இளையவர்களின் வாழ்க்கையில் காக்கை வலிப்பு நோயானது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு காக்கை வலிப்பு இருப்பின், நீங்கள் அதை உங்கள் நண்பர்களிடம் மறைக்க நினைக்கலாம். அந்த நோய் சில முக்கியமான நேரங்களில் வகுப்பில், ஒரு விருந்தில், ஒரு பிரயாணத்தில் உங்களை தாக்காது என்று நீங்கள் நம்பலாம். ஆனால் உங்கள் எண்ணப்படி எதுவும் நடைபெறாது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினையல்ல. சரியான சிகிச்சையினால் இந்த நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளலாம். 

நீங்கள் காக்கை வலிப்பை புரிந்துகொள்வதற்கு முன்னர், வலிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் மின்சார செயற்பாட்டினால் உண்டாகும் திடீர் எழுச்சியாகும். அதன் விளைவாக சிறிது நேரத்திற்கு ஒரு மனிதனின் உடல் அல்லது பழக்கங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். காக்கை வலிப்பு ஒரு மனிதனுக்கு குறைந்தது 24 மணித்தியாலத்திற்கு இரண்டு முறை ஏற்படும். தவிரவும் அது அறியப்பட்ட சில மருத்துவ நிலைகளான இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சடுதியாகக் குறைதல், தூக்கமின்மை, மது அருந்துதல் போன்ற காரணங்களால் ஏற்படுவதில்லை. காக்கை வலிப்பு ஏற்படும் இரண்டு பெண்களில் ஒருவருக்கு அது பெரும்பாலும் மாதவிடாய் காலத்திலேயே ஏற்படுகின்றது.

காக்கை வலிப்பு உள்ளவர்களில் மிகக் குறைந்த தொகையினருக்கே ஒரு தெளிவான காரணம் உண்டு. இது வரை குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்குமான 70 வீதம் வரையான காக்கை வலிப்பு பிரச்சினைகளுக்கான காரணங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. கண்டறியப்பட்ட பிரச்சினைகளில் சிலவற்றில் மூளைக் காயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

  • பிறக்கும் போது பிராணவாயு குறைவாகக் கிடைத்தமை.
  • இளம் வயதினருக்கு அல்லது வயது வந்தவர்களுக்கு, பிறக்கும்போதோ அல்லது விபத்துக்களின்போதோ தலையில் ஏற்பட்ட காயங்களினால்.
  • மூளைக் கட்டிகள்
  • மரபு வழி நிலைகள் காரணமாக டியூபெரஸ் ஸ்செலெரொசிஸ் (tuberous sclerosis) போன்ற மூளைக்காயங்கள்.
  • மெனிங்ஜிட்டிஸ் அல்லது என்செபலிட்டிஸ் போன்ற மூளை நோய்த்தொற்றுகள்.
  • பக்கவாதம் அல்லது வேறு வகையான மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்த் தாக்கம்.
  • சோடியம் அல்லது இரத்தத்தில் சர்க்கரை பொருட்கள் போன்றவற்றின் அசாதாரண நிலைகள்.

காக்கை வலிப்பு ஏற்படும்போது, ஒருவர் விழிப்பாக இருக்கலாம், சற்று மயக்கத்தில்  அல்லது முழு மயக்கத்தில் இருக்கலாம். திடீர் நகர்வின்போது மூட்டுகளில் ஏற்படும் அதிகரித்த தொனி, கண்கள் சுழலுதல், சிறுநீர், மலம் அடங்காமை, தூங்கும்போது, விழிக்கும்போது, சிரிக்கும்போது உரத்த குரலில் கூச்சலிடுதல், திடீர் பயம் மற்றும் அதிகமாக கண்ணிமை அடித்தல். சில நேரங்களில் நோயாளி முறைத்துப்பார்த்தல் போன்ற வேறு அசாதாரணமான பழக்கங்களுடனான அறிகுறிகளை காட்டலாம். சில வகையான வலிப்புகள் அபூர்வமாக இடம்பெறுவதுடன் ஏனையவை ஒரு நாளைக்கு பல தடவைகள் ஏற்படலாம்.

காக்கை வலிப்பில் சில வகைகள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். முன்னர் குறிப்பிட்டபடி, அது மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டியதோ, வெட்கப்பட வேண்டியதோ அல்ல. அது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமாயின், வலிப்பினால் உங்கள் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட மாட்டாது.

மருந்துகள் சரியான நேரத்திற்கு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் மருந்தின் பெயர், எடுக்க வேண்டிய அளவு ஆகியவற்றை நீங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மருத்துவ அறிவுறுத்தலின்றி மருந்தை நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது. மருந்து தேவைப்படும்போது அதை நீங்கள் எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது அறிவிக்கப்படும். பிள்ளைகளிடமிருந்து மருந்தை தூரத்தில் வைக்கவும். தொவில் மற்றும் யாகம் போன்ற ஏனைய தொன்மங்கள், நம்பிக்கைகளில் நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவும். கால், கை வலிப்புகள் அடிக்கடி ஏற்படுமாயின் நீங்கள் வலிப்பு நோய்க்கான விசேடத்துவ மருத்துவரை அணுக வேண்டும். 

