும். அல்லது உங்களுக்கு தொடர்ந்து வலி ஏற்படுமாயின் நீங்கள் ஏதாவது கடினமான விளையாட்டில் ஈடுபடுகிறீர்கள் என்றே பொருளாகும். OSD நோய்க்கான அறிகுறிகளில் பின்வருவனவும் அடங்கும்:

  • வலி, வீக்கம் அல்லது முழங்காலின் கீழே மென்மயடைதல்
  • குதித்தல் மற்றும் ஓடுதல் போன்ற விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடும்போது வலி மோசமடைதல்.
  • உடற்செயற்பாடுகளின் பின்னர் நொண்டுதல்

வழக்கமாக 'ஒஸ்குட் - ஸ்லாட்டர்' நோய் அறிகுறிகளின்போது ஒரு நபர் நல்ல ஓய்வெடுப்பாராயின் வலி குறைந்துவிடும்.

நீங்கள் எப்பொழுதாவது சிறிதளவு பயிற்சியுடன் அல்லது பயிற்சியேதுமில்லாமல் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்ட பின், அடுத்த நாள் நீங்கள் குதிகால்கள் வலிக்கிறது என்று சொல்வீர்களாயின் உங்களுக்கு உள்ளங்கால் அழட்சி ஏற்பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும். இது பொதுவாக அதிகம் ஓட வேண்டிய, குதிக்கவேண்டிய செயற்பாடுகளான ஓட்டம், நடனம் மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் வலியாகும். 

உங்கள் கால்களுக்கு கீழே திசுப்படலம் அல்லது வளைவு தசைநார் என அழைக்கப்படுகின்ற திசுக்களை இணைக்கக்கூடிய கனமான பட்டையொன்று உள்ளது. அது உங்கள் குதிகால் எலும்பை காலின் முன்பகுதியுடன் இணைக்கின்றது. உள்ளங்கால் திசுப்படலத்தை அதிகமாக பயன்படுத்துவதால் எரிச்சல் மற்றும் புண் ஏற்பட்டால், அது உள்ளங்கால் திசுப்படல அழற்சி எனப்படும். உள்ளங்கால் திசுபடல அழற்சி சில நேரங்களில் உள்ளங்கால் துருத்தல் என தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றது. அதுவும் இதே அறிகுறிகளுடன் ஏற்படும் வேறு வகையான காயமாகும்.

உள்ளங்கால் திசுபடல அழற்சி ஏற்பட நீங்கள் ஒரு சுறுசுறுப்பு மிக்க வளரிளம் பருவத்தினராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, அதிகமாக நின்று செய்யும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மற்றும் பழைய சப்பாத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு உள்ளங்கால் திசுபடல அழற்சி ஏற்படலாம்.

உள்ளங்கால் திசுபடல அழற்சி ஏற்படுவதற்கான காரணங்கள்

உள்ளங்கால் திசுபடலம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் கால்களுக்கு பயன்படுவதுடன் அதற்கு உதவியாக இருப்பதுடன், அது அதிகளவான அழுத்தத்தையும் எடையையும் தாங்குகின்றது. அளவுக்கு அதிகமான அழுத்தத்தை உள்ளங்கால் திசுபடலத்திற்கு கொடுக்கும்போது திசு இழைகள் சேதமடைய அல்லது கிழிபட ஆரம்பிக்கின்றது. அப்போது உங்கள் உடல், பாதிக்கப்பட்ட பகுதிக்கு வீக்கத்துடன் கூடிய எரிவை பதிலாக வழங்குகின்றது. இதனால் திசுப்படலத்தில் விறைப்பு மற்றும் வலி ஏற்படுகின்றது.

உள்ளங்கால் திசுபடல அழற்சி ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • இறுக்கமான இளம் தசைகள்: இறுக்கமான இளம் தசைகள் உங்கள் பாதங்களின் நெகிழ்வுத் தன்மையைக் குறைப்பதால் உள்ளங்காலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றது.
  • எடை: சுமத்தப்படும் சில பவுன்ட் மேலதிகமான எடைகளால், ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் உங்கள் கால்களுக்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
  • உங்கள் செயற்பாடுகளால் கால்களுக்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படுதல்: இவற்றில் ஓட்டம், நடை, நடனம் மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவை அடங்கும்.
  • மோசமான சப்பாத்துக்கள்: உங்கள் கால்களுக்கு உள்ளங்கால் திசுபடல அழற்சியை குறைப்பதற்கு உதவாத சப்பாத்துக்கள், உங்கள் கால்களுக்கு பொருந்தாத மெல்லிய அடி மற்றும் சரியாக வளைந்து கொடுக்காத சப்பாத்துக்களைப் பாவிப்பதை நிறுத்திவிடுங்கள்.
  • அதிகமாக நின்று அல்லது நடந்து செய்யும் தொழில்கள்: உங்களை முழுநாளும் நிற்க வைக்கும் தொழில்களான ஹோட்டல் வெயிட்டர் தொழில் அல்லது ஒரு களஞ்சியசாலையில் செய்யும் தொழில்கள் உங்கள் உள்ளங்கால்களை திசுபடல அழற்சிக்கு உள்ளாக்குகின்றன.
  • அதிக வளைவு, தட்டையான் அடி அல்லது கால் பிரச்சினைகள்: உங்கள் கால்களின் வடிவம் நீங்கள் நின்று கொண்டிருக்கும்போது எடையை பாதங்களுக்கு விநியோகிக்கும் முறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எடை விநியோகம் சரியாக நடைபெறாத போது ஒருவருக்கு உள்ளங்கால் திசுபடல அழற்சி உண்டாக்குகின்றது. இதனால் ஒருவர் நடக்கும்போது அவரின் கால்களின் பல பாகங்களுக்கும் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றது.

