ஒரு வளரிளம் பிள்ளை என்ற வகையில் நீங்கள் பல்வேறு வகையான சுவாசக்கோளாறுகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஆனால் முதலில் உங்கள் சுவாச அமைப்பு என்றால் என்னவென்று அறிந்துகொள்க.

உங்கள் சுவாச அமைப்பு மேல் காற்று வழி (மூக்கிலிருந்து குரல்வளை வரை), கீழ் காற்று வழி (குரல்வளையிலிருந்து வாயு பரிமாறிக்கொள்ளும் காற்றுப்பைகள் அல்லது மூச்சு சிற்றரைகளிலிருந்து நுரையீரல் வரை) மற்றும் சுவாச இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு பிரதேசங்களும் நோய்களுக்கு அல்லது கோளாறுகளுக்கு உள்ளாக நேரிடும். இவ்விரண்டு பிரதேசங்களிலும் குறிப்பாக அவற்றில் உண்டாகும் பல்வேறு நோய்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மேல் காற்று வழி நோய்களுக்கான அறிகுறிகள்

  • தும்மல்/மூக்கு ஒழுகுதல்.
  • மூக்கு அரிப்பு.
  • மூக்கில் இரத்தம் வழிதல்.
  • மூக்கடைப்புடன் கூடிய தலைவலி.
  • தொண்டையில் சளி மற்றும் அடிக்கடி தொண்டை அரிப்பு, தொண்டையில் ஏதோ சிக்கி இருப்பது போலான உணர்வு.
  • வாசனை உணர்வை இழத்தல்.
  • விழுங்குவதில் சிரமம்.
  • தொண்டை வலி.
  • சளியுடனான அல்லது சளியற்ற இருமல்.
  • மூச்செடுக்கும்போது சகிக்க முடியாத அளவு சத்தம்.

கீழ் காற்று வழி நோய்களுக்கான அறிகுறிகள்

  • சளியுடனான அல்லது சளியற்ற இருமல்.
  • மூச்செடுப்பதில் சிரமம், உடற்செயற்பாடுகளும், உடற்பயிற்சி ஆற்றலும் குறைதல்.
  • நெஞ்சு வலி, மார்பு இறுக்கம் அல்லது மார்பில் கனம் அதிகரித்தல்.
  • மூச்செடுக்கும்போது சத்தம் வருதல் மற்றும் மூச்சுத்திணரல், நெஞ்சிலிருந்து விசில் போன்ற சத்தம் வருதல்.
  • இருமும்போது இரத்தம் அல்லது சளி வெளியேறுதல்.
  • விக்கல்

உங்களுக்கு இவ்வாறான ஒரிரண்டு அறிகுறிகள் அல்லது வேறு சில நோய்களின் அறிகுறிகள் சேர்ந்தும் ஏற்படலாம். 

உதாரணமாக உங்களுக்கு இருமல், மூச்சுத்திணரல், மார்பு இறுக்கம் மற்றும் மூச்செடுப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுமாயின் அவை ஆஸ்த்மாவின் அறிகுறிகளாக இருக்கலாம். விசேடமாக அவை விட்டுவிட்டுத் தோன்றுமாயின் அது அறியப்பட்ட சில தூண்டல்கள் காரணமாகவும் இருக்கலாம். (ஒவ்வாமை மற்றும் உறுத்தல்கள் போன்ற ஆஸ்துமாவை மோசமாக்கும் காரணிகள்)

இதற்கு மேலதிகமாக உடலின் ஏனைய உறுப்புக்களின் அடிப்படை நோய்களைப் பொறுத்து சுவாச அறிகுறிகளுடன், காய்ச்சல், உடல் வலி, பசியின்மை எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

உங்கள்  சுவாச குழாயில் ஏற்படும் பல்வேறு தொற்றுக்களை அறிந்துகொள்வோம்.

சுவாசக் குழாய் அலட்சி

நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் மேல் நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் பெரிய காற்று வழியை பாதிக்கும் ஒரு தொற்றே மூச்சுக் குழாய் அலட்சி என அழைக்கப்படும். இந்த காற்று வழிகள் (bronchi) உங்கள் கீழ் சுவாசக் குழாயின் ஒரு பாகமாகும். சுவாசக் குழாய் அலட்சி பெரும்பாலும் ஒரு வைரஸினால்தான் ஏற்படுகிறது. இது பொதுவாக தொண்டைப்புண், தடிமல், காய்ச்சலைத் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது.

