சிகரட் புகைக்க நினைக்கும் அனைவரும் தங்களை வளர்ந்தவர்களாகவே கருதுகின்றனர். மேலும் அது பழகுவதற்கு ஒரு கவர்ச்சியான பழக்கம் என நினைக்கின்றனர். சிகரட் பற்றி சிந்திப்பதற்கு முன் ஒரு சிகரட்டில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

சிகரட் என்றதும் நிக்கொட்டின்தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் சிகரட்டில் ஒரு போதைப்பொருள் இருப்பது பலருக்கும் தெரியாது. அதனால் தான் புகைபிடிப்பவர்கள் தொடர்ந்து தாங்கள் புகைக்கும் சிகரட்டின் தொகையை தொடர்ந்து அதிகரிக்கின்றார்கள். காலப்போக்கில் அதற்கு அடிமையாகி தமது ஆரோக்கியத்தை இழக்கின்றனர்.

சிறிய அளவான நிக்கொட்டின் அவர்களின் மூளை ஊக்கியாக செயற்பட்டாலும் பெரிய அளவான நிக்கொட்டின் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இது நரம்பு செல்களுக்கிடையிலான சமிக்ஞைகளை தடுப்பதுடன் இதயத்தில், இரத்த நாளங்களில் மற்றும் ஹோர்மோன்களில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தில் உள்ள நிக்கொட்டின் புகைபிடிப்பவரை அமைதிபடுத்துவது போல் தோன்றினாலும் அது உள்ளுறுப்புகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உங்களுக்குத் தெரியுமா.... ஒரு சிகரட்டின் புகையில் 4000 இரசாயனங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 43 வகையானவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை (கார்சினோஜெனிக்) என கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு 400 பிற நச்சுக் கலவைகளும் அடங்கியுள்ளன. இதோ அவற்றில் சில:

  • தார் - இது புகையிலைப் புகையில் அடங்கியுள்ள பல்வேறு துகள்களின் கூட்டுச்சேர்வாகும். இதில் (கார்சினோஜெனிக்) உட்பட புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு இரசாயனப் பொருட்கள் அடங்கியுள்ளன. தார் என்பது ஒட்டக்கூடிய, பழுப்பு நிறமான கரையாகும், இது பற்கள், விரல் நகங்கள், நுரையீரல் ஆகியவற்றில் படிந்துவிடும். தாரில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் carcinogen benzopyreneஉம் அடங்கியுள்ளது.
  • கார்பன் மொனொக்சைட் - இந்த மணமற்ற வாயுவானது பெரிய அளவில் ஆபத்தை உண்டுபண்ணக்கூடியது. ஏனெனில் இது இரத்தத்தில் ஒக்சிஜனுக்கு பதிலாக இடம்பிடிக்கிறது. ஓவ்வொரு இரத்த அணுக்களிலும் hemoglobin என அழைக்கப்படும் புரதச்சத்து அடங்கியுள்ளது. இதுவே உடல் முழுவதற்கும் ஒக்சிஜன் மூலக்கூறுகளை கொண்டு செல்கிறது.
  • எவ்வாறாயினும் கார்பன் மொனொக்சைட் ஒக்ஸிஜனைவிட சிறப்பாக ஹீமோகுளோபினைக் கட்டுப்படுத்திவைக்கிறது. இதனால் உடல்  தனக்குத் தேவையான ஒக்ஸிஜனை எடுத்துச் செல்ல மேலதிக சிவப்பு இரத்த அணுக்களை தயாரிக்கிறது, இதனால் இரத்தம் கணமாகிறது. இதன் காரணமாக உடற்பயிற்சியின்போது உடல் தனது செயற்பாட்டிற்காக அதிகளவு இரத்தத்தைக் கோருகின்றது. இதனால் மூளைக்கு, இதயத்திற்கு, தசைகளுக்கு, ஏனைய உறுப்புக்களுக்கு குறைந்த அளவு இரத்தமே செல்கிறது.
  • ஹைட்ரோஜென் சயனைட் - நுரையீரலில் நுண்ணிய பிசிர்முனைப்புகள் (cilia) உள்ளன. இப் பிசிர்முனைப்புகள் வெளியிலிருந்து வரும் பொருட்களை அகற்றி நுரையீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன. நுரையீரலை சுத்தப்படுத்தும் இச்செயற்பாட்டை முறையாக செய்யவிடாமல் ஹைட்ரோஜென் சயனைட் அதனை தடுத்து நிறுத்துகின்றது. இதன் மூலம் புகையிலையில் உள்ள இந்த நச்சுத்தன்மையுள்ள இரசாயனப் பொருள் நுரையீரலின் உள்ளே தன்னை வளர்த்துக்கொள்கிறது. புகையில் உள்ள ஏனைய இரசாயனங்களான ஹைட்ரோகார்பன்கள், நைட்ரொஸ் ஒக்சைட்ஸ்கள், கரிம அசிட்கள், பீனால்கள் மற்றும் ஒக்ஸிடைசிங் ஏஜென்ட்ஸ் போன்றவையும் நுரையீரலை சேதப்படுத்துகின்றன.
  • ஓக்ஸிடைசிங் கெமிக்கல்ஸ் (ஒக்ஸிஜனேற்றப்பட்ட இரசாயனங்கள்) இவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் ஆகும். இருதய தசைகளையும் இரத்த நாளங்களையும் இவை சேதப்படுத்துகின்றன. கொலஸ்ட்ரோலுடன் இணைந்து நாடி சுவர்களில் கொழுப்புப் பொருட்களை படியச் செய்கின்றன. இவற்றின் செயற்பாடுகள் இருதய நோய், பக்கவாதம் மற்றும் இரத்தநாள நோய்கள் ஏற்பட வழிவகுக்கின்றன.
  • உலோகங்கள் - புகையிலைப் புகையில் ஆபத்தான உலோகங்களான ஆர்செனிக், கட்மியம் மற்றும் ஈயம் போன்றவை அடங்கியுள்ளன. இவ் உலோகங்களில் பல புற்றுநோயை உண்டாக்கக்கூடியவையாகும்.
  • கதிரியக்க கலவைகள் - புகையிலைப் புகையில் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என அறியப்படும் கதிரியக்க கலவைகள் அடங்கியுள்ளன.