உள்ளங்கால் திசுப்படல அழற்சிக்கான அறிகுறிகள்

உள்ளங்கால் திசுப்படல அழற்சியின்போது மிகத் தெளிவான அறிகுறிகளாக கால்களின் கீழ்ப்பகுதியிலும் குதிகாலுக்கு அருகிலும் லேசான வலி ஏற்படும்.

இதோ உள்ளங்கால் திசுப்படல அழற்சி ஏற்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள்:

  • காலையில் வலி மிக கடுமையாக இருப்பதுடன் ஆனால் சில நிமிடங்கள் நடந்த பின்னர் சரியாகிவிடும்.
  • நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தால் அல்லது உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்தால் வலி மோசமடைதல்
  • படிப்படியாக வலி அதிகரித்து காலப்போக்கில் மோசமாகுதல்
  • உடற்பயிற்சி மற்றும் உடற்செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைவிட செயற்பாடுகளின் பின்னர் வலி அதிகரித்தல்
  • கால்களை நீட்டும்போது வலி அதிகரித்தல்
  • குதிக்கால்களின் ஓரங்களை அல்லது வளைவுகளை அழுத்தும்போது வலி ஏற்படுதல்.

உள்ளங்கால் திசுப்படல அழற்சியைத் தவிர்த்தல்

ஏனைய பல விளையாட்டுக் காயங்களைவிட, உள்ளங்கால் திசுப்படல அழற்சியை தவிர்ப்பதற்கு நீங்கள் சற்று நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கும். இதோ சில தடுப்புமுறை:

குறிப்புகள்:

  • உங்கள் கால்களுக்கு நன்கு பொருந்தக்கூடிய சப்பாத்துக்களை அணியுங்கள்.  உங்கள் சப்பாத்தால் உங்கள் கால்களுக்கு தேவையான விதத்தில் உதவியாக இருக்கமுடியாது என்ற அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக அதை ஒதுக்கிவிட்டு புதிய சப்பாத்தொன்றை வாங்குங்கள். ஓடுபவர்கள் அவர்களின் சப்பாத்தை 500 மைல்கள் ஓடியபின்னர் ஒதுக்கிவிடவேண்டும்.

நன்கு நிபுணத்துவம்பெற்ற விசேட தொழில்முறை சப்பாத்துக்கடைக்குச் சென்று உங்கள் கால்களுக்கு பொருந்தக்கூடிய நல்ல சப்பாத்துக்களை வாங்குங்கள், நீங்கள் அதை அணியும்போது நன்றாகக் கட்டி சௌகரியமாக அணியுங்கள்.

  • நல்ல தோற்றத்துடன் இருங்கள். உங்கள் எடையை பரிசோதித்து, உங்கள் கால்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தின் அளவைக் குறையுங்கள்.
  • உங்கள் கால்களை உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் நன்கு நீட்டி வோம் - அப் செய்யுங்கள். ஒரு தடகள பயிற்சியாளர் அல்லது விளையாட்டு மருத்துவ நிபுணரிடம் கேட்டு உங்களுக்கு ஏற்ற சில மாற்றங்களுடனான பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள்.
  • ஒரு புது உடற்பயிற்சியை மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அதன் வேகத்தை அதிகரியுங்கள். வெளியில் சென்று முதல் தடவையில் 10 மைல் தூரம் அளவு நீண்ட நடைபயணம் அல்லது ஜொக்கிங் செய்ய முயற்சிக்காதீர்கள்.

உங்கள் வைத்தியரிடம் சப்பாத்துக்களுக்கு குதிக்கால் கவசங்கள், செருகிகள், அல்லது ஓர்தோடிக்ஸ் போன்றவற்றை பெற்றுக்கொள்வதைப் பற்றி பேசுங்கள். இது அதிக வளைவுகள், குதிக்கால் அமைப்பு உள்ளவர்களுக்கு பொருத்தமான விடயமாகும். உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி சப்பாத்துச் செருகிகளை பாவிப்பதன் மூலம் கால்களுக்கு ஏற்படும் காயங்களைக் குறைக்க முடியும்.

எப்போதாவது அழுத்த முறிவு ஏற்படுமாயின் அது உங்களை சிறிது காலத்திற்கு விளையாட்டிலிருந்து ஒதுக்கி வைத்துவிடும். மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த காயங்கள் (Repetitive stress injuries - RSI) உங்கள் உடற் பாகமொன்றில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுவதன் விளைவாக வலியுடன் கூடிய வீக்கம், தசை திரிபு, திசு சேதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவ்வழுத்தங்கள் பொதுவாக ஒரு நகர்வை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒரே விதமாக மேற்கொள்வதால் ஏற்படுகின்றது.