உங்கள் சுவாசக் குழாயின் அமைப்பானது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசிகள் மற்றும் ஏனைய துகள்களை பிடிப்பதற்கு ஒரு பொறியாக சளியை உருவாக்குகிறது. இதன் மூலம் துகள்கள் நுரையீரலுக்குள் செல்வதையும் அதனால் ஏற்படும் எரிச்சலை தவிர்ப்பதற்கும் உதவுகிறது. ஒரு தொற்றின்போது வழக்கத்தை விட மேலதிக சளியை உருவாக்குவதால் எரிச்சலும் வீக்கமும் ஏற்படுகின்றது. பின்னர் நீங்கள் இருமுவதன் மூலம் மேலதிக சளியை வெளியேற்ற முயற்சிக்கிறது.

சாதாரண தடிமல்

யாருக்கும் எந்த நேரத்திலும் தடிமல் ஏற்படலாம். வயது அடிப்படையில் ஒரு வருடத்தில் எத்தனை முறை உங்களுக்கு தடிமல் ஏற்படுகின்றது என்பதற்கு இதோ ஒரு பொதுவான கருத்து:

  • பிள்ளைகள், வளரிளம் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 5 - 10 முறை தடிமல் ஏற்படுகிறது.
  • பெரியவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 - 4 முறை தடிமல் ஏற்படுகிறது.

உங்களுக்கு அதிக தடவைகள் தடிமல் ஏற்படக் காரணம் பெரியவர்களைவிட பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே ஆகும்.

ஒரு வைரஸ்தான் தடிமல் ஏற்பட காரணமாக அமைகிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தடிமல் ஏற்பட கிட்டத்தட்ட 200 வகையான வைரஸ்கள் காரணமாக உள்ளன. இவை ஒவ்வொருவருக்கும் சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஒரு தடிமல் வந்து போனதும் மற்றது வந்துவிடுவது இதனால்தான்.

ஒருமுறை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தடிமல் வைரஸ் தொற்றுக்கெதிராக போராடி முடிந்த பின்னர், நீங்கள் அந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறீர்கள். இத்தடிமல் தீவிரமான Rhinosinusitis என அழைக்கப்படுகின்றது.

தடிமல் அறிகுறிகள் பின்வருமாறு:

  • தொண்டைப் புண்
  • எப்போதாவது காய்ச்சல் (38.5°C அல்லது அதற்கு அதிகமான வெப்பநிலை)
  • தும்மல்
  • மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
  • இருமல்

இன்புளுவென்சா காய்ச்சல்

இன்புளுவென்சா காய்ச்சலின்போது உங்களுக்கு ஏற்படும் தடிமல் சாதாரண தடிமல் போல் இருக்காது. இக்காய்ச்சல் முற்று முழுதாக வித்தியாசமான வைரஸினால் ஏற்படுவதுடன் இதன்போது தடிமலை விட நீடித்த தீவிர அறிகுறிகள் தோன்றும். எவ்வாறாயினும் மூக்கு ஒழுகுதலைவிட இந்த தடிமல் வைரஸினால் உங்களுக்கு உடல் நலக்குறைவும், உடல் வலியும் ஏற்படக்கூடும்.

காய்ச்சல் என்பது பொதுவாக வைரஸ் தொற்றினால் ஏற்படும் ஒரு நோயாகும். இது இலகுவாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியதாகும். இத்தொற்று உங்கள் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழாய் (தொண்டையின் முடிவில் இருந்து நுரையீரல் வரை இருக்கும் குழாய்) மற்றும் எப்போதாவது நுரையீரலையும் பாதிக்கின்றது.

காய்ச்சல் அறிகுறிகள் பின்வருமாறு:

  • காய்ச்சல் (உதா. வெப்பநிலை 38.5°C க்கும் அதற்கு அதிகமாகவும்) மற்றும் குளிர்
  • தலைவலி
  • மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு மற்றும் தும்மல்
  • தொண்டைப் புண்
  • உலர்ந்த,  நெஞ்சு இருமல்
  • களைப்பு, தசை மற்றும் மூட்டு வலி
  • பசியின்மை, வயிற்றுக்கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு
பருவகால இன்புளுவென்சா

பருவகால இன்புளுவென்சா காய்ச்சல் என்பது இன்புளுவென்சா வைரஸினால் ஏற்படும் மிகத் தீவிரமான வைரஸ் தொற்றாகும். இது உலகத்தின் பல பாகங்களிலும் சுழற்சியாகப் பரவக்கூடியது.