சிகரட் புகைத்தல் என்ற வகையில் ஒரு தொகையான தார் நுரையீரலுக்குள் உள்ளிழுக்கப்படுகின்றது. அத்துடன் முதலாவது புகை இழுத்தலைவிட இறுதி இழுத்தலில் இரண்டு மடங்கு அதிகமான தார் அடங்கியுள்ளது என்பதை  நீங்கள் அறிந்திருக்கவேண்டும். சிகரட் புகைத்தலின்போது உள்ளிழுக்கப்படும் புகையில் அடங்கியுள்ள இரசாயனங்களில் அதிகமானவை நுரையீரலில் தங்கிவிடுகின்றன. அதாவது, நீங்கள் எந்தளவு புகையை உள்வாங்குகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் நுரையீரல் சேதமாகிறது என்பதே அதன் பொருளாகும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் இருந்து நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில், புகைப்பிடித்தல் உங்கள் உடலில் எல்லா உறுப்புகளையும் பாதிக்கின்றது. ஆகையால் காலம் தாழ்த்தாது ஒரு முடிவினை எடுங்கள். நீங்கள் நினைத்தால் இப்பொழுதும் புகைபிடித்தலை நிறுத்தமுடியும்.

உங்களுக்குத் தெரியுமா, 2014 ஆம் ஆண்டு 6 டிரில்லியனுக்கும் அதிகமான மக்கள் (6,000,000,000,000) சிகரட் புகைத்துள்ளனர். நாம் தொடர்ந்து சிகரட் புகைப்பதால், புகையிலை தொழிற்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களில் பாதியளவு பேரை இழக்கின்றனர். நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஏனைய ஆபத்துமிக்க சுவாச கோளாறுகளால் வாடிக்கையாளர்கள் இறப்பதே இதற்குக் காரணமாகும். இதனால் அவர்கள் தொடர்ந்து தங்களது வியாபாரத்தை நடத்திச்செல்ல புதிய தலைமுறையினரை (இளைஞர், யுவதிகளை)  இப் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்கக் கடுமையாக உழைக்கின்றனர்.

இதனாலேயே அவர்கள் சிகரட் புகைப்பதை ஒரு களிப்பூட்டும் விடயமாகக் காட்டுகின்றனர். அத்துடன் அவர்கள் சின்னத்துடனான கதாபாத்திரங்களை உருவாக்குகின்றனர். மார்ல்பெரோ மனிதனை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா அவர் கூட நுரையீரல் புற்றுநோயாலேயே தனது 51வது வயதில் மரணமடைந்தார். அவரது கடைசி வார்த்தை இன்னமும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது - “ உங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். புகையிலை அவர்களைக் கொன்றுவிடும். நான்தான் அதற்கொரு வாழும் சான்று ” என்று கூறியிருந்தார்.

  • புகைபிடிக்கும் அனைவரும் இறப்பது சிகரட் தொடர்பான ஆரோக்கிய பிரச்சினைகளால்தான்.
  • 80% ஆன புகைபிடிப்பவர்கள் அப் பழக்கத்தை தமது இளம் வயதிலேயே ஆரம்பிக்கின்றனர்.
  • ஒவ்வொரு வருடமும் புகைபிடிப்பதற்கு இளைஞர்களைக் கவர்வதற்காக €635 மில்லியன் பணத்தை விளம்பரங்களுக்காக செலவு செய்கின்றனர். அதற்கான முதல்படி திரைப்படங்கள் மூலமாகவே ஆரம்பிக்கின்றது.
  • இலங்கையில், 2014 ஆம் ஆண்டு புகையிலைக்கு விதிக்கப்பட்ட வரியாக 73.6 பில்லியன் ரூபாவை அரசாங்கம் சம்பாதித்துள்ளது.