பெரும்பாலான பெரியவர்களுக்கு இது பொதுவானதாக இருக்கும் அதேவேளை, இளையவர்கள் அதிகமாக கணனியை பயன்படுத்துவதால் அவர்களுக்கும்  (மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த காயங்கள் RSI) இப்பிரச்சினை ஏற்படுகின்றது. அத்துடன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது மீண்டும் மீண்டும் நகர்வு ஏற்பட்டு RSI க்கு வழிவகுக்கின்றது. RSI யுடன் தொடர்புடைய விளையாட்டுக்களை அதிக பயன்பாட்டு காயங்கள் என குறிப்பிடப்படுகின்றது. வளரிளம் பருவத்தினரில் அதிக நேரம் இசைக்கருவிகளை பயன்படுத்துவது அல்லது வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு RSI ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.

பொதுவாக, RSI உட்பட 100 க்கும் அதிகமான வெவ்வேறு வகையிலான காயங்களும் நோய்களும் மீள பயன்படுத்தப்படும் அணிகலன்களால் மற்றும் உடல் கிழிவுகளின் விளைவாக ஏற்படுகின்றன. இக்காயத்தின் வகை மற்றும் தீவிரம் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றது. உங்கள் விடயத்திலும் பெரும்பாலான ஏனைய வளரிளம் பருவத்தினரிடையேயும், அதிக பயன்பாட்டினால் RSI இனால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாக முழங்கை, தோல்பட்டை, முழங்கால்கள் மற்றும் குதிகால்கள் போன்றவை அடங்குகின்றன.

எவ்வகையான மீள் காயங்கள் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படுகின்றன?

  • நாண் உரைப்பை அழற்சி: திரவம் நிரப்பட்டப்பட்ட ஒருவகை பையே பேர்சா எனப்படுகின்றது. இது மூட்டுக்களுக்கு ஒரு குஷனைப்போல செயற்படுகின்றது. அதில் ஏற்படும் வீக்கமே நாண் உரைப்பை அழற்சி (bur-SYE-tis எனப்படுகின்றது) ஆகும். வீக்கத்துடன் கூடிய வலி ஏற்படுவது நாண் உரைப்பையழற்சிக்கான அறிகுறிகளாகும். அளவுக்கதிகமான எடையை சுமப்பது, விளையாட்டின்போது குறிப்பிட்ட சில வகையான மூட்டுக்களான முழங்கால், தோற்பட்டை போன்றவற்றை அளவுக்கதிகமாக பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகின்றது.  
  • மணிக்கட்டு குகை நோய்: மணிக்கட்டு குகை நோய் அறிகுறிகளின்போது, மணிக்கட்டின் உள்ளே இருக்கும் எலும்பு மற்றும் தசைநார்களால் அமைந்த குறுகிய சுரங்கப்பாதையில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த சுரங்கப்பாதையைச் சுற்றி உணர்ச்சி மற்றும் தூண்டுதல் நரம்புகள் உள்ளன. அவை கைகளுக்கு வலி, கூச்சம் மற்றும் பலவீனம், உணர்வின்மை போன்றவை ஏற்பட காரணமாகின்றன. மணிக்கட்டு குகை நோய் அறிகுறிகள் தட்டச்சு அல்லது வீடியோ கேம் விளையாடும்போது ஏற்படும் மீள் நகர்வு காரணமாக ஏற்படுகின்றது. அது பொதுவாக வளரிளம் பருவத்தினர் மத்தியில் மிக அரிதாகவும், மூத்தவர்களிடம், குறிப்பாக கணனி தொடர்பான தொழில் புரிபவர்களிடையே அதிகம் ஏற்படுகின்றது.
  • எபிகான்டிலிடிஸ்: இந் நிலைமை முழங்கைகளில் எலும்புகள் இணையும் புள்ளியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகின்றது. எபிகான்டிலிடிஸ் செல்லப்பெயராக 'டென்னிஸ் எல்போவ்' என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் டென்னிஸ் விரர்களிடையே இது பொதுவாக ஏற்படுவதால் அப்பெயரால் அழைக்கப்படுகின்றது.
  • ஒஸ்குட் - ஸ்லாட்டர் நோய்: இது பொதுவாக வளரிளம் பருவத்தினரிடையே ஏற்படும் மூட்டு வலியாகும். விசேடமாக வளரும் பருவத்தில் இருக்கும் இளம் தடகள வீரர்களிடையே அதிகம் ஏற்படுகின்றது.

அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்ற அதிக உடல் செயற்பாடுகளின் அழுத்தம் காரணமாக நீகெப் இலிருந்து (kneencap) (படெல்லா என அழைக்கப்படுகின்றது) முன் எலும்பு (முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையிலான) பகுதியை இணைக்கும் தசைநாரில் ஏற்படும் வீக்கமும் வலியும் ஏற்படுதல்.