3 வகையான பருவகால வைரஸ்கள் உள்ளன. உதாரணமாக A, B மற்றும் C ஆகியனவாகும். C வகையிலான வைரஸ் A, B வைரஸை விட குறைவாக ஏற்படக்கூடியது. Aவகையிலான இன்புளுவென்சா வைரஸ்களை பல்வேறு வைரஸ்களின் கூட்டாகக்கொண்ட இரண்டு துணை வைரஸ்களாக வகைப்படுத்தலாம். இன்புளுவென்சா A வகையின் துணை வைரஸ்கள் இன்புளுவென்சா A(H1N1) மற்றும் A(H3N2) ஆகியனவாகும். இவை தற்போது நம்மிடையே சுழற்சியில் உள்ளன.

திடீர் காய்ச்சல், இருமல் (பொதுவாக வரண்ட இருமல்), தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தொண்டைப்புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற குணங்குறிகளால் பருவகால இன்புளுவென்சாவை வகைப்படுத்தலாம். இருமல் மிகக் கடுமையாக இருப்பதோடு இந்த நோய் அறிகுறிகள் இரண்டு வாரம் அல்லது அதற்கு மேலான காலம் நீடிக்கும். 

உங்களுக்கு இன்புளுவென்சா ஏற்பட்டிருந்தால் நீங்கள் குறைந்தது இரண்டு நாட்களாவது வீட்டில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும்போது இந்த வைரஸ் காற்றின் மூலம் ஏனையவர்களுக்குப் பரவுகின்றது. இன்புளுவென்சா வைரஸால் மாசுப்பட்ட கைகளிலிருந்து வைரஸ் பரவக்கூடும். எனவே இது உங்களுக்குப் பரவியிருந்தால் நீங்கள் சுத்தத்தைப் பேணுவதுடன் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும்.

வெப்பமண்டல பிராந்தியங்களில், வழக்கத்திற்கு மாறான திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அங்கு இன்புளுவென்சா வருடம் முழுவதும் ஏற்படுகின்றது. இதற்கு 60 வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பாதுகாப்புத் தடுப்பூசிகள் கிடைப்பதுடன், இன்புளுவென்சா வைரஸுக்கு எதிரான மருந்துகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. இதன் மூலம் கடுமையான சிக்கல்களைக் குறைக்கலாம். பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல், மருந்துகள் இன்றி தானாகவே குணமாகிவிடும்.

குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு அவர்களின் நோய் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அது மேலும் வளர்ச்சியடையக்கூடும் என மருத்துவர் கருதுவாரானால் அந்நோயாளிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படும்.

பென்டெமிக் இன்புளுவென்சா காய்ச்சல்

இது இன்புளுவென்சா வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் பெருந்தொகையான மக்களுக்கு  இது பரவுகிறது.

பருவகால இன்புளுவென்சாவிற்கு மாறாக பென்டெமிக் இன்புளுவென்சா ஒழுங்கற்ற விதத்தில் ஏற்படுகிறது. பென்டெமிக் அதிக அளவில் மரணங்களை ஏற்படுத்தக்கூடியது. கடந்த 300 வருடங்களில் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒன்று வீதத்தில் மூன்று வகையான இன்புளுவென்சா வைரஸ்கள் உருவாகியுள்ளன, மிக அண்மையில் 2009 ஆம் ஆண்டு பென்டெமிக் காய்ச்சல் ஏற்பட்டது.

இன்புளுவென்சா பென்டெமிக் வைரஸ் விலங்கு இனங்களான விசேடமாக பண்டிகள், கோழிகள் மற்றும் வாத்துகள் போன்றவற்றிலிருந்தே மனிதனுக்குப் பறவுகின்றது.

இந்த புதிய வகை தாக்கங்கள் மக்களிடம் காணப்படுகின்ற நோயெதிர்ப்புச் சக்தியால் தடுக்கப்படுவதில்லை என்பதுடன் தொடர்ச்சியாகவும், அதிக அளவிலும் மக்களைப் பீடிக்கின்றது.