வலிப்பு நோய்க்கெதிரான மருந்துகள்

வலிப்பு நோய்க்கான சிகிச்சைகள் மிகவும் சாதாரணமானவை. அவை வலிப்பு நோய் மூளையின் உத்வேகத்தை கட்டுப்படுத்துவதை தவிர்க்கும். எவ்வாறாயினும் இம் மருந்துகள் காக்கை வலிப்பை குணமாக்குவதில்லை. பல்வேறு வகையான காக்கை வலிப்பு நோய்களுக்கான மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சில மருந்துகள் ஏனையவற்றை விட சில வகையான வலிப்புகளுக்கு மிக பொருத்தமானதாகும். உங்களுக்கு எந்த வகையான வலிப்பு நோய் உள்ளதோ அதற்கு மிகவும் பொருத்தமான மருந்தை மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணர் உங்களுக்கு வழங்குவார். வழக்கமாக மருந்துகள் ஆரம்பத்தில் குறைந்தளவில் வழங்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்படும். இவ்விதமான வழிகளால் உடனடி பக்க விளைவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம். எவ்வாறாயினும் நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாயின் பொலிதெரபி (ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்) வழங்க ஆலோசிக்கப்படலாம்.

அளவு - வலிப்புக்கு எதிரான ஒவ்வொரு மருந்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு எல்லை உண்டு. மாத்திரைகள், காப்சூல்கள், திரவ மருந்துகள் முதலிய அனைத்து மருந்துகளும் பல்வேறு சக்திகளுடன், வெவ்வேறு சூத்திரங்களுடன் வருகின்றன. அவற்றை கிரமமாக, சரியான நேரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். இம் மருந்துகள் வலிப்பைத் தடுக்க நரம்பு மண்டலத்தை நிலையான ஒருமுகப்படுத்தி வைத்திருப்பதால் தொடர்ந்து சரியான முறையில் மருந்துகளை எடுப்பது அவசியமானதாகும்.

சிகிச்சைக்கான கால எல்லை - வழக்கமாக இம் மருந்துகள் (anticonvulsants) கடைசியாக வலிப்பு ஏற்பட்டதன் பின் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும், அடிக்கடி ஏற்படுகின்ற வலிப்பு நோய்க்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு முறையாக வைத்தியம் செய்யவேண்டும். அத்துடன் நீங்கள் வலிப்பு நோயிலிருந்து குணமாகியிருப்பின், வைத்தியர் சரியான நேரத்தில் படிப்படியாக உங்களுக்கு மருந்து வழங்குவதைக் குறைப்பார். அதுவரை மருத்துவ ஆலோசனையின்றி சிகிச்சையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது வலிப்பு நோய் மீள் எழுச்சிப் பெறுகிறது எனின் ஒரு விசேட மருத்துவ நிபுணரை சந்தித்து மேலதிக மருத்துவ ஆலோசனைகளைப் பெறவேண்டும்.

வலிப்பு நோய்க்கான மருந்துகளை மாற்றுதல் - வலிப்புநோய்க் கட்டுப்பாட்டு சிகிச்சையானது நபருக்கு நபர் மாறுபடக்கூடும். வலிப்பு நோய்க்கு எதிராக மருந்து வழங்கும்போது சரியான மருந்து மற்றும் சரியான அளவுகளைக் கண்டு பிடிக்கும்வரை மருந்துகள் மாறக்கூடும். மருந்தொன்றை மாற்றும் வழிமுறையில் புதிய மருந்து படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். புதிய மருந்தின் சரியான அளவை அடையும்போது பழைய மருந்து அளவு படிப்படியாக குறைக்கப்படும்.

காக்கை வலிப்பு நோய்க்கான அடிப்படை காரணம் வழக்கமாக தெரிந்திருக்காவிடினும், சில காரணிகள் வலிப்பு நோயை தூண்டுகின்றன. இவ்வாறான தூண்டல்களை தவிர்ப்பதால் நீங்கள் வலிப்பு நோயைத் தவிர்த்து சிறப்பாக வாழலாம்.

  • மருந்துகளை ஒழுங்காக எடுக்காமை
  • அதிக மது பாவனை
  • கொகேயின் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதை மருந்துகளை பாவித்தல்
  • குறைந்த உறக்கம்
  • எடுக்கும் வேறு மருந்துகளின் தாக்கத்தால் வலிப்பு நோய் சிகிச்சை பாதிக்கப்படுதல்.

மயக்க நிலையில் இருக்கும்போது அவருக்கு அழற்சி ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தலையையும் உடலையும் ஒரு பக்கத்திற்கு திருப்பவும்.

  • கரண்டிகள், பென்சில்கள் போன்றவைகளை வாயினுள் போடுவதை தவிர்க்கவும்.
  • நோயாளி பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் இருந்தால் அவரைப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
  • வலிப்பு ஐந்து நிமிடத்திற்கு மேல் நீடிக்குமாயின் நோயாளியை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகளைப் பேணியவாறு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
FaLang translation system by Faboba