  • பெடெல்லோபெமோரல் அறிகுறி: இது மிகவும் மெல்லிய உடையக்கூடிய முழங்கால் குறுத்தெலும்பாகும். ஸ்குவேட்டிங், முழங்காலிடுதல் மற்றும் படிகளிலும், மலைகளிலும் ஏறும்போது முழங்காலைச்சுற்றி மோசமான வலி ஏற்படுதல்.
  • ஸின் ஸ்பிலின்ட்ஸ்: இது தொடை மற்றும் கீழ் கால் பகுதியில் ஏற்படும் வலியைக் குறிக்கின்றது. ஸின் ஸ்பிலின்ட்ஸ் பொதுவாக ஓட்ட வீரர்களுக்கு ஏற்படும். இது தீங்கற்றது என்றாலும் வலி மிகுந்தது.
  • அழுத்த முறிவுகள்: அழுத்த முறிவுகள் என்பது எலும்பின் மேற்பரப்பில் ஏற்படும் ஓசையுடன், மீண்டும் மீண்டும் அதிக சுமையேற்றுவதால் ஏற்படும் சிறிய வெடிப்புகளாகும். இக்காயங்கள் ஓடுதல், அணிவகுப்பு, நடத்தல், குதித்தல் அல்லது ஓட்டத் தளத்தை மாற்றுவது அல்லது பாவனைக்கு உதவாத சப்பாத்துக்களை அணிவது போன்ற காரணங்களால் எலும்பொன்றுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது.
  • தசை நாண் அழற்சி: தசை நாண் அழற்சியில், தசைநார்களையும், தசைகளையும் எலும்புகளையும் இணைக்கும் திசுக்களின் கயிறு போன்ற பட்டைகளிலும் ஏற்படும் அழுத்தத்தால் கிழிபடுதல் மற்றும் வலியுடன் கூடிய வீக்கம் ஏற்படுகின்றது. தசைநாண் அழற்சியானது அதிகம் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட தசைகளிலிருந்து மீண்டும் மீண்டும் அதிகம் இழுபடும் தசைநார்களுடன் தொடர்புபட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த காயங்களுக்கான (RSI) காரணங்கள்

வளரிளம் பருவத்தினரிடையே காணப்படும் பெரும்பாலான RSI நிலைமைகளுக்கு, கணனி அல்லது விளையாட்டுக்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் மீள் நகர்வு செயற்பாடுகளே காரணமாகும். காலப்போக்கில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுமாயின், உங்கள் மூட்டுக்கள் குணமடைய வாய்ப்பில்லை, மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைநாண்களிலும் தசைகளிலும் எரிச்சல் மற்றும் வலியுடன் கூடிய வீக்கம் ஏற்படும்.

நீங்கள் ஒரு விளையாட்டு வீரரெனில், விளையாடும்போது முறையற்ற உபகரணங்களை பாவித்தால் அது நிச்சயமாக RSI ஏற்பட பிரதான காரணியாகும். உதாரணமாக போதுமான ஆதரவை வழங்காத விளையாட்டு சப்பாத்தை அணிந்து ஓடுவதால் தொடைத் தசை வெடிப்புகள், கால், கணுக்கால் பிரச்சினைகள் ஏற்படும். முறையாக பொருத்தப்படாத டென்னிஸ் மட்டைகளால் டென்னிஸ் எல்போவ் என அழைக்கப்படும் பாதிப்பு ஏற்படும்.

வளரிளம் பருவத்தில் உடலில் நிகழும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாகவும் RSI பாதிப்பு ஏற்படலாம். திடீர் வளர்ச்சியினால் (பூப்பெய்தும்போது ஏற்படும் வேகமான வளர்ச்சி) தசைகளிலும் தசைநார்களிலும் மேலதிக இறுக்கத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துவதால் வளரிளம் பருவத்தினருக்கு காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பாகின்றது.

ஊட்டச்சத்து காரணிகளாலும் RSI ஏற்படுகின்றது. தசைகளையும் எலும்புகளையும் வலுவுள்ளதாக பராமரித்துக்கொள்ளவும், விளையாட்டிற்கும் மற்றும் ஏனைய உடற் செயற்பாடுகளையும் முறையாக மேற்கொள்ளவும், தேவையான சக்தியைப் பெறவும் நல்ல ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமாகும்.

மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த காயங்களுக்கான அறிகுறிகள்

RSI அறிகுறிகள் பின்வருமாறு:

  • கூச்ச உணர்வு, உணர்வின்மை அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் வலி
  • கழுத்திலும் பின்புறத்திலும் விறைப்பு மற்றும் வேதனை
  • கைகள் மற்றும் புஜங்களில் சோர்வு, பலவீன உணர்வு ஏற்படுதல்
  • உறுத்தும் உணர்வு

மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த காயங்களுக்கான சிகிச்சை

இவ்வாறான RSI அறிகுறிகளை நீங்கள் உணருவீர்களாயின், ஒரு வைத்தியரை சந்திப்பது நல்லது. உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் வந்து போவதாக இருப்பின் அதை உதாசீனம் செய்யாதீர்கள், அது மேலும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். RSI க்கு சிகிச்சை இன்றி இருப்பது அது மேலும் கடுமையாவதுடன் உங்களை அன்றாட சாதாரண கடமைகளுக்கும், விளையாட்டு, இசை மற்றும் பிடித்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுத்துவிடும்.

நீங்கள் வளரிளம் பருவத்தினராகவிருந்து ஓட்டம் அல்லது ஏனைய டிராக் விளையாட்டு வீரராக இருப்பின் நீங்கள் 'ரன்னர்ஸ் நீ' எனப்படும் நிலைமைக்கு ஆளாக வேண்டியேற்படும். இது முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில நிலைமைகளை விபரிக்க வைத்தியர்களால் பயன்படுத்தப்படும் பெயர்தான் 'ரன்னர்ஸ் நீ' ஆகும். படெல்லோ பெமொரல் (patellofemoral)  வலி அறிகுறிகள் மற்றும் சொன்ட்ரமலசியா ஒஃப் த படெல்லா (chondromalacia of the patella) ஆகியவை முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரண்டு நிலைமைகளாகும். இதுதான் பெரும்பாலான ஓட்டவீரர்களுக்கிடையில் அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் ஏற்படும் ஒரு காயமாகும். ஆனால் இது முழங்காலை வளைத்து மேற்கொள்ளும் விளையாட்டுக்களான சைக்கிள் ஓட்டுதல் மற்றும் குதித்தல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்படும்.