இன்புளுவென்சா A வைரஸ்கள் எப்போதாவது ஏற்படும் திடீர் நிகழ்வுகளால் காட்டுப் பறவைகள் மூலம் வீட்டுப் பறவைகளிடமும் பரவுவதுடன், மனித இன்புவென்சாவாக மாறவும் காரணமாகின்றது.

இன்புளுவென்சா வைரஸ் உலகம் முழுவதற்கும் பறவைகளின் புலம்பெயர்வு, உயிருள்ள பறவைகளின் வணிக ரீதியான ஏற்றுமதி மற்றும் மனிதர்களின் பிரயாண முறைகள் போன்ற காரணங்களாலும் பரவுகின்றது.

பென்டெமிக் மேலும் பரவாமலிருக்க பறவைக் காய்ச்சல் மற்றும் கால்நடைத் தடுப்பூசிகளை ஏற்றுதல், பறவை வளர்ப்பாளர்களுக்கு பொதுவான காய்ச்சல் தடுப்பூசியை ஏற்றுதல் மற்றும் இந்நோய் காணப்படும் பகுதிகளுக்கு பிரயாணம் செய்வதை மட்டுப்படுத்துதல் போன்ற குறுகிய கால உபாயங்களை முன்னெடுப்பதால் தடுக்கலாம்.

இன்புளுவென்சா தொற்றை சமாளிக்க சிறந்த சர்வதேச சுகாதார மூலோபாயங்கள் தேவையாக உள்ளன. இதோ அவற்றில் சில:

சமூக இடைவெளி

குறைவான பயணங்கள், வீட்டிலிருந்தே தொழில்புரிதல் அல்லது பாடசாலைகளிலிருந்து விலகியிருத்தல் போன்ற வழிமுறைகள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பைக் குறைக்கலாம். அதேவேளை வளரிளம் பிள்ளைகள் தங்களுக்கு தேவையான விதத்தில் பாடசாலையிலும் ஏனைய இடங்களிலும் இருப்பதாலும், அவர்கள் முடிந்த வரை ஜன நடமாட்டம் அதிகமான இடங்களில் நேரத்தை கழிக்க விரும்புவதாலும் இது முழுமையாக சாத்தியப்படாமல் போகின்றது.

அத்துடன் நீங்கள் இருமுதல் மற்றும் தும்முதல் போன்ற இன்புளுவென்சா நோய் அறிகுறிகள் உள்ள மக்களுக்கு இடையில் உடல் ரீதியாக ஒரு தூரத்தை பேணிக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கப்படுகின்றது.

சுவாச சுகாதாரம்

நீங்கள் தும்மும்போதும் இருமும்போதும் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் இதற்காக ஒரு டிஸ்யூ பேப்பரை பயன்படுத்திய பின் அதைக் கவனமாகவும், சுத்தமாகவும் அகற்ற வேண்டும். உங்கள் கைகளை முடிந்தளவு விரைவாகக் கழுவுங்கள்.

நீங்கள் தும்மும்போதும் இருமும்போதும் உங்கள் கைவசம் டிஸ்யூ பேப்பர் இல்லா விடின் முடிந்தவரை உங்கள் வாயை கைகளால் நன்கு மூடிக்கொள்ளுங்கள்.

கை கழுவும் சுகாதாரம்

அடிக்கடி கைகளை சவர்க்காரம் கொண்டு நீரில் கழுவுங்கள் (அல்லது அல்கஹோல் கலந்த கை சுத்திகரிப்பானைக்கொண்டு கையை சுத்தப்படுத்துங்கள்) விசேடமாக தும்மிய பிறகும் இருமிய பிறகும் மற்றும் பொது இடங்களுக்குச் சென்றுவந்த பின்பும் அல்லது அசுத்தம் அடைந்திருக்கும் பொருட்களை (வைத்தியசாலைகள், பொது இடங்கள் மற்றும் பஸ், புகையிரதங்களில் உள்ள கதிரைகள், கைப்பிடிகள், சுப்பர் மாக்கட்களில் உள்ள தள்ளுவண்டிகள், கூடைகள் போன்றவைகள்) தொட்ட பின்னும் கை கழுவவேண்டும்.