புகைபிடித்தலானது உங்கள் உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அது எவ்வாறு உங்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கிறது என்பதை இப் பகுதியில் பார்ப்போம்.

புகைபிடித்தல் சுவாச அமைப்பை எவ்வாறு பாதிக்கிறது

  • தொண்டை மற்றும் சுவாசக்குழாய் எரிச்சல்
  • நுரையீரலுக்கான காற்று வழிகள் குறுகுவது மற்றும் வீக்கம் காரணமாக மூச்செடுத்தலில் சிரமம் ஏற்படுவதுடன் நுரையீரல் பாதிப்புக்களும் ஏற்படும்.
  • நுரையீரலின், சுத்தப்படுத்தும் அமைப்பு பழுதாகும்போது நச்சுப் பொருட்கள் சேர்ந்து நுரையீரல் சேதமடைவதற்குக் காரணமாகிறது.
  • நுரையீரல் தொற்றுக்கான ஆபத்து அதிகரிக்கும்போது இருமல் மற்றும் மூச்சுத்திணரல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  • நுரையீரல் காற்றுப்பைகளில் நிரந்தர சேதம் ஏற்படல்.

புகைபிடித்தலினால் இரத்தச் சுற்றோட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள்

  • இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அதிகரிப்பு ஏற்படும்.
  • இரத்த நாள தோலின் ஒடுக்கத்தால் (இறுக்கமடைவதால்) தோலின் வெப்பநிலை குறைவடைதல்.
  • உடற்பயிற்சியின்போது இரத்தத்தால் குறைவான ஒக்ஸிஜன் கொண்டு செல்லப்படுதல்.
  • ஒட்டும் தன்மையுடைய இரத்தம் உருவாதல்.
  • நாடிக் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படுவதுடன் நாடிகளின் சுவர்களில் அதிகளவு கொழுப்புப்படியக் காரணமாக அமைகின்றது.
  • கை மற்றும் கால் விரல்களுக்காக இரத்த ஓட்டம் குறைவடைதல்.
  • இரத்தச் சுற்றோட்டத்தில் தடைகள் ஏற்படுவதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கின்றது.

புகைத்தலால் நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்

  • மிகப்பெரிய தொற்றுக்களான நியுமோனியா மற்றும் இன்புளுவென்சா காய்ச்சல் ஏற்படலாம்.
  • நீண்ட கால கடுமையான நோய்கள் ஏற்படலாம்
  • இரத்தத்தில் பாதுகாப்பு ஒக்ஸினேற்றிகளின் (விட்டமின் C  போன்றவை) அளவு குறைதல்

புகைத்தலால் தசை நார்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

  • சில தசைகளில் ஏற்படும் இறுக்கம்
  • எலும்பு அடர்த்தி குறைவடைதல்

புகைத்தலால் ஒரு ஆணின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள்

  • குறைந்த விந்துக்களின் எண்ணிக்கை
  • சிதைக்கப்பட்ட விந்துக்களின் வீதம் அதிகரிப்பு
  • விந்துக்களில் மரபணு சேதம்
  • புகைத்தலால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆண்குறியிலுள்ள இரத்த நாளங்களும் பாதிக்கப்படுவதால் அது ஆண்மையின்மைக்கு காரணமாக அமைகிறது.

புகைத்தலால் ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள்

  • கருவளம் குறைதல்
  • மாதவிடாய் சுழற்சியில் முறைகேடு மற்றும் மாதவிடாய் ஏற்படாமை.
  • இறுதிமாதவிடாய் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னராகவே வந்துவிடல்.
  • கர்ப்ப வாசல் புற்று நோய்க்கான ஆபத்து அதிகரித்தல்.
  • 35 வயதுக்கு மேல் புகைபிடிக்கும் ஒருவர் வாய் மூலம் கருத்தடை மாத்திரை எடுப்பவராயின் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

புகைத்தலால் உடலில் ஏற்படும் ஏனைய பாதிப்புக்கள்

  • வயிறு மற்றும் குடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம்
  • உணவு செரிமாண பாதையில் வலி மிகுந்த புண்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்
  • வாசனை மற்றும் சுவையுணர்வு குறைதல்
  • அகால தோல் சுருக்கம்
  • கண் குருடாகும் ஆபத்து அதிகம்
  • ஈறு நோய்கள் ஏற்படுதல் (periodontitis)

நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பினால் நிச்சயமாக அதை உங்களால் செய்யமுடியும். பின்வரும் ஏதாவது ஒரு வழியின் மூலம் தேவையான உதவிகளை நீங்கள் பெறலாம்.

  • உங்கள் வைத்தியர்
  • உள்ளுர் சுகாதாரசேவை நிலையம்
  • உங்கள் ஆசிரியர் அல்லது மாணவ ஆலோசகர்
  • அல்லது தேசிய Quit line என்ற அமைப்பிற்கு 1948 என்ற இலக்கத்தில் அழைப்பதன் மூலம் அநாமதேய ஆலோசகர் ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தத் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் உங்களுக்கு வழங்குவார். அத்துடன் உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு உங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வார்.
FaLang translation system by Faboba