'ரன்னர்ஸ் நீ' பிரச்சினை வட்ட வடிவிலான முழங்கால் மூட்டுறை (patella) நீங்கள் உங்கள் முழங்காலை வளைக்கும்போதும் நேராக்கும்போதும் தவறாக தொடை எலும்பின் (femur) இணைப்போடு உரசும்போது ஏற்படுகின்றது. நீங்கள் முழங்கால்களை பயன்படுத்தும்போது ஆரோக்கியமான முழங்கால்கள் எனில், முழங்கால் மூட்டுறையானது மூட்டு இணைப்பில் ஓய்வெடுப்பதுடன் இலகுவாக மேலும் கீழும் மெதுவாக செல்கின்றது. ஆனால் முழங்கால் மூட்டுறை இடம் தவறிவிடும் பட்சத்தில், மூட்டு இணைப்பில் எரிச்சல் ஏற்படுவதுடன் முழங்கால் வலியையும் ஏற்படுத்துகிறது.

'ரன்னர்ஸ் நீ' ஏற்படுவதற்கான காரணங்கள்

'ரன்னர்ஸ் நீ'  பிரச்சினை பல காரணங்களால் ஏற்படுகின்றன. சில பொதுவான காரணங்களை நாம் பின்வருமாறு குறிப்பிடலாம்.

  • முழங்காலுக்கு ஏற்படும் நேரடி அதிர்ச்சி: உங்கள் முழங்காலின் மீது விழுதல் அல்லது அதன் மீது தாக்குதல் ஒன்று நிகழும்போது முழங்காலில் வட்ட வடிவில் இருக்கும் எலும்பு கழன்று விடுதல் அல்லது வேறு இடத்திற்கு நகருதல்.
  • அதிகப்படியான பயிற்சி அல்லது பயன்பாடு: முழங்கால்களை மீண்டும் மீண்டும் திருப்புதல் அல்லது வளைத்தல் காரணமாக முழங்கால் மூட்டுறையைச் சுற்றியுள்ள நரம்புகளில் எரிச்சல் ஏற்படுவதுடன் தசைநாண்களில் திரிபை ஏற்படுத்துகின்றது.
  • முழங்கால் சில்லு எலும்பின் ஒழுங்கின்மை: உங்கள் முழங்கால் மூட்டுறை ஒழுங்கின்றி இருப்பின் ஓடுதல் மற்றும் சைக்கிளோட்டுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும்போது முழங்கால் சில்லின் குருத்தெலும்பு கழன்றுவிடக்கூடும். இதனால் அடிப்படை எலும்பு மற்றும் மூட்டு புறணி வலி மற்றும் எரிச்சல் ஏற்படவும் வாய்ப்பாகின்றது.
  • இறுக்கமான மற்றும் பலவீனமான கால் தசைகள்: நீங்கள் ஓடும்போது இறுக்கமான ஹாம்ஸ்டிரிங்ஸ் மற்றும் இளம் தசைகள் முழங்காலுக்கு அதிகமான அழுத்தம் கொடுப்பதுடன், முழங்கால் மூட்டு விலகுவதன் விளைவாக குவார்டிசெப்ஸ் தசைகள் பலவீனம் அடைகின்றன.
  • பாதப் பிரச்சினைகள்: தட்டையான பாதங்கள், இதை 'ஓவர் புரோனேசன்' என அழைப்பர். இதனால் உங்கள் கால்களின் தசைகளும் தசைநாண்களும் இழுபட்டு முழங்காலில் வலியை ஏற்படுத்துகின்றது.

'ரன்னர்ஸ் நீ' யின் அறிகுறிகள்

'ரன்னர்ஸ் நீ' க்கான பொதுவான அறிகுறிகளாக முழங்காலின் வட்ட வடிவில் இருக்கும் எலும்பின் பின்புறம் அல்லது பக்கங்களில் வலி அல்லது மென்மையடைந்து காணப்படும். அத்தோடு முழங்கால் வீக்கமடைந்து காணப்படும்.

பொதுவாக முழங்காலை வளைக்கும்போது, உதாரணமாக: நடக்கும்போதும், முழங்காலில் இருக்கும்போதும், ஸ்குவேட்டிங் அல்லது ஓடும்போதும் வலி மோசமடைகின்றது. உங்களுக்கு 'ரன்னர்ஸ் நீ' இருப்பின் கீழ்நோக்கி ஓடும்போது அல்லது விமானத்தின் படிகளில் இருந்து இறங்கும்போதுகூட வலி ஏற்படும். சில பிரச்சினைகளின்போது, 'ரன்னர்ஸ் நீ' இருக்கும் ஒருவருக்கு முழங்காலில் வெடிப்பு அல்லது உறுத்தும் உணர்வு ஏற்படுவதுடன் முழங்கால் வெளியே வந்ததைப்போன்ற உணர்வும் ஏற்படும்.

'ரன்னர்ஸ் நீ' க்கு நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்காமல் இருப்பின், முழங்காலின் குறுத்தெலும்பு சேதமடைவதுடன் கீழ் வாதத்தை வளர்க்கவும் பங்களிப்புச் செய்யும்.