பிற சுகாதாரம்

உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாய் என்பவற்றை தொடுவதை இயலுமானவரை தவிருங்கள். வாயையும், மூக்கையும் மூடக்கூடியவாறு முகமூடி ஏதாவது பாவிப்பது நல்லது, ஆனால் பாவிப்பவர் அதனை அடிக்கடி தொடாமல் இருக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்துங்கள். ஏனெனில் மாசடைந்த பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இருப்பவர்களுக்கும், தும்முபவர்களுக்கும் கைகழுவும் சந்தர்ப்பம் இல்லாததால் முகமூடி அழுக்கடைந்திருக்கும்.

கீழ் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுக்கள் குரல்வளை மட்டத்திற்குக் கீழ் உள்ள பகுதியின் காற்று வழிகளில் வீக்கம் ஏற்பட வைரஸ், பக்டீரியா மற்றும் பூஞ்சைகள் காரணமாக அமைகின்றன.

சாதாரண கீழ் சுவாசக் குழாய் தொற்றுக்கள் பின்வருமாறு:

  • இன்புளுவென்சா - இதனால் மேல் அல்லது கீழ் சுவாசக் குழாய்களில் ஒன்று பாதிக்கும்.
  • சுவாசக் குழாய் அலட்சி
  • நியூமோனியா - நுரையீரலில் தொற்று
  • காசநோய் - அதைத் தொடர்ந்து நுரையீரலில் ஏற்படும் பக்டீரியா தொற்று.

கீழ் சுவாசக் குழாயில் தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு இருமல், சளி, காய்ச்சல், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

நியூமோனியா

நியூமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்றாகும். இதன் நோய் அறிகுறிகள் பொதுவாக இளம் பிள்ளைகள் மற்றும் வயதானவர்களுக்கு பெரும்பாலும் 3 - 4 வாரங்களுக்கும் அதிகமாக நீடிக்கும். இது வளரிளம் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்.

  • நியூமோனியாவை மேலும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
  • நியூமோனியா ஒரு சமூக நோய் என்பதால், அன்றாட வாழ்வில் இந்நோய் தொற்று உள்ளவருடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு இந்நோய் பரவும்.
  • வைத்தியசாலையில் பரவும் நியூமோனியா. இந்நோய் ஒரு குறிப்பிட்ட காலம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஏற்படும்.

பொதுவான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், சளியில் இரத்தக்கறை படிந்திருத்தல், மற்றும் சளி மஞ்சள் அல்லது வெளுத்த நிறமாக இருத்தல் ஆகியன அடங்கும். சாதாரண நோய்க்குணம் இருக்கும்போது வீட்டிலிருந்தவாறே சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்போது 'அன்டிபயோடிக்' மருந்துகள், திரவ உணவுகளுடன், போதுமான ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வளரிளம் பருவத்தினருக்கு இந்த நோய் விரைவில் குணமாகிவிடும். ஆரோக்கியநிலை பாதகமாக இருக்கும் மக்களுக்கு சில நேரங்களில் நோய் தீவிரமாக இருக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறவேண்டியிருக்கும். உங்கள் வயது மற்றும் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து நியூமோனியா சிக்கல் நிறைந்ததாகவும், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கலாம்.

அத்தகைய நோய்த் தன்மைகள் பின்வருவனாறு:

  • காற்றுப்பையில் திரவம் நிறைவதால் சுவாசக்கோளாறு ஏற்படுதல்.
  • நுரையீரலில் சீழ் பிடித்தல் (செப்டிகேமியா)

சில வகையான நியூமோனியாவின்போது விசேடமாக உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

காச நோய்

காசநோயானது மைக்கோபெக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium Tuberculosis) என்று அழைக்கப்படும் பக்டீரியாவினால் ஏற்படுகின்றது. காசநோய் பற்றி டாக்டர் ரொபர்ட் கோச் அவர்களினால் 1882 மார்ச் 24 ஆம் திகதி விபரிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் அத்தினத்தை நாம் காசநோய் தினமாக அனுஷ்டிக்கின்றோம்.

ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்கள் காசநோயினால் (TB) கொல்லப்படுகின்றனர். அதாவது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 5000 மரணங்கள் நிகழ்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மரணங்களும் அபிவிருத்தி அடையும் நாடுகளிலேயே நிகழ்கின்றன, பெரும்பாலும் இள வயதினரே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காச நோய் வறிய மற்றும் போஷணைக் குறைபாடுள்ள மக்களைப் பெரிதும் பாதிக்கின்றது.

நீரிழிவு நோயுள்ளவர்கள், நாட்பட்ட (நீண்ட காலமாக தொடரும் நோய்கள்) நுரையீரல், சிறுநீரகம், புகைத்தலால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மது பாவனையாளர்களுக்கு காசநோய் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

உங்களுக்குக் காசநோய் எப்படி ஏற்படும்?

காசநோய் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்குப் பரவுகின்றது. காசநோய் உள்ள ஒருவர் இருமும்போது, சிரிக்கும்போது, பாடும்போது மற்றும் தும்மும்போதும் காற்றின் ஊடாக இந்த நோய் பிறிதொரு நபருக்குப் பரவுகின்றது. நீங்கள் காற்றை சுவாசிக்கும்போது காசநோய் கிருமிகள் உங்களிடம் தொற்றிக்கொள்கின்றன. காசநோய்க்கு சரியான சிகிச்சையளிக்காவிடின் அது மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

பின்வருவனவற்றால் காசநோய் கிருமிகள் தொற்றாது:

  • குடிக்கும் அல்லது சாப்பிடும் பாத்திரங்களைப் பரிமாறிக்கொள்வதால்.
  • கை குலுக்குவதால், உணவு பரிமாறிக்கொள்வதால், படுக்கையிலிருக்கும் நோயாளியை, அல்லது மலசலகூட இருக்கையைத் தொடுவதால் காசநோய் கிருமிகள் உங்களுக்குத் தொற்றாது.
காசநோய் எவ்வாறு உங்கள் உடலைப் பாதிக்கின்றது?

காசநோய் 80% மான நேரங்களில் நுரையீரலைப் பாதிக்கின்றது. அத்துடன் அது உடல் அமைப்பின் எந்த ஒரு பாகத்தையும் பாதிக்கும். பொதுவாக நிணநீர் முனைகள், நுரையீரலின் வெளிப்பகுதி, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றை பாதிக்கின்றது. அத்துடன் உங்கள் சிறுநீரகம், இனப்பெருக்க அமைப்பு, தோல், எலும்புகள், கண்கள் மற்றும் இதயத்தின் வெளிப்பகுதி ஆகியவற்றையும் பாதிக்கிறது.

காசநோய் கிருமிகள் நுரையீரலுக்குள் நுழைந்ததும், நோய் எதிர்ப்பு அமைப்பின் செல்கள் அவற்றை நுரையீரலின் ஒரு பகுதிக்குள் மட்டும் கட்டுப்படுத்த முனைகின்றது. எவ்வாறாயினும் ஒரு சில காசநோய் பக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் அமைப்பு உறுப்புக்களினுள் ஊடுறுவி நோயின் தாக்கத்தை அதிகரிக்கின்றது.

நுரையீரலில் காசநோய் ஏற்பட்டால் தோன்றும் நோய் அறிகுறிகள் எவை?

நுரையீரலினுள் ஏற்படும் காசநோயானது நுரையீரல் காசநோய் என்று அழைக்கப்படும்.

  • இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல்
  • நெஞ்சு வலி
  • இருமும்போது இரத்தத்துடன் சளி வருதல்
  • பலவீனம் மற்றும் களைப்பை உணர்தல்
  • எடை குறைதல்
  • பசியின்மை
  • குளிர் மற்றும் காய்ச்சல்
  • இரவில் அல்லது தூங்கும்போது நடுக்கம்

ஏனைய உறுப்புக்களில் ஏற்படும் காசநோயானது அந்த உறுப்புக்களைச் சார்ந்ததாக அமையும்.

நுரையீரல் காசநோய் எவ்வாறு கண்டறியப்படுகின்றது?
நுண்ணுயிரியல் நோய் கண்டறிதல்

நுரையீரலில் உள்ள காசநோய் பக்டீரியாக்களின் அடையாளத்தை கண்டறிய சில விசேட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சளிப் பூச்சுப் பரிசோதனை

நுரையீரல் காசநோயைக் கண்டறிய இருமும்போது மார்புக்குள் இருந்து வெளிவரும் சளியை ஒரு மைக்ரோக்ஸ்கோப்பில் பூசி கட்டம் கட்டமாக பரிசோதனை செய்யப்படும்.