'ரன்னர்ஸ் நீ' நோயை தவிர்த்தல்

'ரன்னர்ஸ் நீ' நோயை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் தவிர்க்கலாம். நீங்கள் முழங்காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் ஏதாவது செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பின், தயவு செய்து பின்வரும் குறிப்புகளை பின்பற்றவும்:

  • ஓடுவதற்கு முன்னர் அல்லது முழங்காலை அதிகம் பயன்படுத்தும் தீவிர செயற்பாடுகளை மேற்கொள்ளும் முன்னர் வோம் - அப் பயிற்சிகள் செய்யவேண்டும். செயற்பாடுகள் முடிந்த பின்னர் மீண்டும் விரிவாக்கப் பயிற்சி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் உங்கள் கால் தசைகளை சக்தி மிக்கதாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக்கொள்வதால் அவை முழங்காலை சிறப்பாக வைத்திருப்பதுடன் எரிச்சல் ஏற்படுவதையும் தவிர்க்கும்.
  • உடலை நல்ல தோற்றத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதிக எடை உள்ளவராயின், மேலதிக எடையை உங்கள் முழங்கால்களுக்கு சுமத்துவீர்களாயின், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் உங்கள் கால்கள் தாங்கவேண்டியிருக்கும். உங்கள் சுமையை பரிசோதித்துக்கொள்வதால் முழங்கால்கள் மீதான அழுத்தத்தை குறைத்துக் கொள்ளவும் வலியைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.
  • சரியான உபகரணங்களை பயன்படுத்துங்கள். சிறந்த ஓட்ட சப்பாத்துக்களை வாங்குங்கள், அது உங்கள் கால்களுக்கு மிகப் பொருத்தமானவையாக இருக்கவேண்டும். சப்பாத்துக்களின் அடிப்பாகம் தேய ஆரம்பிக்கிறது மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது என உணர்வீர்களாயின் உடனடியாக அதை மாற்றிவிட்டு புதிய சப்பாத்தை வாங்குங்கள். உங்களிடம் தட்டையான அடி உள்ள சப்பாத்து இருப்பின் சப்பாத்து செருகிகள், அல்லது வழக்கமான ஓர்தோடிக்ஸ் (orthotics) பாவிப்பதற்கு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  • மென்மையான, தட்டையான தரைமேற்பரப்பில் ஓட முயற்சியுங்கள். கொன்கிறீட் மற்றும் நிலக்கீழ் பரப்புகளில் ஓடுவது உங்கள் முழங்கால்களுக்கு மேலதிக அழுத்தத்தை கொடுக்கும். சாத்தியமானால் புற்தரை, செயற்கை பாதை மற்றும் மென்மையான தரைகளில் ஓடுங்கள். கீழ் நோக்கி நேராக ஓடுவதால் முழங்காலில் வலி ஏற்படும். கீழ் நோக்கி ஓடும்போது அல்லது நடக்கும்போது  வளைவுகளுடன் (சிக்செக்) ஓடுங்கள்.
  • உங்கள் உடற்பயிற்சியின் வேகத்தை மெதுவாக அதிகரியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நீங்கள் ஓட விரும்பும் தூரத்தை அதிகரியுங்கள். நீங்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு ஒரு மைல் ஓடுவீர்களாயின், திடீரென 5 மைல்கள் ஓட முயலாதீர்கள். அதை படிப்படியாக, மெதுவாக அதிகரியுங்கள்.
  • இதற்கு முன்னர் உங்களுக்கு 'ரன்னர்ஸ் நீ' நோய் இருந்திருப்பின், முழங்கால் பிரேஸ் ஒன்றை அணிவது உதவியாக இருக்கும்.

நீங்கள் ஒரு வளரிளம் பருவத்தினராக இருப்பின், அதை நினைக்கும்போது வேதனைக்குரியதாக இருக்கும். கிரிக்கட் விளையாடும்போது நீங்கள் ஒரு பந்தை தடுக்க அல்லது விக்கட் கீப்பராக காத்திருக்கும்போது, எதிர்பாராத விதத்தில் பந்து உயர எழும்போது, அல்லது உதைப் பந்தாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது எதிரியின் உதை தவறினால், அல்லது நீங்கள் மோடார் சைக்கிளை ஓட்டும்போது எங்காவது ஒரு மேட்டில் முட்டினால். இவை அனைத்துமே வலி மிகுந்த விளைவுகளையே தரும். உடலின் மிக மெல்லிய பகுதியான விரைச்சிரை (விதைகள்) மீதான ஒரு தாக்குதல ஒப்பீட்டளவில் அசாதாரணமானது, ஆனால் அது நடக்கும் என நீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

தீவிரமான விதையுறுப்புக் காயங்கள்

விதையுறுப்புக்களில் திரிபு, விதை விரிசல் ஆகியவை தீவிர விரைச்சிரை காயங்களுக்கான உதாரணங்களாகும்.

  • விரைச்சிரை திரிபு: விதையைச் சுற்றி முறுக்குப்படும்போது அதற்கான இரத்த விநியோகம் தடைப்படுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. இது எப்போதாவது அரிதாகவே நிகழ்கின்றது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாகத் தெரிவதில்லை. எப்போதாவது விரைச்சிரை மீது ஏற்படும் அதிர்ச்சி அல்லது கடுமையான தாக்கம் காரணமாக விரைச்சிரை திரிபு ஏற்படுகின்றது. அது வழக்கமாக 12 - 18 வயதுக்குமிடையிலான சிறுவர்களையே பெரிதும் பாதிக்கின்றது, எனவே அது உங்களுக்கு ஏற்படின் உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவுக்கு செல்லுங்கள்.