சளியின் தன்மை

இதை Gold Standard ஆய்வு என அழைக்கின்றனர். இதன் மூலம் விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு உபகரணத்தின் மூலம் கல்ச்சரிங் என அழைக்கப்படும் பக்டீரியாவின் வளர்ச்சியை ஆராய்வர். நீங்கள் இதை ஏற்கனவே உங்கள் விஞ்ஞான வகுப்பில் கற்றிருப்பீர்கள்.

மரபணுப் பரிசோதனை

உயிரணுப் பெருக்க நுட்பங்கள் மற்றும் மரபணுப் பரிசோதனைகள் காசநோயில் மரபணு தொடர்களை தனியாக அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்றது. மரபணுப் பரிசோதனைகள் நல்ல அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ளக்கூடியதுடன், அதற்கு அதிக செலவு ஏற்படும்.

மார்பு விம்பம்

மார்பை எக்ஸ்ரே படம் எடுப்பதன் மூலம் காசநோயின் தன்மையைக் கண்டறியலாம். எவ்வாறாயினும் ஏனைய நுரையீரல் பிரச்சினைகளான பக்டீரியா தொற்று, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கும் இதே அறிகுறிகளையே காட்டும்.

அதனால் வைத்தியர்கள் நோயை உறுதிப்படுத்தக்கூடிய மைக்ரோபயோலொஜிக்கல் பரிசோதனைகளை மேற்கொள்ள முயற்சிப்பர்.

சீடி ஸ்கேன்

அத்துடன் சீடி ஸ்கேன் பயன்படுத்தப்படும். ஆனால் இது மைக்ரோபயோலொஜிக்கல் பரிசோதனைக்கே பயன்படுத்தப்படும்.

மென்டொக்ஸ் பரிசோதனை

மென்டொக்ஸ் (டியூபர்குளின் உணர்திறன் பரிசோதனை) இச்சோதனையானது காசநோய் (TB) பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட செல்களுக்கான புரோட்டீன் தீர்வாக, சுத்திகரிக்கப்பட்ட புரோட்டினை ஊசியின் மூலம் தோலுக்கடியில் செலுத்தும் சிகிச்சையைக் குறிக்கும்.

இதன் விளைவுகள் 72 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அளக்கப்படும்.

ஊசியால் வீக்கமடைந்திருக்கும் இடத்தின் குறுக்கு விட்டம் மில்லி மீட்டரால் அளக்கப்படும்.

அளவொன்று 10 மி.மீ. விட அதிகமாக இருப்பின் அது நேர்மறையானதாக (Positive) கருதப்படும்.

நேர்மறை பரிசோதனை இவ்வாறு அமையும்:

  • டோர்மன்ட் அல்லது லெடன்ட் ஆகிய கடந்த கால தொற்று.
  • குணப்படுத்தக்கூடிய கடந்த கால நோய்
பீ.சி.ஜீ. (Bacillus of Calmett and Guireine) தடுப்பு மருந்து

ஏனைய மைக்ரோபெக்டீரியா தொற்றுக்களில் மைக்கோபெக்டீரியம் காசநோயின் (Mycobacterium tuberculosis) அறிகுறிகளையே காட்டும்.

தற்போதைய காசநோய்கள் ஏனைய நுண்ணுயிர் பரிசோதனைகள் மூலமும் கண்டறியக்கூடியதாக உள்ளது.

நோய் ஏற்பட்டிருந்தாலும் கூட பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு நேர்மறையான முடிவுகளையே காட்டும்.

காசநோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகின்றது?

சரியான சிகிச்சை அளிக்கப்படுமாயின் காசநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். வெளியால் மூடப்பட்ட ஒரு செல் என அழைக்கப்படும் கொழுப்பு நிறைந்த பொருளைக்கொண்டுள்ள காசநோய் பக்டீரியா மெதுவாகத் தன்னைப் பெருக்கிக்கொள்ளும். நமது நோயெதிர்ப்பு அமைப்பிடமிருந்து பக்டீரியாக்களை தப்ப வைப்பதற்காக இந்தப் பொருள் செயல்படுகின்றது. அத்துடன் இது மருத்துவத்தின் மூலம் அழிக்கப்படுவதை, மரபணு மாற்றத்தினால் தவிர்த்துக் கொள்ளக்கூடியது. பெரும்பான்மையான பக்டீரியாக்களை அழித்து நோய் முற்றாகக் குணமடைய 6 - 8 மாதங்கள் வரை தேவைப்படும். எனவே தேவைப்படின் நாம் மிக நீண்ட காலத்திற்கு பல்வேறு வகையான மருந்துகளைப் பாவிக்க வேண்டியிருக்கும்.