ஒரு விரைச்சிரை திரிபினால் வலி ஏற்பட்டு 4 - 6 மணித்தியாலங்களுக்குள் வைத்தியர்கள் சரி செய்துவிட்டார்களாயின் விதைக்கு சேதம் ஏற்படாது. ஆனால் திரிபுபட்டதை அந்த நேரத்திலேயே சரி செய்யாவிடின் விதை இழப்பு ஏற்பட அல்லது நிரந்தரமாக விந்து உற்பத்தி குறைந்துவிட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வைத்தியர்கள் விதை திரிபை கைமுறையாக சரி செய்துவிடுவார்கள்.அது செயல்படாவிடின் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டி வரும்.

  • விரைச்சிரை முறிவு: இது ஒரு  அரிய வகையிலான விதையுறுப்பு அதிர்வாகும். விதையுறுப்புக்கு வலிமையான நேரடித் தாக்குதல் ஏற்படும்போது அல்லது விதையுறுப்பின் அந்தரங்க எலும்பு நசுங்குப்படும்போது (இடுப்பின் முன்னால் உள்ள எலும்பு), விதைப்பையினுள் இரத்தக்கசிவு ஏற்படுகின்றது. விதையுறுப்பில் ஏற்படும் விரைச்சிரை முறிவினால் கடுமையான வலி, விதைப்பையினுள் வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி என்பன ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு, முறிவு ஏற்பட்ட விதையை சத்திர சிகிச்சை செய்து குணமாக்கவேண்டும்.

விதைச்சிரை காயம் ஏற்படும் காரணங்கள் மற்றும் நீங்கள் என்ன செய்யவேண்டும்

நீங்கள் ஒரு பளு தூக்கும் விளையாட்டில் ஈடுபடுபவராக மற்றும் அதிகமான உடற்பயிற்சி செய்பவராக, அல்லது சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்பவராக இருப்பின் உங்களுக்கு விதைப்பை பாதிப்படையவும் பல்வேறு வகையில் அதில் காயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அவை உடலின் வெளியில் ஒரு பைபோல் தொங்குகின்றன. விதைப்பை, ஏனைய இனப்பெருக்க அமைப்புக்கள் மற்றும் பெரும்பாலான மற்ற பாகங்களைப் போன்று எலும்புகள், தசைகளால் பாதுகாக்கப்படவில்லை. அத்துடன் விதைகள் அமைந்துள்ள இடமும் விளையாட்டின்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களில் பாதிக்கக்கூடியதும் அல்லது கடுமையான உடற்பயிற்சியின்போது காயமடையக் கூடியதுமான பிரதான இலக்காக அமைந்துள்ளது.

நல்ல செய்தி என்னவெனில் விதைகள் தளர்வாக உடம்பில் இணைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பஞ்சுபோன்ற பொருளால் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றால் எந்தவொரு மோதலின்போதும் நிரந்தர சேதம் ஏற்படாமல் பதுங்கிக்கொள்ள முடியும். விதைகள் உணர்வுபூர்வமானது, தாக்குதல் ஒன்று ஏற்படும்போது மிகவும் விரைவாக தன்னைத் தற்காத்து சிறிய காயங்களுடன் தப்பிக்கொள்ளக்கூடியது. அரிதாகவே நீண்டகால பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதையில் ஏற்படும் காயங்களினால் பாலியல் செயற்பாட்டில் அல்லது விந்து உற்பத்தியில் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்படாது.

உங்கள் விதைப்பை எங்காவது மோதுப்பட்டால் அல்லது உதைப்பட்டால் உங்களுக்கு கட்டாயம் கடுமையான வலி ஏற்படும் அத்துடன் சிறிது நேரத்திற்கு உங்களுக்கு குமட்டல் உணர்வு ஏற்படும். அது ஒரு சிறிய அளவிலான விதைப்பை காயமாயின் பெரும்பாலும் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் வலி குறைவதுடன்  ஏனைய அறிகுறிகளும் இல்லாது போகும்.

அதேவேளை, அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் சில விடயங்களை செய்வதன் மூலம் வலியைக் குறைத்துக்கொள்ளலாம். வலி நிவாரணியை எடுக்கலாம், படுத்துக்கொண்டு விதைப்பைக்கு ஆதரவான உள்ளாடையுடன் மெதுவாக ஐஸ் கட்டியை அந்தப் பகுதியில் வைத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு கடுமையான உடல் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வதோடு, சில நாட்களுக்கு அதை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எவ்வாறாயினும், வலி குறையாவிடின் அல்லது உங்களுக்கு அதிக அளவு வலி ஏற்பட்டு ஒரு மணித்தியாலத்துக்கும்மேல் தொடருமாயின், விதைப்பையில் வீக்கம் அல்லது நசுங்குப் பட்டிருப்பின், விதைப்பையில் துளை ஏற்பட்டிருப்பின், தொடர்ந்து உங்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். இவை கடுமையான நோய் நிலையின் அறிகுறிகள் என்பதால், உடனடியாக பரிசோதித்துப்பார்த்து சிகிச்சை செய்வது முக்கியமாகும்.

விரைச்சிரை காயங்களுக்கான சிகிச்சை

நீங்கள் ஒரு டாக்டரை பார்த்தால் அவர் உங்களுக்கு எந்தளவு வலியும் வீக்கமும் இருக்கிறதென்பதையும், உங்களுக்கு எந்தளவு வசதியீனங்கள் ஏற்பட்டுள்ளதென்பதையும் முதலில் தெரிந்துகொள்வார். வலி ஏற்படக் காரணம் குடலிறக்க நோயா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்பதை உங்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியை பரிசோதித்து அறிந்துகொள்வார்.

மேலதிகமாக, விதைப்பையின் வீக்கத்தையும், தோலின் நிறத்தையும் சேதத்தையும் பரிசோதிப்பதுடன், விதைப் பையையும் தனியாகப் பரிசோதிப்பார். இனப்பெருக்க அமைப்பு  மற்றும் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவேண்டும், ஏனெனில் சிலநேரங்களில் அதற்கும் இவ்வாறான அறிகுறிகளே தோன்றும். சிறுநீர்தொற்று அல்லது இனப்பெருக்க உறுப்புக்களில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய சிறுநீர் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படலாம்.

விரைச்சிரை காயங்களைத் தவிர்த்தல்

விரைச்சிரை காயங்களை தவிர்ப்பதற்கு எப்பொழுதும் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனமானது. விசேடமாக நீங்கள் விளையாட்டுக்கள் மற்றும் அதிகளவான உடற்பயிற்சியில் ஈடுபடுபவராக, அல்லது அனைத்து வகையிலான சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்பவராக இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும். இதோ உங்கள் விதைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சில குறிப்புகள்:

  • உங்கள் விதைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்: விளையாட்டில் ஈடுபடும்போது அல்லது கடுமையான உடற்செயற்பாடுகளில் ஈடுபடும்போது எப்பொழுதும் ஒரு எத்லடிக் கப் (athletic cup) அல்லது சப்போர்ட்டர் ஒன்றை விதைகளைப் பாதுகாக்க பயன்படுத்துங்கள். எத்லடிக் கப்கள் ஒருவகையான கடினமான பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதை நசுங்கப்படும் பகுதிக்கு மேலாக சரியான பாகையில் அணிவதால் அது கவசமாக இருந்து விதைப்பையை பாதுகாக்கிறது. உதைப்பந்தாட்டம், ரக்பி அல்லது கராட்டே போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உங்கள் விதைப்பை மீது அடிபடாமல், உதைப்படாமல் இருக்க எத்லடிக் கப் அணிவது சிறந்ததாகும்.

ஒரு விளையாட்டு சப்போர்ட்டர், அல்லது ஜொக் ஸ்ட்ரப் ஆகியன பொதுவாக துணிப்பைகளாகும். அதை நீங்கள் அணியும்போது உங்கள் விதைப்பை உங்கள் உடலுக்கு மிக நெருக்கமாகிவிடுகிறது. விளையாட்டு சப்போர்ட்டர்கள் கடுமையான உடற்பயிற்சியின்போதும், சைக்கிளோட்டும்போதும் அல்லது பளு தூக்கும் பயிற்சியின்போது அணிவது மிக சிறந்ததாகும்.

  • உங்கள் உடற்தகுதியை பரிசோதியுங்கள்: நீங்கள் அணியும் எத்லடிக் கப் மற்றும் விளையாட்டு சப்போர்ட்டர் ஆகியன சரியான அளவுக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பாதுகாப்பு உபகரணங்கள் அளவுக்கு அதிகமாக சிறியதாகவும் அளவுக்கு அதிகமாக பெரியதாகவும் இருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து உங்களை காப்பாற்ற முடியாது.
  • உங்கள் வைத்தியருக்கு அறிவியுங்கள்: நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருப்பின் நீங்கள் கட்டாயம் முறையான பரிசோதனைகளை ஒரு வைத்தியர் மூலம் மேற்கொள்ளவேண்டும். உங்களுக்கு விட்டுவிட்டு விதைப்பை வலி ஏற்படுமாயின்கூட உங்கள் வைத்தியரிடம் அதைப்பற்றி கலந்தாலோசியுங்கள்.
  • விளையாட்டின்போது ஏற்படும் ஆபத்துக்களில் விழிப்பாக இருங்கள்: நீங்கள் ஆபத்து மிக்க ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பின், உங்கள் வைத்தியரிடம் அல்லது பயிற்சியாளரிடம் மேலதிக பாதுகாப்பு உபகரணங்களை பாவிப்பது பற்றிப் பேசுங்கள்.

நீங்கள் விளையாட்டில் ஈடுபடுபவராக அல்லது ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்பவராக இருப்பின், நல்ல உடற்தகுதியுடன் இருப்பதும், அழுத்தங்கள் (Stress) இல்லாமல் இருப்பதும் அவசியமானதாகும். அத்தோடு பயிற்சிகளின்போது உங்கள் விதைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தகுந்த, பாதுகாப்பான விதைப் பைக் கவசங்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் விதைகளில் ஏற்படக்கூடிய காயங்கள் பற்றிய கவலைகள் ஏதுமின்றி நீங்கள் உங்கள் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடக்கூடியதாக இருக்கும்.

FaLang translation system by Faboba