டொட் (DOT) அல்லது நேரடியான கவனிப்பின் மூலம் சிகிச்சையளிப்பது குணமடைவதற்கு சாதகமாக அமையும் என ஆலோசனை வழங்கப்படுகின்றது. டொட் என்பது காசநோய் மருந்தெடுக்கும் ஒரு நோயாளி சுகாதார சேவை வழங்குநர்களால் நேரடியாகக் கவனிக்கப்படும், ஒரு மருத்துவப் பராமரிப்பு முறையாகும். இதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நோயாளி சரியான கால எல்லைக்குள், சரியான நேரத்திற்கு, சரியான அளவு எடுக்கிறாரா என்பது சுகாதார சேவை வழங்குநர்களால் உறுதிப்படுத்தப்படும்.

சில வகையான மருந்துவத்தின்போது காசநோய் அதை எதிர்த்து நிற்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில்  காசநோய் பக்டீரியாக்களின் எதிர்ப்பு வளர்ந்துள்ள நிலையில் நோயைக் குணமாக்க மேலதிகமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். அதன்படி நோயாளிக்கு இரண்டு வருடங்களுக்கு மேல், பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சக்தி மிக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறான சிகிச்சைகளின் பின்னரும் கூட 50 வீதமான நோயாளிகளுக்கு சிகிச்சை பலனளிக்காது போகலாம்.

குரல்வளை அலட்சி

குரல்வளை அலட்சி என்பது, குரல்வளையில் ஏற்படும் தொற்றின் காரணமாக, குரல் கரகரப்பானதாகவும், பேசுவதற்குக் கஷ்டமாகவும் இருக்கும் நிலைமையைக் குறிக்கும். குரல்வளையானது உங்கள் தொண்டையின் முன்பகுதியிலும் சுவாசக்குழாயின் மேல் பகுதியிலும் அமைந்துள்ளதுடன் குரல் நாண்களைக் கொண்டுள்ளது. காற்று குரல்நாண் வழியைக் கடந்து செல்லும்போது குரல் நாண் அதிர்ந்து ஒலியை ஏற்படுத்துகின்றது. இவ்வாறுதான் நீங்கள் பேசுகின்றீர்கள். குரல்வளை தொற்றுக்கு உள்ளாகும்போது உங்கள் குரல்நாண் வீக்கமடைகின்றது. இதனால் அதற்கு சரியாக அதிர்வை ஏற்படுத்தமுடியாமல் போவதுடன் உங்கள் குரல் பாதிப்படையக் காரணமாகின்றது.

பெரன்டின்ஜிடிஸ் (தொண்டைப் புண்)

தொண்டைப் புண்ணிற்கான பொதுவான அறிகுறிகள்:

  • தொண்டை வலி காரணமாக உங்கள் தொண்டையின் உட்புறம் சிவப்பாகுதல், வீக்கம் மற்றும் விழுங்கும்போது வலி ஏற்படும். 
  • உங்கள் தொண்டையின் உட்புறம் உள்ள சுரப்பி (சிறுநாக்கு) வீங்கிச் சிவந்திருத்தல்.
  • உங்கள் கழுத்தில் நிணநீர் கணுக்கள் வீங்குதல்.
  • உங்கள் காது அல்லது கழுத்தில் வலி ஏற்படல்.

தடிமன் அல்லது வைரஸ் காய்ச்சல் காரணமாக உங்களுக்கு தொண்டைப்புண் ஏற்பட்டிருப்பின் பின்வரும் தடிமன் அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தோன்றும்:

  • காய்ச்சல் (38.5°C அளவு அல்லது அதற்கு மேல்)
  • தலைவலி
  • மூக்கு ஒழுகுதல்
  • இருமல்
  • களைப்பு
  • தசைகள் மற்றும் மூட்டுக்களில் வலி
FaLang translation system by Faboba